நபிகளாரின் வழிகாட்டல் ()

அஹ்மத் பின் உத்மான் அல் மசீத்

 

சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.

|

 நபிகளாரின் வழிகாட்டல்

هدي محمد صلى الله عليه وسلم في عبادته ومعاملاته وأخلاقه

அன்றாட வாழ்வில் நபிகளாரின் வழிகாட்டல்

நூலாசிரியர்

அஹ்மத் பின் உத்மான் அல் மசீத்

மொழி பெயர்த்தவர்

ஸெய்யித்​ இஸ்மாயீல் இமாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்

அல்லாஹ்வின்  அருளும் சாந்தியும் ரஸூல் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார் மற்றும் தோழர்கள் மீதும் உண்டாவதாக.

     அல்லாஹ் நம்மீது சொரிந்துள்ள  அருட் கொடைகளில் எல்லாம், அவன் நமக்குத் தந்துள்ள இஸ்லாம் மார்க்கமே மிகப் பெரிய அருட் கொடையாகும். ஏனெனில் இதுதான் இயற்கை யானதும், நடு நிலையானதும், அனைத்தையும் உள்ளடக்கியதுமான மார்க்கம். மேலும் அறிவையும் நல்லொழுக்கதையும் உள்ளடக்கிய மார்க்கமும், எல்லா காலத்துக்கும், இடத்துக்கும் பொருத்தமான மார்க்கமும் இதுதான். அத்துடன் இலகுவான அருள் நிறைந்த மார்க்கமும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும் மார்க்கமும் இது வொன்றுதான்.

     ஆகையால் இன்றைய யுகத்தில் இஸ்லாம் மார்க்கத்தின் தெளிவான தோற்றத்தையும், அதன் சிறப்புக்ளையும்,  அனுகூலங்ளையும் பற்றி எடுத்துக் காட்டுவது ​காலத்தின் தேவையாகும். மேலும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் யாவும், இஸ்லாம் மார்க்கத்தின் செயல் வடிவமாக திகழ்கின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில் நபிகளாரின் வழிகாட்டலில், அமுல் படுத்த இலகுவான இஸ்லாத்தின் சகல சிறப்பம்சங்ளும் பொதிந்துள்ளன. அதாவது நபியின் வழிகாட்டல் பொருள் முதல் வாதத்துடனும், ஆத்மீகத்துடனும் சம்பந்தப்பட்ட வணக்க வழிபாடுகள், கொடுக்கள் வாங்கல் நடவடிக்கைள், மற்றும் நல்லொழுக்கம் உள்ளிட்ட  அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாகும்.

எனவே ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் பற்றிய சிறந்த நூல்களில் ஒன்றான,  زاد المعاد في هدي خير العباد என்ற இமாம் இப்னுல்கையிம் (ரஹ்) அவர்களின் ​ நூலில் இருந்து இந்நுலை நான் வடித்தெடுத்துள்ளேன்.  நபியவர்களின் வாழ்வின் சகல அம்சங்களிலுமுள்ள வழிகாட்டல்களையும் நாம் எடுத்துப் பின்பற்றவும், அதன்படி நாம் செயல் படவும் ஏதுவாக இது அமைந்துள்ளது.

இவ்விடயத்தில் நமக்குத் தூய எண்ணத்தைத் தந்து, அருள் பாளிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்.                                                 டாக்டர்  அஹ்மத் பின் அல் மஸீத்

 ​சுத்தம் மற்றும் மலசல கழிப்பின் ஒழுங்குகள்

1-  நபி (ஸல்) அவர்கள் கழிவிடத்தில் பிரவேசிக்கும் போது,

اللهم إني أعوذ بك من الخبث والخبائث

اللهم إني أعوذ بك من الخبث والخبائث

அல்லாஹ்வே! கெட்ட ஷைத்தான்களின் தீமைகளை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்  என்றும், அங்கிருந்து வெளியே வரும் போது, غفرانك அல்லாஹ்வே! உனது மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் சொல்வார்கள்.

1-   ரஸூல் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் அமர்ந்த வாரே சிறுநீர் கழிப்பார்கள்.

2-   அன்னார் தங்களின் தேவையைப் பூர்த்தி செய்த  பின்னர் சில வேளை தண்ணீரைக் கொண்டும், சில வேளை கற்களைக் கொண்டும் சுத்தம் செய்து கொள்வார்கள்.

    இன்னும் சில வேளை இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து       சுத்தம் செய்து கொள்வார்கள்.

3-   நபியவர்கள் சுத்தம் செய்யும் போது தங்களின் இடது கையால் சுத்தம் செய்வார்கள்.

4-   தண்ணீர் கொண்டு அன்னார் சுத்தம் செய்ததும், அதன் பின்னர் தங்களின் கையை​ நிலத்தில் அடித்துத் தேய்த்துக் கொள்வார்கள்.

5-   நபியவர்கள் பிரயாணத்திலிருக்கும் வேளையில் தங்களின் தேவையை நிறைவேற்றச் செல்லும் போது தங்களின் தோழர்களை விட்டும் மறைந்து கொள்வார்கள்.

6-   சில வேளை தன் இலக்கின் இறுதி வரை சென்றும், சில வேளை ஈத்த மரப் பத்தைகளின் இடையில், இன்னும் சில வேளை ஓடையின் மரங்களுக்கிடையில் மறைந்து கொள்வார்கள்.

7-   சிறு நீர் கழிப்பதற்காக மிருதுவான பூமியை நாடிச் செல்வார்கள்.

8-   தன் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அமரும் வேளையில் நிலத்திற்குச் சமீபமாகும் வரையில் தனது ஆடையை உயர்த்த மாட்டார்கள்.

9-   நபியவர்கள் சிறு நீர் கழிக்கும் வேளையில் அன்னாருக்கு யாரேனும் ஸலாம் சொன்னால் அன்னல் நபியவர்கள் பதில் ஸலாம் சொல்ல மாட்டார்கள்

 ரஸூல் (ஸல்) அவர்களின் வுழூஃ

1-  ரஸூல் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு​ தொழுகைக்கும் வெவ்வேறாக  வுழூஃ செய்து கொள்வார்கள். சில வேளை பல தொழுகைகளை ​ஒரே வுழூவைக் கொண்டு  நிறைவேற்றிக் கொள்வார்கள்.  

2-  நபியவர்கள் சில வேளை இரண்டு கைகள் நிறைவான ஒரு அள்ளு தண்ணீரைக் கொண்டும், இன்னும் சில வேளை அதன் மூன்றில் இரண்டு பாகம் அளவு கொண்ட தண்ணீரைக் கொண்டும், வேறு சில நேரங்களில் அதை விடவும் அதிகமான தண்ணீரைக் கொண்டும் வுழூஃ செய்து கொள்வார்கள்.

3-  குறைந்த அளவு தண்ணீர் உபயோகித்து வுழூவு செய்து கொள்ளும் ஒரு மனிதராக ரஸூல் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். மேலும் வுழூவின் போது ஏற்படும்  தண்ணீர் விரயம் பற்றி தன் சமூகத்தினரை எச்சரிக்கையும் செய்தார்கள்.

4-  நபியவர்கள் வுழூவின் உருப்புக்களை ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் அல்லது  மூன்று தடவைகள் தண்ணீர் ஊற்றி வுழூஃ செய்து கொள்வார்கள். சில வேளை சில உருப்புக்களை இரண்டு தடவைகளும் இன்னும் சில உருப்புக்களை மூன்று தடவைகளும் கழுவிக் கொள்வார்கள். ஒரு போதும் மூன்று தடவைகளுக்கு அதிகமாக அன்னார் கழுவிக் கொண்டதில்லை. 

5-  நபியவர்கள் சில வேளை ஒரு உள்ளங் கை அளவு தண்ணீரையும், இன்னும் சில வேளை இரண்டு உள்ளங் கை அளவு தண்ணீரையும் மற்றும் சில வேளை மூன்று உள்ளங் கை  அளவு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தலையும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்வார்கள்.

6-  நபியவர்கள் வலது கையால் நாசிக்குத் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூக்கை உரிஞ்சி விடுவார்கள்.

7-  வுழூஃவின் போது வாய் கொப்பளிக்கவும், நாசிக்குத் தண்ணீர் செலுத்தவும் தவற மாட்டார்கள்.

8-  தலை​​ முழுவதையும் மஸ்ஹு செய்து கொள்ளும் ரஸூல் (ஸல்) அவர்கள் தன் கைகளை தலைக்கு முன்னும் பின்னும் ஒரு தடவை  கொண்டு செல்வார்கள்.

9-  நபியவர்கள் நெற்றி முடியின் மீது மஸ்ஹு செய்யும் போது தலைப்பாகையின் மேலாலும் மஸ்ஹு செய்து மஸ்ஹைப் பூரணப்படுத்திக் கொள்வார்கள்.

10-     தலையை மஸ்ஹு செய்யும் போது,  அதனுடன் இரு காதுகளையும் சேர்த்து மஸ்ஹு செய்துக் கொள்வார்கள், அவ்வமயம் அதன் உள்ளேயும், புறத்தையும் ​மஸ்ஹு செய்து கொள்வார்கள்.

11-     பூட்ஸ் அணிந்து கொள்ளாத போது இரண்டு கால்களையும் கழுவிக் கொள்வார்கள்.

12-     வுழூவை வரிசை கிரமமாக இடைவிடாது தொடர்ச்சியாக செய்து முடிப்பார்கள்.

13-     வுழூவை பிஸ்மியை கொண்டு  துவங்கும் நபியவர்கள் வுழூஃ செய்து முடிந்ததும்,

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ،سُبْحَانَكَ اللهُمَّ، وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ،

   “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை யன்றி எதுவுமில்லை. அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும், தூதருமாவார் என்றும் சாட்சி பகர்கின்றேன். அல்லாஹ்வே!  நீ தூய்மையான வன், நீயே புகழுக்குரியவன். வணக்கத்திற்குத் தகுதியானவன்​ உன்னையன்றி எதுவுமில்லை. உன்னிடம் பாவ மன்னிப்புக் கோரி உன் பக்கம் திரும்புகிறேன்.” என்று ஓதுவார்கள்.                 

14- வுழூவை துவங்கும் போது தொடக்கை அகற்றிக் கொள்ளுமுகமாக நிய்யத்து வைத்துக் கொண்டேன், அல்லது தொழுகை அங்கீகரிக்கப் படுவதற்காக நிய்யத் வைத்துக் கொண்டேன் என்று தங்களின் வாயால் நபியவர்களும் அன்னாரின் தோழர்களும்   ஒரு போதும்    சொன்னதில்லை.

15- முழங்கை,  மற்றும் கரண்டைக்கால் விடயத்தில் நபிகளார் எல்லை மீறியதில்லை.

16- வுழூஃ செய்த பின்னர் தங்களின் உருப்புக்களைத் துடைத்துக் கொள்ளும் வழக்கம் ரஸூல் (ஸல்) அவர்களிடம் இருந்தில்லை.

17- சில வேளை தங்களின் தாடியை நபியவர்கள் கோதி விடுவார்கள், எனினும் வழமையாக அப்படிச் செய்ததில்லை.

18- தங்களின் விரல்களைக் கோதி வந்த அன்னார் அதனையும் எப்போதும் பேணி வரவில்லை.

19- தான் வுழூஃ  செய்யும் போதெல்லாம் யாரேனும் தனக்குத் தண்ணீர் ஊற்றிவிடும் பழக்கம் நபிகளாரின் வழிகாட்டலாக இருந்ததில்லை. எனினும் அவசியம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மாத்திரம் சிலர் அன்னாருக்குத் தண்ணீர் ஊற்றி உதவியுள்ளனர். எனினும் தாங்கனாகவே தண்ணீர் ஊற்றி வுழூஃ செய்து கொள்வதே ரஸூல் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.

 பூட்ஸ் மேல் மஸ்ஹு செய்தல்

1- நபியவர்கள்  ஊரில் இருக்கும் போதும், பிரயாணத்தில் இருக்கும் போதும் தங்களின் பூட்ஸ் மேல் மஸ்ஹு செய்துள்ளார்கள். மேலும்  ஊரிலிருக்கும் ஒருவர், ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்த ஒரு தினமும், ஒரு பிரயாணி  பகலும்  இரவும்  சேர்ந்த மூன்று தினங்களும் தங்களின் பூட்ஸ் மேல் மஸ்ஹு செய்து கொள்ள நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.

2- நபியவர்கள் பூட்ஸ் மீது மஸ்ஹு செய்யுமிடத்து அதன் மேல் பக்கத்தில் தண்ணீரைத் தடவிக் கொள்வார்கள். மேலும் தலையை மஸ்ஹு​ செய்யும் போது நெற்றி முடியை  மஸ்ஹு செய்து கொள்வதுடன் தலைப்பாகையின் மீதும் மஸ்ஹு செய்து கொள்வார்கள்.

3- ரஸூல் (ஸல்) அவர்கள்  பூட்ஸ் அணிந்திருக்கும் வேளையில் அதன் மேல் மஸ்ஹு செய்து கொள்வார்கள், அல்லாத சந்தர்ப்பத்தில் தங்களின் காலைக் கழுவிக் கொள்வார்கள். ஒரு போதும் இதற்கு மாறாக அன்னார் செயற்பட்டதில்லை.

தயம்மம் செய்யும் போது

1- ரஸூல் (ஸல்)  அவர்கள் தான் தொழும் பூமியின் மேலிருக்கும் மண் அல்லது கூலாங் கல் அல்லது மணல் எதையேனும் கொண்டு தயம்மம் செய்து கொள்வார்கள். மேலும் “என் உம்மத்தைச் சேர்ந்த ஒருவர் எங்கேயேனும் இருக்கும் போது அன்னவரை தொழுகையின் நேரம் வந்தடைந்தால், அதுவே அவரின் தொழுகையின் இடம். மேலும் அதுவே அவர் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளும் பொருளுமாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள். 

2- நீண்ட பிரயாணத்தின் போது தயம்மம் செய்து கொள்வதற்காக நபியவர்கள் மண் எதையும் எடுத்துச் சென்றதில்லை. அப்படி எவருக்கும் கட்டளை பிறப்பிக்கவும் இல்லை.

3- நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கா கவும் தயம்மம் செய்து கொண்டார்கள் என்பதற்கோ, அப்படி கட்டளைளயிட்டார்கள் என்பதற்கோ ஆதாரம் எதுவும் காணப்பட வில்லை. எனினும் அன்னார் பொதுவாக தயம்மமை வுழூவின் தானத்திலேயே  வைத்தார்கள்.

4- நபியவர்கள் முகத்திற்கும், இரண்டு கைகளுக்குமாக ​மண் மீது ஒரு தடவையே கையைத் தட்டிக்கொண்டார்கள்.

தொழும் போது

a.  ​தொழுகையை ஆரம்பித்தலும், ஓதல்களும்

1- நபியவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றதும் ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்வார்கள். அதற்கு முன்னர் வேறெதுவும் அன்னார் ஓதியதில்லை. மேலும் ஒரு போதும் நிய்யத்தை வாயால் மொழிந்ததில்லை.

2- அப்பொழுது முதலில் இரு கைகளையும் அதன் விரல்களையும் உயர்த்தி, இரண்டு காதுகளுக்கும் புயங்களுக்கும் நேராகவும், கிப்லா திசைக்கு நேராகவும் ​வைத்துக் கொள்வார்கள். பின்னர் வலது கையை இடது கையின் மேலால் வைத்துக் கொள்வார்கள்.

3- நபியவர்கள் தொழுகையை ஆரம்பித்ததும் சில வேளை,

اللهم باعد بيني وبين خطاياي كماباعدت بين المشرق والمغرب، اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس،

“அல்லாஹ்வே! கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே  எட்ட முடியாத பெரும் தூரத்தை நீ எப்படி ஏற்படுத்தி இருக்கின்றாயோ, அதே போல்   எனக்கும் என் தவறுகளுக்குமிடையில் எட்ட முடயாத தூரத்தை ஏற்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே! என் தவறுகளை தண்ணீரைக் கொண்டும், பனியைக் கொண்டும், குளிர் நீரைக் கொண்டும் கழுகி விடுவாயாக. அல்லாஹ்வே! அழுக்குகளை விட்டும் வெண்ணிர ஆடை தூய்மைப் படுத்தப் படுவது போன்று என் பாவங்களை விட்டும் என்னைத் தூய்மையாக்கி வைப்பாயாக.” என்றும், இன்னும் சில வேளைகனில்,

وجّهت وجهي للّذي فطر السموات والأرض حنيفاً مسلما، وما أنا من المشركين، إنّ صلاتي ونسكي ومحياي ومماتي لله ربّ العالمين، لا شريك له وبذلك أمرت وأنا اول  المسلمين،

“நான் ஒரு தூய முஸ்லிமாக இருக்கும் நிலையில், விண்ணையும், மண்ணையும் படைத்த ஒருவனின் பக்கம், என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். எனது தொழுகையும், வணக்க வழிபாடுகளும் என் வாழ்வும், சாவும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு இணை எதுவும் இல்லை. அப்படியே​ எனக்கு கட்டளையயிடப்பட்டுள்ளது மேலும் நான் முஸ்லிம்களில் முதலாமவன்.” என்றும் ஓதுவார்கள்.

 4- அதன் பின் اعوذ بالله من الشيطان الرجيم  என்று கூறி விட்டு, அதனைத்   தெடர்ந்து  ஸூரத்துல் பாதிஹாவை ஓதுவார்கள்.

5-மேலும் நபியவர்கள் இரண்டு சந்தர்ப்பத்தில் மௌனமாக இருப்பார்கள். அவை தக்பீர் தஹ்ரீமாவுக்கும், ஸூரா பாதிஹா  ஓதுவதற்கு மிடையில் ஒரு தடவையும், இன்னொரு தடவை பாதிஹா ஸூரா ஓதிய பின்னருமாகும். இப்படி ஒரு ரிவாயத்திலும் இன்னொரு ரிவாயத்தில் நிலையிலிருந்து  றுகூவிற்குச் செல்ல முன்னர் எனவும் பதிவாகியுள்ளது.

6- ஸூரா பாதிஹா ஓதி முடிந்ததும் இன்னொரு ஸுராவை ஓத ஆரம்பிப்பார்கள். அதனை சில​ வேளை நீட்டி ஓதுவார்கள். சில வேளை பிரயாணம் போன்ற ஏதேனும் கருமம் வரும் போது அதனைக் சுறுக்கிக் கொள்வார்கள். எனினும் அனேகமாக, ஸூராக்களை நடு நிலை படுத்தி ஓதுவதே அதிகம்.

7- பஜ்ருத் தொழுகையின் போது அறுபது ஆயத்துக்கள் முதல் நூறு ஆயத்துக்கள் வரையில் ஓதுவார்கள். சில வேளைق  ஸூராவையும் சில வேளை ஸூரா ‘றூமையும், ஓதியிருக்கின்றார்கள். இன்னும் சில சந்தர்ப்பத்தில்,

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ

“சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும் போது” என்ற ஸூராவை ஓதுவார்கள். மேலும் சில வேளை இரண்டு ரக்ஆத்திலும்

 إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا

“பூமி பலமாக அசைக்கப்படும் போது” என்ற ஸூராவை ஓதுவார்கள்.  மேலும் பிரயாணத்தில் இருக்கும் போது குல் அஊது பிரப்பில் பலக், மற்றும் குல் அஊது பிரப்பின் நாஸ் ஆகிய இரண்டு ஸூராக்களையும் ஓதியிருக்கின்றார்கள். மேலும் ஒரு முறை ரஸூல் (ஸல்) அவர்கள் الْمُؤْمِنُونَ அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது மூஸா, ஹாரூன் (அலை) ஆகியோர் பற்றிய செய்தியுள்ள இடத்தை அடைந்ததும், அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. எனவே அன்னார் உடனே ருகூவுக்குச் சென்று விட்டார்கள்.​

8- வெள்ளிக் கிழமை  ஸுபுஹுத் தொழுகையில் أَلَم  ஸஜதா வையும் هَلْ أَتَىٰ عَلَى الْإِنسَانِ என்ற  ஸூராவையும் ஓதி வந்துள்ளார்கள்.

9  சில வேளை நபியவர்கள், ழுஹர் தொழுகையில் கிராஅத்தை நீட்டிக் கொள்வார்கள். மேலும் ழுஹர் தொழுகையில் கிராஅத்தை நீட்டியிருந்தால் அஸர் தொழுகையில் அதன் பாதி அளவும், மேலும் ழுஹரில் கிராஅத்தை சுறுக்கியிருந்தால் அதன்  பாதி அளவும் என இரண்டு நேரத்திலும் ஓத வேண்டியதை​ வரையரை செய்து கொள்வார்கள்.

10- மஃரிபுத் தொழுகையில் ஒரு முறை الطُّورِ ஸூராவையும் இன்னொரு தடவை الْمُرْسَلَاتِ ஸூராவையும் ஓதினார்கள்.

11- இஷாத் தொழுகையில் எவ்வளவு நேரம் ஓத வேண்டுமென்பதை முஆத் (ரழி) அவர்களுக்கு எடுத்துக் காட்டு முகமாக அதில்

 وَالتِّينِ -   وَالشَّمْسِ وَضُحَاهَا     -سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى  -وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ

போன்ற ஸூராக்களை நபியவர்கள் ஓதினார்கள். எனினும் இஷாவில் பகரா ஸூரா ஓதுவதை அன்னார் விரும்பவில்லை.

12- ஒரு ரக்ஆத்தில் ஒரு ஸூராவை பூரணமாக  ஓதுவது ரஸூல் (ஸல்) அவர்களின் வழி முறையில் ஒன்றாகும். மேலும் சில வேளை ஒரு ஸூராவை இரண்டு ரக்ஆத்திலும் ஓதி இருக்கின்றார்கள். இன்னும் சில வேளை ஸூராவின் ஆரம்பப் பகுதில் இருந்து ஓதியிருக்கின்றரார்கள். எனினும் ஸூராவின் கடைசியிலிருந்தும் அதன் நடுப் பகுதியிலிருந்தும் ஓதியதாகத் தெரியவில்லை. மேலும் நபில் தொழுகையில் ஒரு ரக்அத்தில் இரண்டு ஸூராக்களை ஓதியிருக்கின்றார்கள். எனினும் ஒரே ஸூராவை இரண்டு ரக்ஆத்திலும் ஓதியிருப்பது அரிது. மேலும் ஜும்ஆவிலும், இரண்டு பெருநாளிலும் தவிர வேறு தொழுகை எதிலும் எந்த வொரு ஸூராவையும் குறிப்பிட்டு அதனை ஓதும்படி  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதில்லை.

13- ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் பஜ்ருத் தொழுகையில் றுகூவுக்குப் பின்னர் குனூத் ஓதினார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஏனெனில் நபியவர்கள் இப்படி குனூத் ஓதியதற்கான காரணம், அப்போது அசம்பாவிதம் ஒன்று ஏற்பட்டிருந்ததுவே. எனவே பிரச்சினை நீங்கியதும் குனூத் ஓதுவதை நபியவர்கள் நிறுத்தி விட்டார்கள். ஆகையால்  குனூத் ஓதுவதானது பிரச்சினைளுடன் தொடர்பு பட்ட ஒன்றேயன்றி பஜ்ருத் தொழுகையுடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல.

நபிகளார் தொழுகையை நிறைவேற்றிய முறை

 1- எல்லாத் தொழுகையிலும் இரண்டாவது ரக்அத்தைப் பார்க்கிலும் முதலாவது ரக்அத்தை நீட்டிக் கொள்வார்கள்.

2- ஸூராவை ஓதி முடித்ததும், மூச்சு விட்டு அது திரும்பும் வரையிலான நேரம் வரையில் மௌனமாக இருப்பார்கள். பின்னர் இரு கைகளையும் உயர்த்தி ருகூவுக்குச் சென்ற வாறு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்வார்கள். பின்னர் தங்களின் உள்ளங் கைகளை தங்களின் முழங் கால்களின் மீது வைத்து அதனை பிடித்துக் கொள்வார்​கள். அவ்வமயம் தங்களின் கைகளை தங்களின் விலாக்களை விட்டும் தூரமாக்கிக் கொள்வார்கள். மேலும் தங்களின் முதுகை விரித்து, நீட்டி, சம நிலையில் வைத்துக் கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் தலையை உயர்த்திக் கொள்ளவுமட்டார்கள், தாழ்த்திக் கொள்ளவு மாட்டார்கள். எனினும் அதனை தங்களின் முதுகுக்கு நேராக வைத்துக் கொள்வார்கள்.

 3- மேலும் سبحان ربي العظيم என்று சொல்வார்கள். சில வேளை سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي என்றும், سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ المَلائِكَةِ والرُّوحِ என்றும் சொல்வார்கள்.

ருகூவிலும் ஸுஜூதிலும் பத்து தஸ்பீஹாத்துக்கள் சொல்லும் நேர அளவு தரித்திருப்பதுதான் ரஸூல் (ஸல்) அவர்களின் வழமை. சில வேலை, நிலையில் எவ்வளவு நேரம் தரித்து நிற்பார்களோ, அதே அளவு  ருகூவிலும் ஸுஜூதிலும் தரித்திரப்பார்கள். எனினும் சில வேளை இரவுத் தொழுகையில் மாத்திரமே இவ்வாறு தொழுவார்கள். பொதுவாக தொழுகையை உரிய முறையில் சரியாக நிறைவேற்றுவதே நபியவர்களின் நடைமுறை.      

سمع الله لمن حمده

என்று கூறிய வாறு தலையை உயர்த்துவார்கள். அப்போது இரண்டு கைகளையும் உயர்த்தி,  முள்ளந்தண்டை நிமிர்த்தி  கொள்வார்கள். ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போதும்​ அப்படியே செய்வாரகள். எனவேதான் “ருகூவிலும் ஸஜூதிலும் தன் முள்ளந்தண்டை நிமிர்த்திக் கொள்ளாத மனிதனின் தொழுகை திருப்திகரமான தல்ல” என்று​ ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் நபிகளார் நிலை​க்கு வந்ததும்

رَبَّنَا وَلَكَ الحَمْدُ

என்று சொல்வார்கள். சில வேளை

رَبَّنَا لَكَ الحَمْدُ

என்றும், இன்னும் சில வேளை

اللَّهُمَّ رَبَّنَا لك الحَمْدُ

என்றும் சொல்வார்கள்.

  6-  கடமையான இந்த இஃதிதாலின்  நிலையை, ருகூவின் அளவு நீட்டுவார்கள். அவ்வமயம்,    

اللهم ربنا ولك الحمد ملء السموات والأرض ، وملء مابينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد ، أحق ما قال العبد ، وكلنا لك عبد ، لا مانع لما أعطيت ولا معطي لمامنعت ، ولا ينفع ذا الجد منك الجد "

“எங்கள் இறைவனே! வானம் பூமிக்கு இடையேயும் அவை இரண்டிற்கும் இடையேயும்  நிறைவாக வுள்ள புகழ் யாவும் உனக்கே சொந்தம். மேலும் பாராட்டுக்கும் புகழுக்கும் உரியவனே! அதற்கு மேலாலும் இன்னும் எத்தனைப் பாரட்டுக்கள் உனக்கு வேண்டுமென்று நீ எண்ணியிருக் கின்றாயோ அதுவும் உனக்கே சொந்தம். இப்படி  உன் அடிமை கூறுதற்கு நீ மிகவும் தகுதியானவன். மேலும் நாம் அனைவருமே உன் அடிமைகள். ஆகையால் நீ கொடுத்ததை தடுக் கூடியவன் ஒருவனும் இலை. நீ தடை செய்து வைத்துள்ளதைத் யாரும் தரவும் இயலாது. மேலும் செல்வம் யாவும் உனக்குரியது. ஆகையால் ஈற்றில் பணக்காரனின் பணம் அவனுக்குப் பயன் தராது”.  என்று ஓதுவார்கள் 

7- பின்னர் தக்பீர் கூறியவாறு ஸஜூதில் விழுவார்கள். அவ்வமயம் முதலில்  முழங்கால் இரண்டையும் நிலத்தில் வைப்பார்கள். பின்னர் கைகள் இரண்டையும் வைப்பார்கள். அதன் பின்னர் நெற்றியையும் மூக்கையும் வைப்பார்கள்.  தங்களின் தலைப்பாகை சுற்றின் மீது ஸஜூது செய்யமாட்டார்கள் நெற்றியையும் மூக்கையும் நிலத்தில் வைத்தே ஸஜூது செய்வார்கள். நபியவர்கள் வெற்று நிலத்தின் மீது ஸுஜூது செய்வதே அதிகம்.  ஆயினும் தண்ணீர் மீதும் சகதி மீதும், ஈச்ச ஓலையால் வேயப்பட்ட விரிப்பு மற்றும் பாயின் மீதும், உரோமத்துடன் பதனிட்ட தோலின் மீதும் நபிகளார் ஸஜூது செய்திருக்கிறார்கள்.

8- ஸுஜூது செய்யும் சந்தர்ப்பத்தில் தங்களின் நெற்றியையும், கையையும் நிலத்தின் மீது அழுத்திக் கொள்வார்கள். மேலும் தங்களின் இரண்டு கைகளையும் விலாவை விட்டும் விலக்கிக் கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் அக்குள் பகுதியின் வெண்மை தெரியும் படி கைகளை தூரமாக்கிக் கொள்வார்கள்.

9- ஸுஜூதின் போது தங்களின் கையை இரண்டு புஜத்துக்கும், காதுக்கும் நேராக வைத்துக் கொள்வார்கள். மேலும் கால் விரல்களை கிப்லாவுக்கு நேராக வைத்து, தங்களின் உள்ளங் கைகளையும் விரல்களையும் விரித்து வைத்துக் கொள்வார்கள். மேலும் விரல்களை அதிகம் விரித்துக் கொள்ளாமலும், சேர்த்துக் கொள்ளா மலும் பார்த்துக் கொள்வார்கள்.

10-மேலும்  سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وبِحَمْدِكَ, اللَّهُمَّ اغْفِرْلِي

“இறைவா! உன்னைத் துதிக்கிறேன். நம் இரட்சகனே! உன்னைப் பாராட்டுகின்றேன். என்னை மன்னிப்பாயாக” என்றும்

سبوح قدّوس ربّ  الملائكة والرّوح

மலக்குகளினதும், ​ஜிப்ரீலினதும் இரட்சகனே!  நீ மேன்மையானவன், தூய்மையானவன்” ​என்றும் சொல்வார்கள்.

11-பின்னர் கைகளை உயர்த்தாமல் தக்பீர் கூறியவாறு தலையை உயர்த்துவார்கள். பின்னர் தங்களின் இடது பாதத்தை விரித்து அதன் மீது அமர்ந்து, வலது பாதத்தை நட்டிக் கொள்வார்கள். மேலும் தங்களின் கைகளை தொடைகளின் மேல் வைத்துக் கொள்வார்கள். அவ்வமயம் முழங் கைகளை தொடைகளின் மேலாலும் கைகளின் ஓரத்தை முழங்காலின் மேலாலும் வைத்துக் கொள்வார்கள். அத்துடன் இரண்டு விரல்களைப் பிடித்து அதனை ஒரு வட்டமாக ஆக்கி தங்களின் ஒரு விரலை உயர்த்தி அதனை அசைத்த வண்ணம் பிரார்த்தனை செய்வார்கள். மேலும், ​ 

      اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاجْبُرْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي

“அல்லாஹ்வே! என்னை மன்னித்து என் மீது அருள் புரிவாயாக. என் மூட்டுக்களைப் பலப்படுத்திடு வாயாக, மேலும் எனக்கு நேர்வழியைத் தந்து எனக்கு ஆகாரமும் தந்தருள்வாயாக” என்ற  துஆவையும் ஓதுவார்கள்.

12- நபியவர்கள் ஸுஜூதில் எவ்வளவு  நேரம் தரித்திருப்பார்களோ அவ்வளவு நேரம் இக்கடமையை நிறைவேற்றும்  போதும் தரித்திரப்பது அன்னாரின் ஒரு வழி  முறையாகும்.

13-பின்னர் நபியவர்கள் எழுந்து நிற்பார்கள். அப்போது தொழுகையினை ஆரம்பிக்கும் போது சற்று மௌனமாக இருந்தது போன்று மௌனம் சாதிக்க மாட்டார்கள். மாறாக உடனே ஓதத் துவங்குவார்கள். பின்னர் முதலாவது ரக்அத்தை போலவே இரண்டாவது ரக்அத்தையும் தொழுவார்கள். எனினும் முதல் ரக்அத்தில் செய்த மெளனம் காத்தல், துவக்க துஆ ஓதல், தக்பீர் தஹ்ரீமா  சொல்லுதல், அதிக நேரம் எடுத்தல் ஆகிய நான்கு கருமங்களையும் தவிர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் நபியவர்கள் முதலாவது ரக்அத்தை, இரண்டாவது ரக்அத்தை விடவும் நீட்டித் தொழுது வந்தார்கள். அன்னார் இப்படிச் செய்யக் காரணம் ஜமாஅத்தில் சேர வரும்  மஃமூமின் காலடி ஓசை ஓயும் வரையிலாக இருக்கலாம்,​

14- தஷஹ்ஹதுக்காக அதாவது அத்தஹிய்யாத்துக் காக ரஸூல் (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டதும் தங்களின் இடது கையை இடது தொடை மீதும், வலது கையை வலது தொடை மீதும் வைத்து ஆல் காட்டி விரலால் சாடை காட்டுவார்கள். அதனை உயர்த்தியோ, படுக்க வைத்தோ வைக்க மாட்டார்கள். எனினும் அதனை சற்றுத் தாழ்த்தி அசைத்துக் கொண்டிருப்பார்கள். அவ்வமயம் சின்ன விரலையும், அதனை அடுத்த விரலையும் மடித்துக் வைத்துக் கொண்டு நடு விரலையும், ​பெரு விரலையும் சேர்த்து அதனை வட்டமாக ஆக்கிக் கொள்வார்கள். மேலும் துஆவின் போது அதாவது ஸலவாத்து இப்ராஹீமிய்யா முடிந்ததும் ஆல் காட்டி விரலை உயர்த்தி அதனைப் பார்த்த வண்ணம் பிரார்த்தனை செய்வார்கள்.

15- இவ்வமர்வில் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது,

    التحيات لله والصلوات و الطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

“சகல மாட்சிமையும்,  தொழுகைகளும், நற் கிரியைகளும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும். நபிகளார் அவர்களே! உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியமும் உண்டாகட்டும். மேலும் நம்மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை யன்றி எதுவுமில்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை  எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன். மேலும் முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும், தூதருமாவார் என்றும் சாட்சி பர்கன்றேன்.”  

என்ற தஷஹ்ஹதுவை ஓதுவார்கள். மேலும் இதனை ​ஓதும் படி தன் தோ​ழர்களுக்கும்  கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறு முதலாவது அத்தஹிய்யாத்தை ரஸூல் (ஸல்) அவர்கள் சுருக்கமாக ஓதுவார்கள். பின்னர் தக்பீர் கூறிய வாறு தொடையின் மீது அழுத்தம் கொடுத்த வண்ணம்  தங்களின் காலின் முன் பகுதியையும்,  முட்டுக்காலையும் ஊன்றி  எழுந்து நிற்பார்கள். இச்சந்தர்ப்பத்தில் தங்களின் கையையும் உயர்த்துவார்கள். பின்னர் ஸூரா பாதிஹாவை மாத்திரம் ஓதுவார்கள். சில வேளை இறுதி இரண்டு ரக்ஆத்திலும் ஸூரா பாத்திஹா மாத்திரமல்லாது அதை விடவும் மேலதிகமாக எதையேனும் ஓதுவார்கள்.

16- நபியவர்கள் இறுதி   அத்தஹிய்யாத்தில் அமரும் போது தங்களின் ஆசனப் பகுதியின் மீது அமர்ந்து கொள்வார்கள். அவ்வமயம் தங்களின் ஆசனப் பகுதியை நிலத்தின் பக்கமாகக் கொண்டு வந்து தங்களின் பாதத்தை ஒரு பக்கத்தால் வெளியே கொண்டு வருவார்கள். அப்பொழுது இடது காலை தங்களின் தொடைக்கும், மற்றும் கெண்டைக் காலின் கீழ் பாகத்திலும் ஆக்கிக் கொள்வார்கள். அத்துடன் இடது பாதத்தை நிமிர்த்தி வைத்துக் கொள்வார்கள். சில வேளை அதனை விரித்து வைத்துக் கொள்வதுமுண்டு.  மேலும் தங்களின் வலது கையை வலது தொடையின் மேல் வைத்து ஆல்காட்டி விரலை உயர்த்தியும், மற்றும் மூன்று விரல்களை மடித்தும் வைத்துக் கொள்வார்கள். மேலும் .​ 

اللهم إني أعوذ بك من عذاب القبر،وأعوذ بك من فتنة المسيح الدجال،وأعوذ بك من فتنة المحيا والممات، اللهم إني أعوذ بك من المأثم والمغرم

“அல்லாஹ்வே! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் தஜ்ஜாலின் சோதனையை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகிறேன், இன்னும் வாழ்விலும், சாவிலும் ஏற்படும் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! இன்னும் கடன் பழுவையும், மற்றும் பாவ காரியங்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.” என்று பிரார்த்தனை செய்வார்கள்.

 பின்னர் வலது பக்கமாக

السلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ

என்று ஸலாம் சொல்வார்கள். அவ்வாறு இடது  பக்கமாகவும் ஸலாம் சொல்வார்கள்.

17- தனக்கு முன் ஒரு அம்பையோ, தடியையோ ஸுத்ராவாக- மறைப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு தொழுகையாளிகளுக்கு  ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபியவர்கள் பயணத்திலும், திறந்த வெளியிலும் தொழும் போது  தனக்கு முன்னால் ஒரு ஈட்டியை மையப்படுத்தி வைத்து, அதனை ஸுத்ராவாக ஆக்கிக் கொள்வார்கள். சில வேளை தனது பயணப் பொதியை எடுத்து அதனை முன்னால் வைத்துக் கொண்டு தொழுவதும் உண்டு.. 

18- நபிகளார் ஒரு மதிலுக்குப் பக்கத்தில் தொழுதால், இடையில் ஒரு ஆடு நடமாடும் அளவு இடை வெளியை விட்டு வைப்பார்கள். அதிலிருந்து மிகவும் தூரமாகி நிற்க மாட்டார்கள். ஆகையால் ஸுத்ராவுக்குப் பக்கத்தில் நின்று கொள்ளுமாறு தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

நபிகளார் தொழும் வேளையில்

1- அன்னார் தொழும் வேளையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.

2- தங்களின் கண்களை மூடிக் கொள்ளவு மாட்டர்கள்.

3- நபிகளார் தொழும் வேளையில் தங்களின் தலையைப் பணித்துக் கொள்வார்கள். மேலும் அன்னார்  நீட்டித் தொழ நினைக்கும் போது, பிள்ளையின் அழுகைச் சத்தம் கேட்டுவிட்டால் அது குழந்தையின் அன்னைக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சி உடனே​ தொழுகையை இலகு படுத்தி விடுவார்கள்.

4- நபியவர்கள் தொழும் தருவாயில் தன் மகளின் பிள்ளை தங்களின் புஜத்தின் மேல் ஏறிக் கொண்டால், நபிகளார் எழுந்து நிற்கும் போது பிள்ளையைத் தூக்கிக் கொண்டு எழும்புவார்கள். ருகூவும், ஸுஜூதும் செய்யும் போது பிள்ளையைக் கீழே இறக்கி வைப்பார்கள்.

5-சில வேளை தொழுது கொண்டிருக்கும் அண்ணல் நபியின் முதுகின் மேல் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்கள்  வந்து ஏறிக் கொள்வார்கள், அப்போது குழந்தை கீழே விழுந்து விடுவதை விரும்பாத நபியவர்கள் ஸஜதாவை நீட்டிக் கொள்வார்கள்.

6- சில வேளை அன்னார் தொழுங்கால் ஆயிஷா (ரழி) அவர்கள் வந்து விடுவார்கள், அப்போது அவருக்குக் கதவைத் திறந்து கொடுத்து விட்டு தங்களின் முஸல்லாவுக்குத் நபிகளார் தரும்பி விடுவார்கள்.

7- தொழும் போது தங்களுக்கு யாரேனும் ஸலாம் சொன்னால், அதற்கு சைகை மூலம் ​ பதில் தருவார்கள்.

8- தொழும் போது  சில வேளை தங்களின் வாயால் காற்றை ஊதிக் கொள்வார்கள், அழுவார்கள், தேவைப்பட்டால் கனைப்பார்கள்.

9- சில வேளை வெற்றுக் காலோடும், இன்னும் சில வேளை பாதரட்சை அணிந்தவாறும் நபியவர்கள் தொழுவார்கள். மேலும் யூதருக்கு மாறாக பாதணியணிந்து தொழும்படி அன்னார் கட்டளை யிட்டார்கள்.

10- சில வேளை ஒரு ஆடையை அணிந்து கொண்டும், இன்னும் சில வேளை இரண்டு ஆடைகளை​ அணிந்து கொண்டும் தொழுவார்கள். அண்ணல் நபியவர்கள் இப்படித் தொழுவதே அதிகம்.  ​ 

தொழுது முடிந்ததும்

1- இறுதி ஸலாம் கூறிய பின், மூன்று தடவைகள் இஸ்திஃபார் செய்வார்கள். அதன் பிறகு, கிப்லா    திசையை நோக்கிய வாறு

  اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، ومِنكَ السَّلامُ ، تباركْتَ يَاذا الجلالِ والإكرام

“அல்லாஹ்வே! நீயே சாந்தி. உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகின்றது.  கீர்த்தியும் கண்ணியமுமிக்க  இறைவனே நீ அருள் மிக்கவன்.”  என்று சொல்வார்கள். அதன் பிறகு அவசரமாக மஃமூன்களின் பக்கமாக திரும்பி  விடுவார்கள். மேலும் தங்களின் வலது  புறத்தாலும், சில வேலை இடது புறத்தாலும் அப்படி திரும்புவார்கள்.

2- அன்னார் பஜ்ருத் தொழுகையை தொழுது முடிந்ததும் சூரியன் உதயமாகும் வரையில் தாங்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்.

3- சகல பர்ழான தொழுகைக்குப் பிறகும்,

لا إلهَ إلاّ اللّهُ وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُـلْكُ ولهُ الحَمْد، وهوَ على كلّ شَيءٍ قَدير، اللّهُـمَّ لا مانِعَ لِما أَعْطَـيْت، وَلا مُعْطِـيَ لِما مَنَـعْت، وَلا يَنْفَـعُ ذا الجَـدِّ مِنْـكَ الجَـد. لا حولَ ولا قوةَ إلا بالله، لا إله إلا الله، ولا نعبدُ إلا إياهُ، لهُ النعمةُ ولهُ الفضلُ ولهُ الثناءُ الحسنُ، لا إله إلا الله مُخلصينَ له الدينَ ولو كرِهَ الكافرون

“வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் வையன்றி எதுவும் இல்லை அவன் ஒருவன். அவனுக்கு இணை ஒன்றுமில்லை. ஆட்சி அனைத்தும் அவனுக்கே சொந்தம். புகழ் யாவும் அவனுக்கே உரியன’ அவன் யாவற்றின் மீதும் வல்லமையுள்ளவன். அல்லாஹ்வே நீ கொடுத்ததை எவராலும் தடுத்துவிட முடியாது. மேலும் நீ தடுத்து வைத்ததை எவராலும் தரவும் முடியாது.

அல்லாஹ்வின்  உதவியின்றி  எதிலும் எத்தகைய அசைவும், சக்தியும் இல்லை. நாம் அவனையன்றி வேறு எதையும் வணங்க மாட்டோம். சகல அருளும், உதவியும் அவனையே சாரும். சிறந்த எல்லாப் பாராட்டுக்களும் அவனுக்கே சொந்தம். வணக்கத்திற்குத் தகுதியாவன் அவனையன்றி எதுவும் இல்லை. எனவே அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவன் மாத்திரமே.” என்று ஓதுவார்கள்.

4-மேலும் சகல பர்ழான தொழுகைக்குப் பிறகும்,   سبحانَ اللهِ என்பதை முப்பத்து மூன்று தடவையும்

الحمد لله என்பதை முப்பத்து மூன்று தடவையும்,

اللهُ أكبرُ என்பதை முப்பத்து மூன்று தடவையும், ஓதுவார்கள் ஈற்றில் நூறாவதாக

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيىء قدير

.”வணக்கத்திற்குத் தகுதியானவன்  அல்லாஹ்வை யன்றி எதுவும் இல்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை ஒன்றுமில்லை. சகல ஆட்சியும்  அவனுக்கே சொந்தம். இன்னும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. மேலும் அவன் சகல வஸ்துக்கள் மீதும் வல்லமையுள்ளவன்.” எனும் வாசகத்தை ஓதி முடிப்பார்கள்.  .

ஸுன்னத்தான, தொழுகையும், இரவுத் தொழுகையும்

1. பொதுவாக ஸுன்னத்தான தொழுகைகளையும், காரணம் குறிக்காத நப்லான  தொழுகைகளையும் தங்களின் இல்லத்திலேயே ரஸூல் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். குறிப்பாக மஃரிப் ஸுன்னத்தை வீட்டில் தொழுவார்கள். ​

2. நபியவர்கள் ஊரில் இருக்கும் போது ஸுன்னத்தான பத்து ரக்ஆத்துக்களையும் பேணி தொழுது வருவார்கள். அவையாவன ழுஹருக்கு முன்னர் இரண்டு ரக்ஆத்துக்களும், அதன் பின்னர் இரண்டு ரக்ஆத்துக்களும், மஃரிபுக்குப் பின்னர் இரண்டு ரக்ஆத்துக்களும், இஷாவுக்குப் பின்னர் இரண்டு ரக்ஆத்துக்களும் பஜ்ருக்கு முன்னர் இரண்டு ரக்ஆத்துக்களு மாகும். இவற்றில் பஜ்ரின் ஸுன்னத்து தவிர ஏனையவற்றை தம் வீட்டில் தொழுவார்கள்.

3. மற்றெல்லா ஸுன்னத்தான தொழுகைகளை விடவும் பஜ்ருடைய ஸுன்னத்தின் விடயத்தில் நபியவர்கள் அதிக அக்கறை காட்டி வந்தார்கள். அதனையும், வித்ருத் தொழுகையையும் நபியவர் கள் ஒரு போதும் விட்டதில்லை.  அன்னார் அவற்றை ஊரில் இருக்கும் போதும் தவற விட்டதில்லை, பிரயாணத்தில் இருக்கும் போதும் தவற விட்டதில்லை. மேலும் பர்ழான தொழுகையுடன் சம்பந்தப் பட்ட ராதிபான இவ்விரு தொழுகைகளையும் தவிர்ந்த வேறு எந்த ராதிபான ஸுன்னத்துத் தொழுகையையும் பிரயாணத்தில் இருக்கும் போது நபிகளார் தொழுததாக அறிவிப்புக்களில் காணப்படவில்லை.

4. பஜ்ருடைய ஸுன்னத்துக்குப் பின்னர் தங்களின் வலது புறமாக நபிகளார் சாய்ந்து கொள்வார்கள்

5. சில வேளை நபியவர்கள் ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள். ழுஹருக்குப் பிந்திய இரண்டு ரக்ஆத்துக்களும் அன்னாருக்குத்  தவறி விடும் பட்சத்தில் அன்னார் அதனை அஸருக்குப் பின்னர் கழா செய்து கொள்வார்கள்.

 6. அன்னார் இரவுத் தொழுகையை அனேகமாக நின்று கொண்டு தொழுவார்கள். சில வேளை உட்கார்ந்து கொண்டும் தொழுவார்கள். சில வேளை உட்கார்ந்தவாறு ஓதிக் கொண்டிருக்கும் நபியவர்கள், ஓதுவதற்கு இன்னும் சற்று எஞ்சி இருக்கும் போது எழுந்து நின்று அதனை ஓதி விட்டு அந்த நிலையிலிருந்து ருகூவுக்குச் செல்வார்கள்.

7. நபிகளாரின் இரவுத் தொழுகை பலவாறு அமைந்திருந்தது. முதலில் இரண்டிரண்டு ரக்ஆத்துக்களாகத் எட்டு ரக்ஆத்துக​ள் தொழுவார் கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் ஸலாம் கொடுப்பார்கள். அதன் பின்னர் வித்ருத் தொழுகையை நிறைவேற்றுவார்கள். வித்ருத் தொழுகையை ஐந்து ரக்அத்துக்களாகவோ, ஒன்பது ரக்அத்துக்களாவோ, ஏழு ரக்அத்துக்க ளாகவோ தொழுவார்கள். இதில் வித்ரை ஐந்து ரக்அத்துக்களாக நிறைவேற்றும் போது, இடையில் உட்காராமல் ஐந்து ரக்அத்துக்களையும் ஒரேயடியா கத் தொழுவிட்டு இறுதியாகக் கடைசி ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத் ஓதி, அதன் பின் ஸலாம் கொடுப்பார்கள்.

ஆனால் ஒன்பது ரக்அத்துக்களைக் கொண்டு வித்ரு தொழும் போது, முதலில் எட்டு ரக்அத்துக்களையும் இடைவிடாது தொடர்ச்சி யாகத் தொழுது விட்டு அதில் முதலாம் அத்தஹிய்யாத்துக்காக அமருவார்கள். அதன் பின் எழுந்து ஒன்பதாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர், ஒன்பதாவது ரக்அத்தில் இரண்டாம் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து கொள்வார்கள். அதில் அத்தஹிய்யாத் ஓதிய பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். இவ்வாறே ஏழு ரக்அத்துககளைக் கொண்டு வித்ரு தொழும் போது, ஆறு ரக்அத்துக் களையும் இடைவிடாது தொடர்ச்சியாகத் தொழுது விட்டு ஆறாவது ரக்அத்தில் முதலாம் அத்தஹிய்யாத்துக்காக அமருவார்கள். பின்னர் எழுந்து ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் அதில் இரண்டாவது அத்தஹிய்யாத்தை ஓதி விட்டு  ஸலாம் கொடுப்பார்கள்.

அத்துடன் ஏழு, ரக்அத்துக்களைக் கொண்ட வித்ருத் தொழுகையினைத் தொழும் சமயத்தில், அதனைத் தொழுது முடித்த பிறகு இன்னும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனை நின்று தொழாமல் உட்கார்ந்து தொழுவார்கள்.   ​ 

8. வித்ருத் தொழுகையை சில வேளை இரவின் முதல் பகுதியிலும், சில வேளை அதன் நடுப் பகுதியிலும், இன்னும் சில வேளை அதன் இறுதிப் பகுதியிலும் நிறைவேற்றுவார்கள். மேலும் “வித்ருத் தொழுகையை, உங்களின் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்

 9. சில வேளை வித்ருக்குப் பின் உட்கார்ந்து கொண்டு இரண்டு ரகஆத்துக்கள் தொழுவார்கள். மேலும் சில வேளைகளில் அவ்விரண்டு ரகஅத்தி லும் உட்கார்ந்தவாறு கிராஅத்தை ஓதுவார்கள். அவ்வமயம் ருகூஃ செய்ய நினைத்தால் எழுந்து நின்று, அதன் பின் ருகூஃ செய்வார்கள்.

10. நபியவர்ளுக்குத் தூக்கம் மேலிட்டாலோ அல்லது அசௌகரியம் ஏற்பட்டாலோ பகற் பொழுதில் பண்ணிரண்டு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள்.​

11. ஓரிரவு நபியவர்கள் ஒரு ஆயத்தை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டு ஸுப்ஹு வரை நின்று கொண்டிருந்தார்கள்.

12. இரவுத் தொழுகையில் சில வேளை அல் குர்ஆனை மௌனமாகவும், சில வேளை ஓசையுடனும் ஓதுவார்கள். அவ்வாறே சில வேளை நிலையில் நிற்பதை நீட்டிக் கொள்வார்கள். இன்னும் சில வேளை அதன் நீளத்தைக் சுறுக்கிக் கொள்வார்கள்.       

13. நபியவர்கள் வித்ருத் தொழுகையில்,

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى , قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ , قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ

எனும் ஸூராக்களை ஓதுவார்கள்  ஸலாம் கொடுத்ததும் நபியவர்கள் سبحان الملك القدوس என்று மூன்று தடவைகள் சொல்வார்கள். மூன்றாவது தடவையில் தங்களின் சப்தத்தை நீட்டி உயர்த்தி கொள்வார்கள்.

ஜும்ஆ தினத்தில் நபியவர்கள்

1- நபிகளார் ஜும்ஆ தினத்தை கௌரவித்தும் அதனை சிறப்பித்தும் அத்தினத்தில் விசேடமான சில காரியங்களை மேற் கொண்டும் வந்தார்கள். இதன் மூலம் அத்தினத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதற்கான  சிறந்த வழிகாட்டளை தந்துள்ளார்கள். இத்தினத்தில் நபிகளார் குளித்து, அழகான ஆடை அணிந்து, அத்தினத்தை கௌரவித்தார்கள். மேலும் இத்தினத்தில் குத்பா பிரசங்கத்திற்குச் செவிமடுத்தலைக் கடமையாக்கி னார்கள். அத்துடன் அன்னார் மீது அதிகமாக ஸலவாத்து சொல்வதையும் விதியாக்கினார்கள்.

2- மக்கள் பள்ளி வாயலில் ஒன்று கூடியதும் நபிகளார், மக்களுக்கு ஸலாம் கூறுவார்கள். பின்னர் மிம்பரில் ஏறி மீண்டும்  ஜனங்களை நோக்கி ஸலாம் கூறி விட்டு அமர்ந்து கொள்வார்கள். அதனைத் தொடர்து பிலால் (ரழி) அவர்கள் அதான் சொல்வார்கள். அதான் முடிந்ததும், நபிகளார் எழுந்து நின்று அதானுக்கும் குத்பாவுக்குமிடையில் இடைவெளி​யின்றி உடனடியாக குத்பாவை ஆரம்பிப்பார்கள். குத்பா ஓதும் போது ஊன்றிக் கொள்வதற்காக, ஒரு தடியை அல்லது ஒரு வில்லை எடுத்துக் கொண்டு மிம்பர் மீது ஏறுவார்கள்.

.3.  எழுந்து நின்று கொண்டு பிரசங்கம் செய்யும்  அன்னார் இடையில் சற்று அமருவார்கள். பின்னர் மீண்டும் எழுந்து இரண்டாம் குத்பா ஓதுவார்கள்.

4. குத்பா பிரசங்கம் நிகழ்த்துகையில் தன் பக்கம் நெருங்கி வரும்படியும், குத்பாவை காது தாழ்த்தி கேட்கும் படியும் கட்டளையிடுவார்கள். அவ்வமயம் “தன் தோழனிடம் மௌனமாக இரு” என்று அறிவிக்கும் மனிதன் குத்பாவின் பலனை வீனாக்கி விட்டான், எவன் இதனை வீனாக்கி விட்டானோ அவனுக்கு ஜும்ஆவின் பலன் கிட்டாது” என்று கூறுவார்கள்.

5. நபியவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்த துவங்கியதும் அன்னாரின் கண்கள் சிவந்து விடும். சப்தம் உயர்ந்து விடும். கோபம் மேலோங்கி விடும். அப்போதவர்கள் ஒரு படைத் தளபதி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பது போன்று காட்சி யளிப்பார்கள்.

6. குத்பாவின் போது   اما بعدஎன்று விளிப்பார்கள். மேலும் அன்னார் தங்களின் குத்பாவை சுறுக்கமாக நிகழ்த்தி, தொழுகையை நீட்டிக் தொழுவார்கள்.

7. தங்களின் குத்பாவில் இஸ்லாத்தின் அடிப்படைகளையும், அதன் சட்டங்களையும் பற்றித் தன் தோழர்களுக்கு அறிவுறுத்துவார்கள். மேலும் கட்டளை ஏதும் வரும் போது அதனை அவர்களுக்கு எடுத்தேவுவார்கள், அவ்வாறே தடை ஏதும் வரும் போது அதனை விட்டும் அவர்களைத் தடுப்பார்கள்.

 8.  ஏதேனும் ஒரு தேவை ஏற்பட்டாலோ, அல்லது எவரேனும் விளக்கம் கோரி அதற்குப் பதில் அளிக்க வேண்டியிருந்தாலோ தங்களின் குத்பாவை இடையில் நிறுத்தி,  மீண்டும் குத்பாவைத் தொடரு வார்கள். சில வேளை ஏதும் அவசியம் ஏற்பட்டால் மிம்பரிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டு மீண்டும் அவ்விடத்துக்குத் திரும்புவார்கள். சந்தர்ப்பத்திற்குத் தேவையான விடயங்களைப் பற்றி மக்களுக்கு குத்பாவில் கட்டளையிடுவார்கள். மக்கள் மத்தியில் வறுமைப் பட்ட எவரையுமோ, அல்லது தேவைப் பட்ட எவரையுமோ கண்டு கொண்டால் அவர்களுக்கு  தர்மம் செய்யும்படி மக்களைத் தூண்டி அதைச் செய்யும் படி அவர்களுக்குக் கட்டளையிடுவார்கள்.

9.  நபியவர்கள் குத்பா நிகழ்த்தும்  போது அல்லாஹ்வின் நாமம் உரைக்கும் போது தங்களின் ஆல்காட்டி விரலைக் கொண்டு சைகை செய்வார்கள். மழையின்றி பஞ்சம் ஏற்பட்டால் குத்பாவில் மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள்.

10.  நபியவர்கள் ஜும்ஆ தொழுது முடிந்ததும் அதன் ஸுன்னத்  இரண்டு ரக்ஆத்தையும் தங்களின் இல்லம் சென்று தொழுவார்கள். மேலும் அதனை தொழுதவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றதும் மேலும் ​நான்கு ரக்ஆத்துக்கள்  தொழும்படி ஏவினார்கள்.    

இரு பெருநாட்களில் நபியவர்கள் 

1. நபியவர்கள் இரண்டு பெருநாளையும் “முஸல்லாவில்”- பெருநாள் தொழுகை நடாத்தும் மைதானத்தில் தொழுவார்கள். அந்நாளில் அன்னார் அழகான ஆடையை அணிந்து கொள்வார்கள்.

2. நபியவர்கள் நோன்புப் பெருநாளன்று வீட்டிலிருந்து புறப்பட முன் ஒற்றைப் படையாகச்  சில ஈத்தம்  பழங்களைச் சாப்பிடுவார்கள். ஆனால் ஹஜ்ஜுப்  பெருநாளன்றோ முஸல்லாவிலிருந்து திரும்பி வரும் வரையில் எதுவும் சாப்பிட மாட்டார்கள். திரும்பிய பின் தங்களின் உழ்ஹிய்யா குர்பானியிலிருந்து சிலதை உண்பார்கள். மேலும் நே​ன்புப் பெருநாள் தொழுகையை நேரம் தாழ்த்தி தொழும் நபிகளார், அதை விடவும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நேர காலத்துடன்  முன் கூட்டித் தொழுவார்கள். 

3. அன்னார் முஸல்லாவுக்கு நடந்து செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் ஈட்டியொன்றும்  எடுத்துச் செல்லப்படும். முஸல்லாவில் வைத்து அதன்பால் நின்று தொழுவதற்கு அது ஸுத்தராவாக  நட்டி வைக்கப்படும்

4. நபியவர்கள் முஸல்லாவை சென்றடைந்ததும் தொழ ஆரம்பிப்பார்கள். அதற்காக அதானும் இகாமத்தும் சொல்லப்பட மாட்டாது. மேலும் நபியவர்கள் الصلاةُ جامعةٌ என்றும் கூறமாட்டார்கள். ​மேலும் பெருநாள் தொழுகையைத் தொழ முன்னரும் அதன் பின்னரும் நபியவர்களோ அன்னாரின் தோழர்களோ முஸல்லாவில் வேறு எந்தத் தொழுகையையும் தொழவில்லை.

5. நபிகளார் குத்பாவுக்கு முன்னர் இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுவார்கள். முதலாவது ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமா உள்ளடங்களாக  தொடர்ச்சியாக ஏழு தக்பீர்கள் சொல்வார்கள். எல்லா இரண்டு தக்பீர்களுக்குமிடையில் சற்று மௌனமாக இருப்பார்கள். தக்பீர்களுக் கிடையில் குறிப்பிடத்தக்க திக்ரு எதனையும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஓதினார்களா என்பதற்குப் பதிவுகள் எதுவும் இல்லை. தக்பீர் அனைத்தையும் பூர்த்தி செய்ததும் ஓத ஆரம்பிப்பார்கள். அதன் பின் தக்பீர் கூறி ருகூஃ செய்வார்கள். முதலாம் ரக்அத்தின் பின்னர் இரண்டாம் ரக்அத்தில் தொடர்ச்சியாக ஐந்து தக்பீர்கள் சொல்வார்கள். அதன் பின்  ஓதத் துவங்குவார்கள். தொழுகை முடிந்ததும் மக்கள் வரிசைகளில் அமர்ந்திருக்க நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்துவார்கள். அவ்வமயம் நபியவர்கள் நல்லுபதேசம் செய்வார்கள். மேலும் நல்லதை செய்யும் படியும், தீயதை விட்டும் விலகும் படியும்​ மக்களுக்குக் கட்டளை யிடுவார்கள். தொழுகையில் ق  ‘اقْتَرَبَتِ ஸூராக்களை பூரணமாக ஓதி முடிப்பார்கள். சில வேளை سَبِّحِ اسْمَ மற்றும் الْغَاشِيَةِ     ஸூராக்களை ஓதுவார்கள்.          ​

6. நபியவர்கள் நிலத்தில் நின்று பிரசங்கம் நிகழ்த்துவார்கள். அங்கு மிம்பர் எதுவும் இருக்கவில்லை.

7. மேலும் குத்பாவில் அமராதிருக்க நபியவர்கள் சலுகையளித்தார்கள். அவ்வாறே  ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால், பெருநாள் தொழுகையைக் கொண்டு  ஜும்ஆத் தொழுகையைத் தவிர்த்துக் கொள்ளவும் சலுகையளித்தார்கள்.

8. பெருநாள் தினத்தில் தொழுகைக்கு செல்லவும் தொழுகையின் பின் திரும்பி வரவும் வெவ்வேறு வழிகளைப் நபியவர்கள் பயன்படுத்தினார்கள்.

சூரிய கிரகணம் தோன்றும் போது நபிகளார்

1. சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபியவர்கள் தங்களின் மேல் துண்டை இழுத்துக் கொண்டு, பீதியுடன் பள்ளிவாசலை நோக்கி விரைந்தார்கள். அங்கு முன்னே சென்று இரண்டு ரகஆத்துக்கள் தொழுதார்கள். முலாவது ரக்அத்தில் ஸூரதுல் பாதிஹாவும் இன்னொரு நீளமான ஸூராவும் ஓதினார்கள். சத்தமிட்டு கிராஅத்தை ஓதினார்கள். பின்னர் ருகூ;ஃ செய்தார்கள். அதில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் ருகூவுலிருந்து எழுந்தார்கள். அந்த நிலையிலும் நீண்ட நேரம் வரை நின்று கொண்டிருந்தார்கள். இது முதலில் நின்ற நிலையன்று. மேலும் நபியவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும்.

 سمع الله لمن حمده  ربنا ولك الحمد

என்று சொன்னார்கள், அந்த நிலையில் வைத்தும் ஓதத் துவங்கினார்கள். பின்னர் மறுபடியும் ருகூவுக்குச் சென்று அந்த ருகூவிலும் நீண்ட நேரம் இருந்தார்கள். இது முதலாவது ருகூஃ அல்ல. இது மேலதிகமான இன்னொரு ருகூவாகும். பின்னர் அந்த ருகூவலிருந்து தலையைத் தூக்கினார்கள். பின்னர் ஸஜதாவுக்குச் சென்றார்கள். அதில் நீண்ட நேரம் இருந்தார்கள். இவ்வாறு முதலாம் ரக்அத்தைத் தொழுது முடிந்ததும் இரண்டாவது ரக்அத்தைத் தொழுதார்கள். இதிலும் முதலாம் ரக்அத்தில் செய்தது போலவே செய்தார்கள். இதன்படி ஒவ்வாரு ரக்அத்தும் இரண்டு ருகூஃகளும் இரண்டு ஸஜூதுகளும் கொண்டதாக இருந்தது. தொழுது முடிந்ததும் கருத்தாளமான பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார்கள்.

2. கிரகணம் தோன்றிய போது அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறும், தொழுகையிலும் மற்றும் துஆ இஸ்திஃபாரிலும் ஈடுபடுமாறும் நபியவர் கள் கட்டளையிட்டார்கள். மேலும் தர்மம் செய்யுமாறும், அடிமைகளை உரிமையிடுமாறும் அன்னார் உத்தரவிட்டார்கள்.

மழை தேவைப்பட்ட போது நபிகளார்

1.   மழை தேவைப்படும் போது நபியவர்கள் மிம்பரில் வைத்து குத்பாவின் இடையே மழையை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். ஜும்ஆ அல்லாத சந்தர்ப்பத்திலும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். ஒரு முறை பள்ளிவாசலில் அமர்ந்திருந்தவாறு தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி மழையை வேண்டி அல்லாஹ்விடம் துஆ பிரார்த்தனை செய்தார்கள்.

2. மழைக்காக பிரார்த்தனை செய்யும் போது. நபியவர்கள்

نافعاً غير ضار ،عاجلاً غير آجل  اللهم اسق عبادك وبهائمك ، وانشر رحمتك وأحي بلدك الميت اللهم اسقنا غيثاً مغيثاً مريئا   

“இறைவா! உன் அடியார்களுக்கும், உன் கால் நடைகளுக்கும் தண்ணீர் புகட்டிடுவாயாக. உன் அருள் மூலம் கேடு விளையாது அதன் மூலம் பயன் தர தக்கதாய், கால தாமதமின்றி இப்பொழுதே அதனைப்  பரவச் செய்திடுவாயாக, இறைவா! இறந்து போயுள்ள உனது தேசத்துக்கு வாழ்வளிப்பாயாக. இறைவா! நமக்குத் தாரளமாக மழையை பொழியச் செய்திடுவாயாக.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்று பதிவாகியுள்ளது.

3. மேகத்தையும் காற்றையும் நபியவர்கள் காணுமிடத்து அதன் தாக்கம் அன்னாரின் முகத்தில் தெரியும். எனவே அவர்கள் முன்னும் பின்னும் போய் வருவார்கள். (அதாவது ஒரு இடத்தில் நிற்காது நடப்பார்கள்.) அவ்வமயம் மழை பொழிந்தது விட்டால் அன்னார் மகிழ்ச்சி அடைவார்கள்.

4.மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் மழையைக் கண்டதும்.

      اللهم صيبا نافعا  “இறைவா! இதனை பயன் தர தக்கதாக கொட்டச் செய்வாயாக” என்று சொல்வார்கள், மேலும் நபி (ஸல்) அவர்கள், தங்கள்        மேனியில் மழைத் தண்ணீர் பட வேண்டும் என்பதற்காக  தங்களின் ஆடையை சற்று திறந்து கொள்வார்கள். அது பற்றி அன்னாரிடம் வினவப்பட்ட போது, அது அல்லாஹ்விட மிருந்து கிடைத்துள்ள புது மழை - அருள் என்று கூறினார்கள்.

5. மழை அதிகரித்த போது அதனை நிறுத்த பிரார்த்தனை செய்யுமாறு ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வேண்டினர். அப்போது நபிகளார்,            

اللهم حَوَالَيْنَا، ولا علينا، اللهم على الآكام والظِّرَاب وبطون الأودية، ومنابت الشجر

“அல்லாஹ்வே! இம்மழையை நமதூருக்குச் சூழ பொழியச் செய்திடுவாயாக. இதனை நமது ஊர் மீது இறக்கி விடாதே. அல்லாஹ்வே! இதனை குன்றுகளிலும், மர மட்டைகள் மீதும், மலைகள் மீதும், அருவிகளுக்குள்ளேயும் மற்றும் செடிகள் முளைக்கும் இடங்களிலும் பொழியச் செய்வாயாக.”  என்று பிரார்த்தனை செய்தார்கள்.

 அச்ச காலத்து தொழுகையில் ரஸூல் (ஸல்)

1-      ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் இருக்கும் போது, அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் எதிரிகள் இருந்தால், அப்போது நபிகளார் முஸ்லிம் படையை இரண்டு வரிசையில் நிறுத்துவார்கள். பின்னர் தக்பீர் தஹ்ரீமா சொல்வார்கள். அப்போது இரண்டு அணியிலும் நிற்கும் யாவரும் தக்பீர் முழங்குவார்கள்.

பின்னர் நபியவர்கள் ருகூஃ  செய்யும் போது எல்லோரும் ஒன்றாக ருகூஃ செய்து விட்டு, நபியவர்கள் ருகூவிலிருந்து எழும் போது எல்லோரும் ஒனறாக எழுந்து நிற்பர். பின்னர் நபிகளார் ஸுஜூது செய்யும் போது அன்னாருக்கு அடுத்துள்ள முதலாம் ஸப்பில் இருப்பவர்கள் மாத்திரம் நபியுடன் சேர்ந்து ஸுஜுது செய்வர். அப்போது இரண்டாம் வரிசையிலிருப்போர் எதிரிகளை முன்னோக்கியவாறு நிலையில் நிற்பர்.

 ரஸூல் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரகஅத்திற்காக எழுந்ததும், இரண்டாவது வரிசை யில் இருப்போர் இரண்டு ஸுஜூதுகளையும் நிறை வேற்றுவார்கள். அதன் பின்னர் அவர்கள் முதலாம் ஸப்பில் இருக்கின்றவர்களின் இடத்தில் வந்து நிற்பார்கள். மேலும் ஆரம்பத்தில் முதலாம் ஸப்பில் இருந்தவர்கள் பின் வரிசைக்கு வருவார்கள். இதன் மூலம் இரண்டு வரிசையில் இருந்தவர்களும் முதல் வரிசையில் இருந்த சிறப்பினை பெறுவர். மேலும் ஏற்கெனவே இரண்டாம் வரிசையில் இருந்த வர்களும் ரஸூலுல்லாஹ்வுடன் சேர்ந்து இரண்டு ஸுஜூதகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் பேற்றைப் பெறுவர். பின்னர் ரஸூல் (ஸல்) அவர்கள் ருகூஃ செய்ததும் இரண்டு வரிசையிலும் இருப்பவர்கள்,  முன்னர் முதலாம் ரக்அத்தில் நடந்து கொண்ட பிரகாரம் நடந்து கொள்வார்கள். அதாவது இரண்டு வரிசையிலும் இருப்பவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களுடன் ஒன்றாக  ருகூஃ செய்து. ஒன்றாக எழுந்து நிற்பர்.  மேலும் நபியவர்கள் இரண்டாம்  ரக்அத்தின் ஸுஜூதுக்குச் செல்லும் போது தற்போது முதலாம் வரிசையில் இருப்பவர்களும் நபிகளாருடன் சேர்ந்து இரண்டு ஸுஜூதுகளையும் செய்வார்கள். ஆனால் இரண்டாம் வரிசையில் நிற்போர் அப்படியே நின்ற நிலையில்  நிற்பார்கள்.  பின்னர்  நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்ததும் தற்சமயம் பின் வரிசையில் இருக்கும் அந்த அணியினர், தாங்கள் நிறைவேற்ற வேண்டிய இரண்டு ஸுஜூதுகளையும் செய்து விட்டு ரஸூலுல்லாஹ்வுடன் சேர்ந்து கொள்வார்கள். பின்னர் எல்லோரும் ஒன்றாக ஸலாம் கொடுப்பர்.

2-      கிப்லா திசையில் அல்லாமல் வேறு திசையில் எதிரி இ​ருந்தால், நபியவர்கள் சில வேளை தங்களின் அணியை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். இதில் ஒரு குழுவினரை எதிரிகளுக்கு நேராகவும் இன்னொரு குழுவை தன்னுடன் தொழுகின்ற குழுவாகவும் நிறுத்துவார்கள். அப்போது தன்னுடன் இருக்கும் குழுவினர் ஒரு ரக்அத்தை தொழுவர். பின்னர் அவர்கள் தொழுகையில் இருந்தவாறே எதிரிகளை நோக்கி நிற்கும் குழுவின் இடத்திற்குச் வருவார்கள். அதனை அடுத்து எதிரிகளின் திசையிலிருந்த குழுவினர், நபிகளாருடன்  இருந்த குழுவின்  இடத்திற்கு வருவர்.

அப்பொழுதவர்கள் இரண்டாவது ரக்அத்தில் நபியவர்களுடன் சேர்ந்து தங்களின் முதலாவது ரக்அத்தை தொழுவார்கள். இந்நிலையில் இரண்டு ரக்அத்துக்களையும் நிறவேற்றியுள்ள ரஸூல் (ஸல்)  அவர்கள்   ஸலாம் கொடுத்து விடுவார்கள். ஆனால் இதுவரை இரண்டு குழுவினரும்  ஒரேயொரு ரக்அத்தை மாத்திரம் நிறைவேற்றியிருக்கின்ற படியால், அவர்கள் தங்களின்  எஞ்சியுள்ள  மற்றொரு ரக்அத்தையும் இமாம் ஸலாம் கொடுத்த  பின்னர்  தனியாகத்  தொழுது விட்டு ஸலாம் கொடுப்பார்கள்.​

3-      சில வேளை  நபியவர்கள் ஒரு குழுவினருக்கு ஒரு ரக்அத்தை தொழ வைத்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக எழுந்து நிற்பார்கள். நபியவர்கள் அப்படி நின்று கொண்டிருக்க, அந்தக் குழு  இரண்டாவது ரக்அத்தை தனியாக நிறைவேற்றி விட்டு ​ரஸூல் (ஸல்) அவர்கள் ருகூவில் இருந்து எழுந்திருக்க முன்னர் ஸலாம் கொடுப்பர். அதனையடுத்து அடுத்த குழுவினர் நபியவர்கள் இரண்டாம் ரக்அத்தில் இருக்க அங்கு வந்து சேருவார்கள். மேலும் நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து கொண்டதும் அந்தக் குழுவினர் எழுந்து தங்களின் மறு ரக்அத்தை நிறைவேற்றுவார்கள். மேலும் அந்தக் குழுவினர்  அத்தஹிய்யாத் ஓதி முடிக்கும் வரையில், ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தஹிய்யாத்தில் காத்திருப்பார்கள். பின்னர் ரஸூல் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் அவர்களும் ஸலாம் கொடுப்பார்கள்.

4-      சில வேளை நபியவர்கள் ஒரு குழுவினருக்கு இரண்டு ரம்ஆத்துக்களை தொழ வைப்பார்கள். பின்னர் அக்குழுவினர் ஸலாம் கொடுத்து விடுவார்கள். அதன் பின் அடுத்தக் குழுவினர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்து கொள்வார்கள். அப்பாழுது அவர்களுக்கும் இரண்டு ரக்ஆத்துக்களை நபியவர்கள் தொழ வைப்பார்கள். பின்னர் அவர்கள் எல்லோருக்கு மாக அன்னார் ஸலாம் கொடுப்பார்கள்.

5-      சில வேளை நபியவர்கள் ஒரு குழுவினருக்கு ஒரு ரக்அத்தை தொழ வைப்பார்கள். பின்னர் அக்குழுவினர் சென்று விடுவார்கள். அவர்கள் வேறு எதனையும் செய்ய மாட்டார்கள். பின்னர் அடுத்தக் குழுவினர் நபியவர்களிடம் வருவார்கள்.​ நபியவர்கள், அந்தக் குழுவினருக்கும் ஒரு ரக்அத்தை தொழ வைப்பார்கள். அவர்களும் வேறு எதனையும் செய்ய மாட்டார்கள். இதன்படி நபியவர்களுக்கு இரண்டு ரக்ஆத்துக்களும், இரண்டு குழுக்களுக் கும் ஒரு ரக்அத்தும் உரித்துடையதாகும்.

 ஜனாஸாவை ஆயத்தப்படுத்துதல்

1-   ஏனைய சமூகத்தினருக்கு மாறாக ஒரு மையித்தின் இறுதி சடங்குகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதற் காக  சிறந்த வழிகாட்டல்களை நபியவர்கள் தன் சமூகத்திற்குத் தந்துள்ளார்கள். இது மையித்துட னும், அதன் குடும்பத்தாருடனும் மற்றும் சுற்றத்தாருடனும் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டு மென்ற நல்ல அனுகு முறை களை உள்ளடக்கியதாகும். இதில் முதலாவது, மரணத்தை எய்திருப்பவர் சுகவீனமுற்றிருக்கும் போது அவரை தரிசித்து அவருக்கு மறுமையைப்பற்றி நினைவூட்டி, அவர் பிறருக்குச் சொல்ல வேண்டிய விடயம் ஏதுமிருந்தால் அது பற்றி வஸிய்யத் செய்யுமாறும், மற்றும் தௌபா செய்து கொள்ளுமாறும் அவரிடம் வேண்டிக் கொள்வதாகும். அவ்வாறே மரணத்தை நெருங்கியுள்ளவரின் இறுதி வாசகம்

شهادة ان لاإله إلاالله

“வணங்கத் தகுமானவன் அல்லாஹ்வையன்றி எதுவுமில்லை” என்ற வாசகமாக இருக்க வேண்டும். எனவே அவருக்கு அந்த வாசகங் களை அறிவுருத்துவதும் இதில் அடங்கும். 

2-   மனிதரில் அல்லாஹ்வின் விதியை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட, அவனின் புகழை மேண்மைப் படுத்திய  ஒரு மா மனிதராக ரஸுல் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். எனினும் தன் புதல்வன் இப்ராஹீம் மரணத்தைத் தழுவிக் கொண்ட போது அவர் மீது தனக்கிருந்த அன்பு, கருணையின் காரணமாக அவரின்  பிரிவைக் கண்டு நபியவர்கள் அழுதார்கள். ஆயினும் அன்னாரின் உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய திருப்தியும், அவன் மீதான நன்றியும் நிறம்பியிருந்தது. மேலும் அன்னாரின் நாவு அல்லாஹ்வை நினைவு கூறுவதிலும், துதி பாடுவதிலும் சதாவும்  மூழ்கி இருந்தது. மேலும் “கண் கலங்கி, உள்ளம் கவலையுற்றுள்ள போதிலும், அல்லாஹ்வுக்கு திருப்தி தரும் வார்த்தைகளையன்றி வேறு வார்த்தை எதனையும் நாம் பேச மாட்டோம்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

3-   மரணத்திற்காக கண்ணத்தில் அறைந்து கொள்வதையும், சப்தமிட்டு  ஒப்பாரி வைத்து அழுவதையும் நபியவர்கள் தடுத்தார்கள்.

4-   மேலும் மையத்தினை  அல்லாஹ்வின் பால் வழி அனுப்பி வைப்பதற்காக அதனைக் கழுவி, குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி வெள்ளை ஆடையில் கபனிட்டுத் தீவிரமாக அதனை ஆயத்தப்படுத்து ​மாறு ரஸூல் (ஸல்) அவர்கள் வழி காட்டிச் சென்றார்கள்.  

5-   மேலும் மையத்தின் முகத்தையும், மேனியையும் மூடி வைப்பதும், அவ்வாறே அதன் இரண்டு கண்களையும் மூடி விடுவதும் நபியவர்களின் சிறந்த வழிகாட்டலைச் சார்ந்த தாகும்.

6-   சில வேளை நபியவர்கள், மையத்தைப் முத்தமிடுவார்கள்.

7-   மேலும் மையித்தை மூன்று தடவை அல்லது ஐந்து தடவைகள் கழுவும் படியாக ரஸூல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். மேலும் மையத்தை குளிப்பாட்டுகின்றவரின் எண்ணத் திற்கு ஏற்றாப் போல் அதைவிட அதிகமாகக் கழுவும் படியும், இறுதியாக கற்பூரம் கொண்டு கழுவும் படியும் நபியவர்கள் பணித்தார்கள்.  

8-   போர்க் களத்தில் உயிர் நீத்த ஷஹீதை நபியவர்கள் குளிப்பாட்ட வில்லை. மேலும் ஷுஹதாக்கள் தம்முடன் வைத்திருந்த    போராயுதங்களை எல்லாம் அகற்றி, பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையையே அவர்களுக்கு கபனாக ஆக்கினார்கள். மேலும் அவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடாத்த வில்லை.

9-   இஹ்ராம் அணிந்த நிலையிலுள்ள மையித்தை தண்ணீரும், இளந்தை இலையும் கொண்டு குளிப்பாட்டும்படி நபியவர்கள் பணித்தார்கள். மேலும் அவர் அணிந்திருக்கும் இஹ்ராமையே கபனாக ஆக்கிக் கொள்ளுமாரும் உத்தர விட்டார்கள். மேலும் அந்த மையித்துக்கு மனம் பூசுவதையும், அதன் தலையை மூடுவதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.

10-       மையித்திற்கு வெள்ளை நிரத்தில் அழகாக கபன் அணிவிக்கும்படி மையித்தின் உரிமை யாளனுக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

11-           மையத்தை முற்றாக மறைக்க கபன் பற்றாக் குறையாக இருந்த போது, நபியவர்கள் மையத்தின் தலையை கபனைக் கொண்டு மூடிவிட்டு, அதன் இரண்டு கால்களையும் புற்களை வைத்து மறைத்தார்கள்.

ஜனாஸாத் தொழுகையில் நபிகளாரின் வழி முறை

1. மையித்தைப் பள்ளிவாசலுக்கு வெளியே வைத்து​ ஜனாஸாத் தொழுகையை நடாத்துவதே நபியவர்களின் வழக்கம். சில வேளை பள்ளிக்குள்ளே வைத்தும் நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடாத்தியிருக்கின்றார்கள். ஆயினும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபியவர்கள் இவ்வாறு செய்ததில்லை.

2. நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடாத்த முன் வந்தால், ‘அந்த மையித்தின் மீது கடன் சுமை ஏதும் உண்டா?” என்று விசாரிப்பார்கள். அப்படி ஏதும் இல்லை என்றால் அதன் ஜனாஸாத் தொழுகையை ரஸூல் (ஸல்) அவர்கள் நடாத்துவார்கள். அப்படி இருந்தாலோ நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையை நடாத்த மாட்டார்கள். மாறாக அதன் ஜனாஸாத் தொழுகையை அதன் உரிமையாளர்கள் நடாத்தும்படி கட்டளையிடு வார்கள். எனினும் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வெற்றி வாயலைத் திறந்து கொடுத்த பின்னர், நபியவர்கள் கடன் பட்ட மையித்தின் கடன் பொறுப்பை தாங்களே எற்றுக் கொண்டு அதன் ஜனாஸா தொழுகையையும் தாங்களே நடாத்தி வைத்தார்கள். மேலும் மையித்தின் கடனை நிறைவேற்றும் பொருட்டு தாங்கள்  கொடுத்த பணத்தை, மையித் விட்டுச் சென்ற சொத்துக்களில் இருந்து  நபியவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றை அதன் வாரிஸுகளுக்கே விட்டுக் கொடுத்தார்கள்.

3. நபியவர்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, மையித்துக் காக துஆவும் கேட்பார்கள். இத் தொழுகையைப் பொதுவாக நான்கு தடவைகள் தக்பீர்கள் கூறி​ நடாத்தி வந்த நபியவர்கள். சில வேலை ஐந்து தடவைகள் தக்பீர் கூறி அதனை நடாத்தியும் இருக்கின்றார்கள்.

4. மையித்துக்காக மனத் தூய்மையுடன் துஆ கேட்கும்படி ரஸூல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.  மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள்,

اللَّهم اغفر لِحَيِّنَا وَميِّتِنا ، وَصَغيرنا وَكَبيرِنَا ، وذَكَرِنَا وَأُنْثَانَا ، وشَاهِدِنا وَغائِبنَا . اللَّهُمَّ منْ أَحْيَيْتَه منَّا فأَحْيِه على الإسْلامِ ، وَمَنْ توَفَّيْتَه منَّا فَتَوَفَّهُ عَلى الإيمانِ ، اللَّهُمَّ لا تَحْرِمْنا أَجْرَهُ ، وَلا تَفْتِنَّا بَعْدَهُ

“இறைவா! நம்மிடையே ஜீவித்துக் கொண்டிருப்ப வர்களையும், இறந்து போனவர்களையும், நமது சிறியோரையும், பெரியோரையும், நமது ஆண்களையும் பெண்களையும் மன்னித்திடு வாயாக. இறைவா! நம்மிடையே எவரை நீ உயிருடன் இருக்கச் செய்கின்றாயோ  அவரை இஸ்லாத்தின் மீது வாழ வைப்பாயாக. மேலும் எவரை நீ மரணிக்கச் செய்கின்றாயோ அவரை ஈமானின் மீது மரணிக்கச் செய்வாயாக. இறைவா! அவரின் கூலியை நமக்கு இல்லாமல் செய்து விடாதே. மேலும்  அவருக்குப் பின்னர் நம்மை சோதனைக்குள்ளாக்கி விடாதே” என்றும்,

للَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما ينقى الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

“இறைவா! அவரை மன்னித்து, அவருக்கு கருணை காட்டுவாயாக. மேலும் அவரின் தொல்லைகளை நீக்கி அவரை மன்னித்திடுவாயாக. அவரை கண்ணியமாக உபசரிப்பாயாக, மேலும் அவர் பிரவேசிக்கும் ஸ்தானத்தை விசாலமாக்கி விடுவாயாக. அவரை தண்ணீரைக் கொண்டும் பணியைக் கொண்டும் குளிர்ந்த ஜலத்தைக் கொண்டும் குளிப்பாட்டுவாயாக. அழுக்கை விட்டும் வெண்ணிற ஆடை தூய்மைப்படுத்தப் படுவது போன்று பாவங்களை விட்டும் அவரைத் தூய்மையாக்கிடுவாயாக. அவருடைய இல்லத் திற்குப் பதிலாக அதை விடவும் சிறந்த இல்லத்தைக் அவருக்குக் கொடுத்திடுவாயாக. அவரின் குடும்பத்தை விடவும் சிறந்த குடும்பத்தையும், அவரின் மனைவியை விடவும் சிறந்த மனைவியை யும் அவருக்குக் கொடுத்திடுவாயாக. மேலும் அவரை சுவனபதயில் பிரவேசிக்கச் செய்வாயாக. மேலும் கப்ரின் வேதனையும் மற்றும் நரக வேதனையையும் விட்டும் அவரைப் பாதுகாப்பா யாக”. என்றும் பிரார்த்தனை செய்துள்ளார்கள் என ஹதீஸில் பதிவாகியுள்ளது.

ரஸூல் (ஸல்) அவர்கள்  ஜனாஸாத் தொழுகையை நடாத்தும் போது, அது ஆண் மையித்தாக  இருந்தால் அதன், தலைக்கு நேராகவும், பெண் மையித்தாக இருந்தால் அதன் இடுப்புக்கு நேராகவும்    நின்று  கொள்வார்கள்.

நபியவர்கள் குழந்தையின் ஜனாஸாத் தொழுகை யையும் முன்னின்று  நடாத்துவார்கள். ஆனால் தற்கொலை செய்தவனின் ஜனாஸாவை யும், கனீமத் பொருளில் மோசடி செய்தவரின் ஜனாஸாவையும் நபிகளார் முன் நின்று நடாத்த மாட்டார்கள்.

கல்லெறிந்து மரண தண்டனை பெற்ற ஜுஹனீ குலத்து பெண்ணின் ஜனாஸாவையும் நபியவர்கள் நடாத்தி வைத்தார்கள்.

மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் வபாத்தான போது அவரின் “காயிப்” ஜனாஸாத் தொழுகையை நபியவர்கள் தொழுதார்கள். எனினும் எல்லா மையித்தின் மீதும் நபி (ஸல்) அவர்கள் “காயிப்” ஜனாஸா தொழுகை தொழுதார்கள் என்பது அவர்களின் வழிகாட்டலில் காணப்பட வில்லை.

ரஸூல் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஜனாஸாத் தொழுகை தவறி விட்டால் உரியவரின் கப்ரின் பால் சென்று ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வது நபியவர்களின் ஒரு வழி காட்டலாகும்.

மையித்தைக் கபனிடுதலும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களும்

1-   ரஸூல் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றியதும் ஜனாஸாவின் முன்னால் நடந்தவாறு மையவாடிக்குச் செல்வார்கள். மேலும் வாகனத்தில் செல்வோர் அதன் பின்னால் செல்வதையும், நடந்து செல்வோர், அதன் முன்னாலோ, பின்னாலோ, வலது, இடது புறங்களில் சென்ற போதிலும் அதற்கு மிக நெருக்கமாகச் செல்ல வேண்டும் என்பதையும் நபியவர்கள் ஒரு ஸுன்னத்தான வழிமுறையாக ஆக்கினார்கள். மேலும் ஜனாஸாவை வேகமாக எடுத்துச் செல்லும் படியாகவும் நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

2-   மையித் கப்ரில் வைக்கப்படும் வரையில் ரஸூல் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்ள மாட்டார்கள்.

3-   ஜனாஸா செல்லும் போது எழுந்து நிற்கும் படி நபிகளார் பணித்தார்கள். சில வேளை அன்னார் உட்கார்ந்து  கொண்டும் இருந்துள்ளார்கள்,

4-   சூரியன் உதிக்கும் போதும், அது மறையும் போதும், மற்றும்  நடுப் பகலிலும் ஜனாஸாவை அடக்கம் செய்யாமலிருப்பது நபியவர்களின் வழிகாட்டலில் ஒன்றாகும்

5-   புதை குழியை ஆழமாகத் தோண்டி அதன் தலைமாட்டிலும் கால் மாட்டிலும் அதனை விசாலப்படுத்தி வைப்பதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒரு வழியாகும்.

6-   புதை குழியில் மையித் வைக்கப்பட்ட பின் அதன் தலைப் புறத்தில் மூன்று தடவைகள் நபியவர்கள் மண் போடுவார்கள்.

7-  மையித் அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும், ரஸூல் (ஸல்) அவர்கள் கபுரின் பக்கமாக நின்று கொண்டு அதற்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அப்படி செய்யுமாறு தன் தோழர்களையும் பணித்தார்கள்.

8-   கப்ரில் வைக்கப்படிருக்கும் மையித்தின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ரஸூல் (ஸல்) அவர்கள்  குர்ஆன் ஓதியதோ, மையித்துக்கு “தல்கீன்”  சொல்லிக் கொடுத்ததோ இல்லை.

9-   ரஸூல் (ஸல்) அவர்கள், மரண அறிவித்தல் கொடுப்பதைத் தவிர்த்து வந்ததுடன், அதனைத் தடை செய்தார்கள்.

கப்ர் ஸ்தானத்தில் கவணிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும், ஆறுதல் தெரிவித்தலும்

10-       புதை குழியின் மேல் புறத்தை உயர்த்தி வைப்பதும், அதனைக் கட்டுவதும், அதனை மெழுகி விடுவதும், அதன் மீது dome - குவிந்த கூறை  எழுப்புவதும் நபி வழியல்ல.

11-       நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை யமன் தேசத்துக்கு அனுப்பிய போது அவரிடம், சிலை எதனையும் அழிக்காது விட வேண்டாம் என்றும், உயரமாக காட்சியளிக்கும் புதை குழி எதனையும் மட்டமாக்காது விட வேண்டாம் என்றும் கூறினார்கள். எனவே உயரமாக காட்சி யளிக்கும் சகல கப்ருகளையும் மட்ட மாக்க வேண்டுமென்பதே நபியவர்களின் வழிமுறையாகும்.

12-       கப்ருக்கு சாந்து பூசுவதையும், அதன் மீது கட்டிடம் எழுப்புவதையும், அதன் மீது எழுத்துக்கள் பொறிப்பதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.

13-       கப்ரை இனங் கண்டு கொள்ள விரும்புவோர், அதற்கோர் அடையாளமாக அதன்மீது ஒரு கல்லை வைத்துக் கொள்ளலாம், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள்.

14-       கப்ருகளை பள்ளிவாசலாக ஆக்கிக் கொள்வ தை​யும், அதன் மீது விளக்கேற்றுவதையும் நபியவர்கள் தடை செய்தார்கள். மேலும் அப்படிச் செய்கின்றவனை  சபித்தார்கள்.

1-   மேலும் அங்கு தொழுவதையும், மற்றும் தங்களின் கப்ரை களியாட்ட இடமாக ஆக்கிக் கொள்வதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.

2-   மேலும் கப்ருகளைக் கேவலப் படுத்துவதும், அதனை மிதிப்பதும், அதன் மீது அமர்ந்து கொள்வதும், அதன் மீது சாய்ந்து கொள்வதும், அவ்வாறே அதனை கௌரவப்படுத்துவதும் நபி வழியல்ல.

3-   மேலும் இறந்து போன​ தங்களின் தோழர்களின் கப்ருகளை, நபியவர்கள் தரிசித்து வந்ததன் நோக்கம் அன்னவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யவும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோறவும்தான். மேலும் கப்றுளைத் தரிசிப்பவர்கள்,

السَّلامُ عَلَيكُمْ أَهْل الدِّيارِ مِنَ المُؤْمِنِينَ والمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ ، أَسْأَلُ اللَّه لَنَا وَلَكُمُ العافِيَةَ

"இங்கு குடியிருக்கும் விசுவாசிகளே! முஸ்லிம்களே! இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக நாம் உங்களிடம் வந்து சேருவோம். நான் எமக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோறுகின்றேன்.” என்று சொல்வது ஸுன்னத்தான காரியமாகும்.

4-   மேலும் மையித்தின் வீட்டாருக்கு ஆறுதல் கூறுவது நபி வழியாகும். எனினும் ஆறுதல் சொல்வதற்காக ஒன்று கூடுவது நபி வழியல்ல. அவ்வாறே மரணித்தவருக்காக மைய வாடியிலோ, அதுவல்லாத இடத்திலோ குர்ஆன் ஓதுவதும் நபி வழியல்ல. 

5-   மேலும் மக்களுக்கு உணவளிப்பதற்காக மையித்தின் வீட்டார் சிரமப் படக்கூடாது, ஏனெனில் அது நபி வழியல்ல. மாறாக மற்றவர்கள் அவர்களுக்கு  உணவு சமைத்துக் கொடுக்கும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

ஸகாத்தும், ஸதகாவும்

ஸகாத்

1-   இவ்விடயத்தில் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் பரிபூரணமானது. அதன் நிஸாப் யாது, அதனை எப்பொழுது, எந்த அளவு  வழங்க வேண்டும்?  அது எவர் மீது கடமை, அதனை யாருக்கு வழங்க வேண்டும்? என்பதை எல்லாம் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் பணக்காரனின் நலனையும், ஏழைகளின் நலனையும் ரஸூல் (ஸல்) அவர்கள் பேணி பாதுகாத்திருக்கின்றார்கள். எனவே செல்வந்த ரின் பொருளில் இருந்து அவர்களுக்கு கேடு எதுவும் ஏற்படாதவாறு ஏழைகளுக்குத் போதுமானதை வழங்குமுகமாக ஸகாத்தை​ நபியவர்கள் கடமையாக்கினார்கள். ​

2-   ஒருவன் ஸகாத் பெறத் தகுதியுடையவன் என்பதை அல்லாஹ்வின் தூதர் அறிந்திருந்தால், அவனுக்கு ஸகாத்தை வழங்குவார்கள். எவனின் நிலவரம் குறித்து நபியவர்கள் அறிந்திருக்க வில்லையோ அப்படியான ஒருவர் அன்னாரிடம்​வேண்டி நின்றால், அவரிடம், இதில் செல்வந்தனுக்கும், சம்பாதிக்கத் திராணியுள்ள வனுக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பார்கள். அதன் பின்னரே அந்த மனிதனுக்கு ரஸூல் (ஸல) அவர்கள் ஸகாத்தை வழங்குவார்கள்.

3-   மேலும் எவ்வூரிலிருந்து ஸகாத் அறவிடப் படுகின்றதோ, அவ்வூரில் ஸகாத் பெறத் தகுதி பெற்றவர்களுக்கு மத்தியில் அதனைப் பகிர்ந்த ளிப்பதே நபிகளாரின் வழிகாட்டலாகும். எனவே அவ்வூர் மக்களிடையே பகிர்ந்தது போக, எஞ்சியது நபிகளாரிடம் எடுத்து வரப்படும். அப்போது அதனை பெறத் தகுதியானோருக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4-   கால் நடைகள், தானியம், கனிகள் ஆகிய செல்வங்களைப் பெற்று விளங்கும் தனவந்தர் களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வர  சேகரிப்பவர்களை நபிகளார் அனுப்புவார்கள்.

5-   ஈத்த மரச் சொந்தக்காரரின் ஈத்தம் பழங்களையும், திராட்சை சொந்தக்காரரின் திராட்சைப் பழங்களையும் மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டாளர்களை நபியவர்கள் அனுப்புவார்கள். ​அவர்களின் மதிப்பீட்டில் எத்தனை “வஸக்” இருக்கின்றன என்பதை நபியவர்கள் அவதானிப்பார்கள். பின்னர் அந்த அளவின் படி அவர்களிடமிருந்து பெற வேண்டிய ஸகாத்தின் அளவை நபியவர்கள்  நிர்ணயிப்பார்கள். (வஸக் என்பது ஓர் அளவு)

6-   மேலும் குதிரை, அடிமை, கோவேறு கழுதை, கழுதை, காய் கறிகள், சாதாரணமாக சேமித்து வைக்க இயலாத கனிகள் என்பவற்றிலிருந்து ஸகாத்தை அறவிட நபிவைர்கள் வழி காட்டவில்லை. எனினும் இதிலிருந்து திராட்சைப் பழத்திற்கும், பேரீத்தம் பழத்திற்கும் ரஸூல் (ஸல்) அவர்கள் விதிவிலக்களித்தார்கள். எனவே இதில் காயந்தது என்றும் காயாதவை என்றும் நபியவர்கள் வேறு படுத்த வில்லை.

7-   ஸகாத்தை அறவிடும் போது அதில் மிகச் சிறந்ததை மாத்திரம் அறவிட்டுக் கொள்வது நபிகளாரின் வழிகாட்டலாகாது. மாறாக அதில் நடுத்தரமானதை அறவிடுவதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும்.

8-   தர்மம் செய்தவர் தன் தர்மத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். எனினும் தன் தர்மத்தைப் பெற்றுக் கொண்ட ஏழை, அதிலிருந்து எதை​யாவது அவருக்கு அன்பளிப்புச் செய்தால் அதனை அவர் உண்ண  நபியவர்கள் அனுமதித்தார்கள்.

9-   சில வேளை முஸ்லிம் மக்களின் நலன் கருதி, நபியவர்கள் ஸதகா நிதியிலிருந்து கடன் வாங்கிக் கொள்வார்கள், பின்னர் அதன் இலாபத்திலிருந்து கடனை திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

10-       மேலும் ஸகாத்தை எடுத்து வரும் மனிதருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள், ​

اللهم بارك فيه وفي ابله

“இறைவா! இவர் விடயத்திலும், இவரின் ஒட்டகத்தின் விடயத்திலும் அபிவிருத்தி செய்வாயாக” என்றும், சில வேளை

 اللهم صل عليه

“இறைவா! இவர் மீது அருள் புரிவாயாக”  என்றும் பிரார்த்தனை செய்வார்கள்.

ஸகாத்துல் பித்ர்

1-   ஸகாத்துல் பித்ருக்காக ஈத்தம் பழம், கோதுமை, மற்றும்  வெண்ணெய் ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாஉ”வை (ஒரு சேரை) கடமையாக்கினார்கள். (ஒரு ஸாஉ​ என்பது நான்கு தடவைகள் இரண்டு கை நிறைய அள்ளி எடுக்கும் ஓர்அளவு)

2-   பெருநாள் தொழுகையைத் தொழ முன்னர் ஸகாத்துல் பித்ரை வழங்குவதே நபி வழியாகும். ஏனெனில் “யார் இதனை தொழுவதற்கு முன்னர் நிறைவேற்றி வைத்தாரோ அதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸகாத்தாகும், எவர் அதனைத் தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்றினாரோ அது ஸகாத்துல்பித்ர்  ஆகாது, மாறாக அதுவும் ஏனைய தர்மத்தைப் போன்ற ஒரு பொதுவான தர்மமே” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

3-  நபியவர்கள் ஸகாத்துல் பித்ரை பொதுவாக எட்டுக் கூட்டத்தினருக்கும் பகிர்ந்தளிக்காமல், குறிப்பாக அதனை. ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள்.    

உபரி –மேலதிக தர்மம்

1-   தனக்குச் சொந்தமானவற்றில இருந்து தர்மம் செய்வதை மிகவும் விரும்புகின்ற ஒரு மாமனிதராக நபிகளார் விளங்கினார்கள். அல்லாஹ் தனக்கு வழங்கியிருப்பதை அதிகரித்து வைத்துக் கொள்ள வேண்டு மென்றோ, தர்மத்தின் காரணமாக தன் செல்வம் குறைந்து விடுமென்றோ நபிகளார் ஒரு போதும் நினைத்ததில்லை.

2-   நபி (ஸல்) அவர்கள் பிறரிடமிருந்து பொற்றுக் கொள்வதை விட, மற்றவர்களுக்குத் தாம் கொடுப்பதிலேயே மிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

3-   தேவைப்பட்ட எவரேனும் நபிகளாரிடம் தன் தேவையை​ முன் வைத்தால், அப்பொழுது தன் தேவையைப் விட மற்றவரின் தேவைக்கு நபிகளார் முன்னுரிமை அளிப்பார்கள். எனவே சில சமயங்களில் அப்படி  தங்களின் உணவையும், இன்னும் சில சமயங்களில் தங்களின் ஆடையையும் பிறருக்கு வாரி வழங்கி யிருக்கின்றார்கள்.

4-   தம்முடன் இருக்கின்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதென்பது நபியவர்களைப் பொருத்த வரை, அது ஒரு அசாத்தியமான  விடயம்.

5-  நபியவர்களின் தர்மம் பல வகைப்பட்டதாக இருந்தது. சில வேளை அண்ணல் நபியவர்கள் நன்கொடையாகவும், இன்னும் சில வேளை ஸதகாவாகவும், இன்னும் சில வேளை அன்பளிப்பாகவும். மற்றும் சில வேளை ஒருவரிடம் ஒரு பொருளை வாங்கிய பின் அப்பொருளையும், அதன் கிரயத்தையும் அதே நபருக்கு வழங்கி விடுவதன் மூலமும், மேலும் சில வேளை எதையேனும் கடனாகப் பெற்ற பின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது அதை விடவும் அதிகமாகத் திருப்பிக் கொடுப்பதன் மூலமும், சில வேளை நன் கொடை எதையும் பெற்றுக் கொண்ட பின்னர் அதற்குப் பகரமாக அதை விடவும் அதிகமாக நன்கொடை வழங்குவதன் மூலமும் என பல வகையிலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தர்மம் செய்து வந்தார்கள்.  

நோன்பு விடயத்தில் நபிகளாரின்

வழி காட்டல்

1-   ரமழான் மாதப் பிறையை திட்டவட்டமாகக் காணாத வரை, அல்லுது சரியான சாட்சி மூலம் அது உறுதிப் படுத்தப்படாத வரையில் ரஸூல் (ஸல்) அவர்கள் ரமழான் மாத நோன்பு பிடிக்க மாட்டார்கள். எனவே பிறையைக் கண்ணால் காணாமலும், சாட்சி மூலம் அது உறுதிப் படுத்தப்படாமலும் இருந்தால் ஷஃபான் மாதத்தை பூரணமான முப்பது நாட்களாகக் கணித்துக் கொள்வார்கள். இவ்விடயத்தில் இதுவே நபி வழியாகும்.

2-   மேலும் முப்பதாவது இரவில் பிறை தென்படாத வாறு மேகம் குறுக்கிட்டிருந்தால், ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூரணப்படுத்திக் கொள்வார்கள். மேலும் மேக மூட்டமுள்ள நாளில் நபியவர்கள் நோன்பு பிடிக்க மாட்டர்கள். அத்தினத்தில் நோன்பு பிடிக்கும் படி உத்தரவு பிரப்பிக்கவும் மாட்டார்கள். 

3-   பிறையை இரண்டு சாட்சிகள் உறுதிப் படுத்தியதும் ஷஃபான் மாதத்தை கை விட்டு ரமழான் மாதத்தை ஏற்றுக் கொள்வதே நபி வழியாகும்.

4-   மேலும் பெருநாள் தொழுகை அறிவிக்கும் நேரம் கழிந்த பின்னர் பிறை கண்டதாக ஒருவர் சாட்சியளித்தால், நபியவர்கள் நோன்பை விட்டுவிடுவார்கள். மற்றவர்களும் நோன்பை விடும் படி கட்டளையிடுவார்கள். பின்னர் மறு நாளில் உரிய நேரத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

5-   நபியவர்கள் அதான் சொன்னவுடன் அவசரமாக நோன்பு திறப்பார்கள். அப்படி செய்யும்படி மற்றவர்களையும் தூண்டினார்கள். மேலும் தான் ஸஹர் செய்ததுடன், மற்றவர்களையும் ஸஹர் செய்யும்படி  தூண்டினார்கள். மேலும் நபியவர் கள் ஸஹர் செய்வதைப் பிற்படுத்தியதுடன் அப்படி பிற்படுத்தி ஸஹர் செய்ய வேண்டு மென மற்றவர்களை ஆர்வமூட்டினார்கள்.

6-   நபிகளார் நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னர் காலையில் சாப்பிடுவார்கள். ஈத்தம் பழம் ஏதும் இருந்தால் அன்னார் அதனை உண்பார்கள். அப்படி இல்லை எனறால் சில மிடக்குத் தண்ணீர் அருந்திக் கொள்வார்கள்.

7-   காலையில் நோன்பை விடும் வேளையில், நபிகளார்,​

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ      

 “தாகம் நீங்கி விட்டது, நரம்புகள் ஈரமாகி விட்டன,                                                  இன்ஷாஅல்லாஹ் இதன் கூலியும் உறுதியாகி              விட்டது” என்று கூறுவார்கள்.

8-   நபிகளார் ரமழான் மாதத்தில் அதிகமாக இபாதத்தில் ஈடுபடுவார்கள். மேலும் இம் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்களும் ரஸூல் (ஸல்) அவர்களும் பரஸ்ரம் அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருப்பார்கள்.

9-   ரஸூல் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் அதிகம் தானதர்மங்கள் வழங்கி வந்ததுடன் அல்குர்ஆன் ஓதல், தொழுதல், திக்ரு செய்தல், இஃதிகாப் இருத்தல் போன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தார்கள்.​

10-       நபியவர்கள் சில வேளை ஏனையோருக்கு அல்லாத பிரத்தியேகமான தனிப்பட்ட சில இபாத்ததுக்களில் ஈடுபடுவார்கள். எனவே ​அன்னார் நோன்பு திறக்காமல் பல நோன்புகளைத் தொடர்ந்து நோற்றிருந்தார்கள். இதனை செய்ய ரஸூலுல்லாஹ் தன் தோழர்களுக்கு​ அனுமதிக்கவில்லை.​ எனினும் அவர்களுக்கு, ஸஹர் வரையில் தொடர்ந்து நோன்பு வைத்திருக்க அனுமதி வழங்கினார்கள்.

 நோன்பு வைத்திருக்கும் போது அனுமதிக்கப்பட்டவையும், அனுமதிக்கப்படாதவையும்

1-   நோன்பாளி ஆபாச பேச்சுக்களிலும், கூச்சல் போடுவதிலும், ஏசுவதிலும், ஏச்சுப் பேச்சுக்க ளுக்குப் பதில் தரும் காரியங்களிலும் ஈடுபடு வதை நபிகளார் தடை செய்தார்கள். மேலும் தன்னை ஏசியவனிடம் “நான் நோன்பு வைத்தி ருக்கின்றேன்” என்று கூறும் படி பணித்தார்கள்.

2-   ரஸூல் (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் இருக்கும் போது நோன்பு வைத்திருக்கின்றார் கள், மேலும் நோன்பை விட்டுமிருக்கின்றார்கள். எனவே இவ்விடயத்தில் ஸஹாபாக்கள் தாம் விரும்பியதைச் செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.​

3-   யுத்தத்தில் எதிரிகளை நெருங்கும் போது நோன்பை விட்டு விடும் படி நபிகளார் உத்தரவிட்டார்கள்.

4-   பிரயாணி நோன்பை விடுவதற்கு, பிரயாணத் தின் தூர எல்லையை வரையரை செய்வது நபிகளாரின் வழிகாட்டலைச் சாராது.

5-   ஸஹாபாக்கள் பிரயாணத்தை ஆரம்பித்ததும் நோன்பை விட்டு விடுவார்கள். அதற்குத் தங்களின் வீட்டு எல்லையைத் தாண்ட வேண்டு மென்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

6-   சில வேளை நோன்பு காலத்தில் ரஸூல் (ஸல்) அவர்கள் பஜ்ரு நேரத்தை அடையும் போது அவர்கள் பெரும்தொடக்கை உடையவராக இருப்பார்கள். எனினும் அந்நேரத்தில் பஜ்ருக்குப் பின் நபிகளார் நோன்பு வைத்திருக்கும் நிலையில் குளித்துத் தங்களின் தொடக்கை நீக்கிக் கொள்வார்கள்.

7-   சில வேளை நபிகளார் ரமழான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் போது தன்  மனைவியர் சிலருக்கு முத்தம் தந்துள்ளார்கள்.

8-   மேலும் நபிகளார் நோன்பு வைத்திருக்கும் போதே மிஸ்வாக் செய்து பல் துலக்கிக் கொள்வார்கள். மேலும் வாய் கொப்பளித்து நாசிக்குத் தண்ணீரும் செலுத்திக் கொள்வார்கள். அவ்வாறே தங்களின் தலையில் தண்ணீரும் ஊற்றிக் கொள்வார்கள்.

9-   நோன்பாளி மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அதற்காக அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டியதில்லை என்றார்கள் காருண்ய நபிகளார் அவர்கள்.

10-     நோயாளியும், பிரயாணியும் நோன்பை விட்டுவிட்டு பின்னர் கழாச் செய்து கொள்ள அவர்களுக்குச்  நபிகளார் சலுகை வழங்கினார் கள். அவ்வாறே தங்களின் உயிர் மீது அச்சம் கொண்டுள்ள   கர்ப்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் நபிகளார் சலுகையளித்தார்கள். 

மேலதிக நோன்பு

பர்ழு நோன்பல்லாத உபரி நோன்புகளை எவ்வாறு நோற்றல் வேண்டுமென்பதற்கும் ரஸூல் ((ஸல்) வழிகாட்டித் தந்துள்ளார்கள். இதன் மூலம் ஆத்மாவுக்கு சிரமம்  ஏற்படாதவாறு உயர் இலட்சியத்தை அடையும் வாயப்பு கிட்டும். ரஸூல் (ஸல்) அவர்கள் எல்லா மாதத்திலும் நோன்பு நோற்று வந்திருக்கின்றார்கள். சில வேளை சில மாதத்தில் நபிகளார் அதிகமாக நோன்பு நோற்று வருவார்கள், அப்பொழுது இனி நபியவர்கள் நோன்பை விடவே மாட்டார்களோ என்று மக்கள் கூறுமளவுக்கு அந்த மாதத்தில் நபிகளாரின் நோன்பு அதிகமாக இருக்கும்.  அப்பொழுது நோன்பு பிடிப்பதை நபிகளார் நிறுத்தி விடுவார்கள். சில மாதத்தில்  நபிகளார் பல நாட்கள்  நோன்பு நோற்காமல் இருந்து விடுவார்கள். அப்போது இனி நபியவர்கள் நோன்பு வைக்க மாட்டார்களோஎன்று மக்கள் சொல்லி விடுவார்கள். அப்பொழுது நபிகளார்  நோன்பு நோற்க ஆரம்பித்து விடுவார்கள். எவ்வாறாயினும்  எந்தவொரு மாதத்திலும் ரஸூல் (ஸல்)  அவர்கள் நோன்பு நோற்காமல் இருந்ததில்லை.  மேலும் ரமழான் மாதம் தவிர்ந்த வேறு எந்த மாதத்திலும் மாதம் முழுதும் நபியவர்கள் நோன்பு நோற்றதில்லை. மேலும் ஏனைய மாதங்களை விடவும் ஷஃபான் மாத்த்தில் நோற்கும் நோன்புகளே அதிகம்.

1-   குறிப்பாக வெள்ளிக்கிழமை  நோன்பு நோற்பதை நபியவர்கள் விரும்பவில்லை. எனினும் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு நோற்று வந்துள்ளார்கள்.

2-    பயனத்திலும் சரி ஊரில் இருக்கும் போதும் சரி ஐயாமுல்பீழ் தினங்களில் நோன்பு நோற்பதை நபியவர்கள் ஒரு போதும் விட்டதில்லை.

3-    எல்லா மாதத்திலும் நபிகளார், பௌர்ணமி நாட்களில் மூன்று தினங்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்.

4-   நபியவர்கள் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது “இவை ரமழான் நோன்புடன் சேர்ந்து ஒரு வருட நோன்புக்குச் சமமாகும்” என்றார்கள். மேலும் நபியவர்கள்,  ஏனைய நாட்களை விடவும் ஆசூரா தினத்தைத் தேடி அத்தினத்தில் நோன்பு நோற்பார்கள். மேலும் அன்றைய நோன்பு கடந்த ஆண்டின் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகும் என்றும் கூறினார்கள்.

5-   மேலும் அரபா தினத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அன்றைய நோன்பு கடந்த வருடத்தினதும், எஞ்சிய வருடத்தினதும் பாவங்களுக்குப் பிராயச் சித்தமாகும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

6-   வருடம் பூராவும் நோன்பு நோற்பது நபிகளாரின் வழியைச் சார்ந்ததல்ல. ஏனெனில் “வருடம் பூராவும் நோன்பு நோற்றவன் நோன்பு நோற்கவும் இல்லை, அவன் நோன்பை விடவும் இல்லை” என்று நபிகளார் கூறினார்கள்.

7-   சில வேளை உபரி – மேலதிக நோன்பு பிடிக்க நிய்யத் ​வைத்திருந்த நபியவர்கள், பின்னர் அந்த நோன்பை விட்டு விடுவதுமுண்டு. மேலும் சில வேளை தங்களின் இல்லாளிடம் நபியவர்கள் சென்று “உங்களிடம் ஆகாரம் ஏதும் உண்டா?” என்பார்கள். அதற்கு அவர்கள் “இல்லை” என்றால், நபியவர்கள் “அப்படியாயின் நான் நிச்சயமாக நோன்பு வைத்துள்ளேன்” என்று சொல்வார்கள்.

8-    மேலும் “உங்களில் நோன்பு வைத்திருக்கும் எவரேனும்  விருந்துக்கு அழைக்கப்படால், அவர் “நான் நிச்சயமாக நோன்பு பிடித்திருக்கின்றேன்” என்று கூறிவிடுவாராக” என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ​      

​​

இஃதிகாப் இருக்கும் போது

1-  ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வபாத் வரையில் ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களும் ‘இஃதிகாப்’ இருந்து வந்தார்கள். எனினும் அன்னாருக்கு ஒரு முறை ‘இஃதிகாப்’ இருக்க கிடைக்கவில்லை. எனவே அதனை அன்னார் ஷவ்வால் மாதத்தில் கழா செய்து கொண்டார்கள்.

2-   நபியவர்கள் ஒரு தடவை ரமழான் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களிலும், இன்னொரு தடவை நடுப் பத்து நாட்களிலும், மற்றொரு தடவை கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாப் இருந்து, அதில் லைலதுல் கத்ரை அடைந்து கொள்ள முயன்றார்கள். பின்னர் அது பிந்திய பத்தில்தான் இருக்கின்றது என்பது அன்னாருக்குத் தெளிவாக தெரிய வந்ததும், தாங்கள் இறையடி சேரும் வரையில், அன்னார் தொடர்ந்தும் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.​

3-   நோன்பின்றி நபியவர்கள் இஃதிகாப் இருந்ததில்லை.

4-   தான் தனியாக பள்ளிவாசலில் ஒதுங்கியிருக்க அங்கு தனக்கொரு கூடாரம் அடிக்குமாறு ரஸூல் (ஸல்) அவர்கள்  உத்தரவு பிரப்பிப்பார்கள்.

5-   ரஸூல் (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நினைத்தால், பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றி விட்டு இஃதிகாபைத் தொடங்குவார்கள்.​

6-   ரஸூல் (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்தில் அன்னாருக்கு விரிப்பும், கட்டிலும் போடப்படும். எனவே நபியவர்கள் தங்களின் அந்தக் கூடாரத்திற்குள் சென்று அதில் தனியாக இருப்பார்கள்.   ​

7-   நபியவர்கள் இஃதிகாப் இருக்கும் போது, மனிதத் தேவையை நிறை வேற்றிக் கொள்ள வல்லாது வேறு எதற்காகவும் தங்களின் இல்லத்திற்குச் செல்ல மாட்டார்கள்.

8-   சில வேளை இஃதிகாபில் இருக்கும் நபியவர்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் மாதத் தீட்டுடையவராய் இருக்கும் நிலையிலும் தங்களின் தலையை அவர் வாரி விடும் பொருட்டு, அவர்களின் வீட்டுக்குள் தம் தலையை  வைப்பார்கள்.

9-   இஃதிகாபில் இருக்கும் நபிகளாரைப் பார்க்க சில வேளை அன்னாரின் மனைவியர் எவரும் இரவில் வருவர். பின்னர் அவர்கள் அங்கிருந்து எழுந்து போகும் போது, நபியவர்களும் அவருடன் எழுந்து சென்று அவரை அனுப்பி வைப்பார்கள்.

10-               நபியவர்கள் இஃதிகாபில் இருக்கும் வேளையில் எந்தவொரு மனைவியுடனும் சல்லாபம் செய்ததில்லை. அவ்வாறே அவர்களை முத்தமிடவோ, வேறு எந்தக் காரியமோ செய்யவுமில்லை.

11-               நபியவர்கள் எல்லா ஆண்டுகளிலும் பத்து தினங்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள். எனினும் அன்னாரின் உயிர் எடுக்கப்பட்ட ஆண்டு அன்னார் இருபது தினங்கள் இஃதிகாப் இருந்தார்கள்.   

ஹஜ்ஜும், உம்ராவும்

(1)        நபிகளாரின் உம்ரா

1-   ரஸூல் (ஸல்) அவர்கள் நான்கு தடவைகள் உம்ரா செய்தார்கள். இதில் ஒன்று உம்ரதுல் ஹுதைபிய்யாவாகும். இது முஷ்ரிகீன்கள் ரஸூல் (ஸல்) அவர்களை மக்காவுக்குள் வர விடாமல் அவர்களை அங்கு வைத்து தடுத்த போது நிகழ்ந்தது. எனவே நபியவர்கள், தடுக்கப்பட்ட அவ்விடத்தில் குர்பானீ கொடுத்து, முடியையும் சிறைத்து இஹ்ராம் உடையைக் கலைந்தார்கள்.

2-   இரண்டாவது உம்ரா, உம்ரதுல் கழா எனப்படும். முந்திய ஆண்டு நபியவர்கள் ஹுதைபிய்யாவில் வைத்து உம்ரா செய்ய இயலாதவாறு தடுக்கப் பட்டார்கள் அல்லவா? எனவே அதனைக் கழா செய்யுமுகமாக நபியவர்கள் செய்த உம்ராவே இந்த உம்ரதுல் கழா என்பது.  

3-   நபியவர்களின் மூன்றாவது உம்ரா, அன்னார் தங்களின் ஹஜ்ஜுடன் சேர்த்து ஒன்றாகச் செய்த உமராவாகும்.

4-   நபியவர்களின் நான்காவது உம்ரா, அன்னார் ஜஃரானா எனும் இடத்திலிருந்து மேற் கொண்ட உம்ராவாகும்.

5- நபியவர்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டுச் செல்லும் வேளையில்,   மக்காவின் எல்லைக்கு வெளியில் அவர்களுக்கு  ஏதேனும் இடையூறு ஏற்பட்டு, அதன் காரணமாக அதனை  மக்காவின் எல்லைக்கு வெளியில் முறித்துக் கொண்ட எந்தவொரு உம்ராவும் இல்லை. மாறாக ஹுதைபிய்யாவில் இடை நிறுத்தப்பட்ட உம்ரா உள்ளிட்ட நபியவர்களின் எல்லா உம்ராவும் மக்காவின் எல்லைக்குள்ளேயே நிகழ்ந்தன.     

 நபியவர்கள் வருடத்தில் ஒரு உம்ரா மாத்திரமே செய்தார்கள். அன்னார் வருடத்தில் இரண்டு தடவைகள் உம்ரா செய்யவில்லை.

5-   நபியவர்களின் எல்லா உம்ராவும் ஹஜ்ஜின் மாதங்களிலேயே நிகழ்ந்தன. அதாவது ஷவ்வால், துல்கஃதா மற்றும் துல்ஹிஜ்ஜா மாதங்களிலேயே நிகழ்ந்தன.

6-   மேலும் “ரமழான் மாதத்து உம்ரா, ஒரு ஹஜ்ஜுக்குச் சமமாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.​              

 (2) நபிகளாரின் ஹஜ்ஜு

1.   ஹஜ்ஜு கடமையாக்கப்பட்டதும் நபியவர்கள் தாமதமின்றி உடனே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்கள். நபியவர்கள் ஒரேயொரு ஹஜ் மாத்திமே செய்தார்கள். அதனை உம்ராவுடன்  இணைத்து மேற் கொண்டார்கள்.

2.   ழுஹர் தொழுகைக்குப் பின்னர் ஹஜ்ஜுக்காக நபியவர்கள் நிய்யத் வைத்து,

لبيك اللهم لبيك , لبيك لا شريك لك لبيك , إن الحمد والنعمة لك والملك , لا شريك لك ، لبيك   

3.    “அல்லாஹ்வே! உன் அழைப்பை ஏற்றுக் கொண்டேன், உன் அழைப்பை ஏற்றுக் கொண்டேன் உனக்கு இணை எதுவுமில்லை, சர்வ புகழும், அருளும், ஆட்சி அதிகாரங்களும் உனக்கே சொந்தம், உனக்கு இணை எதுவுமில்லை.” என்ற தல்பியாவை தோழர்களும் கேட்கும் படியாக சப்தமிட்டுச் சொன்னார்கள். மேலும் இதனை ஓசையுடன் சொல்லும் படி தோழர்களுக்கும் உத்தரவிட்டார்கள். மேலும் மக்கள் அதிகமாக இருந்த போதும் அவர்கள் குறைவாக இருக்த போதும் அவர்களுக்குச் சிரமம் தராது நபியவர்கள் எப்போதும் தல்பியாவைக் கூறிக் கொண்டிருந்தார்கள்​.

3- தம் தோழர்கள் இஹ்ராம் அணியும் போது  ஹஜ்ஜின் மூன்று வகையில் தாம் விரும்பிய படி நிய்யத் வைத்துக் கொள்ள அவர்களுக்கு, நபியவர்கள் வாய்ப்பளித்தார்கள். மேலும் அவர்கள் மக்காவை நெருங்கியதும், எவரெல்லாம் ஹஜ்ஜுக்கென்றும், கிரான் ஹஜ்ஜுக்கென்றும் நிய்யத் வைத்தார்களோ அவர்களில் தம் வசம் குர்பானீ   வைத்தில்லாத ஹாஜிகள் தங்களின் நிய்யத்தை உம்ராவின் பக்கம் மாற்றிக் கொள்ளும் படி கூறிக் இதனை ஒரு ஸுன்னத்தாகவும் ஆக்கினார்கள்.

4-   நபியவர்கள் பல்லக்கின் உள்ளே அமர்ந்து கொள்ளாது ஒட்டகத்தின் மீது இருந்து கொண்டு தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். அவர்களின் உணவு  ஒட்டகத்தின் அடிப் பாகத்திலிருக்கும் பையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் மக்காவை அடைந்த போது தங்களுடன் குர்பானீ  வைத்தில்லாத அனைவரும்  தங்களின் ஹஜ்ஜை உம்ராவின் பக்கம் மாற்றி, உம்ராவை நிறைவேற்றி விட்டு, தங்களின் இஹ்ராமை நீக்கும் படியும், தங்களுடன் குர்பானீ வைத்திருப்பவர்கள், இஹ்ராமுடன் தொடர்ந்து இருக்குமாறும் உத்தரவிட்டார்கள். பின்னர் அங்கிருந்து கிளம்பி “தூதுவா”​ என்ற இடத்தை வந்தடைந்தார்கள். அங்கு துல் ஹிஜ்ஜா மாதம் நான்காம் நாள், ஞாயிறு இரவைக் கழித்தார்கள். அங்கு ஸுப்ஹுத் தொழுகையையும் நிறைவேற்றினார்கள். மேலும் அங்கு குளித்து விட்டு அல் ஹஜூன் என்ற இடம் தெரியும்படியான ஸன்யதுல் உல்யாவின் ஊடாக மக்காவுக்குள் பிரவேசித்தார்கள். ​

பின்னர் நபியவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் பிரவேசித்தார்கள். அங்கு தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையைத் அன்னார் தொழவில்லை. உடனே கஃபாவை நெருங்கினார்கள். ஹஜருல் அஸ்வதுக்கு நேரில் நின்று கொண்டதும் அதனை முத்தமிட்டார்கள். அதற்காக முண்டியடிக்க வில்லை. பின்னர் தங்களின் வலது பக்கமாக வந்து, கஃபாவை தங்களின் இடது புறத்திலாக்கிக் கொண்டார்கள். கஃபாவின் வாசலிலும், அதன் பீலிக்கடியிலும், அதன் தூண் உள்ள இடங்களிலும் நபியவர்கள் துஆ எதுவும் கேட்கவில்லை. எனினும் ருக்னுல்  யமானீயிக்கும், மற்றும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையில்  நபியவர்கள், துஆ கேட்டிருக்கின் றார்கள். (ருக்ன் என்பது, தூண், மூலை எனும் கருத்தைத் தரும். கஃபாவின் நான்கு தூண்களும், மூலைகளும் அவை அமைந்திருக்கும் திசையை அடிப்படையாக வைத்து பல்வேறு பெயர்கள் கொண்டு  அழைக்கப்படுகின்றன.  இதன்படி  கஃபாவின் கிழக்குத் திசை  மூலை “ அர்ருக்னுஷ் ஷர்கீ” என்றும், யமன் திசை மூலை அர்ருக்னுல் யமானீ என்றும், ஷாம் தேச திசையிலிருக்கும் மூலை அர்ருக்னுஷ் ஷாமீ  என்றும், இராக்குத் திசை மூலை  அர்ருனுல் இராகீ” என்றும் வழங்கப்பட்டு வருகின்றன.) நபியவர்கள்  யமன் தேசத் திசையிலிருந்த  ருக்னுல் யமானிக்கும் மற்றும் ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள தூணுக்கும் இடையில் வைத்து,

رَبَّنَا آتِنَا في الدُّنيا حَسَنَةً وفي الآخِرَةِ حَسَنَةً وِقِنَا عَذَابَ النَّارِ

“நம் இரட்சகனே! நமக்கு இவ்வுலகிலும் நல்லதைத் தந்து மறு உலகிலும் நல்லதைத் தந்தருள்வாயாக”

என்று பிரார்த்தனை செய்தார்கள். தவாபின் போது இது தவிர குறிப்பாக வேறு துஆ எதனையும் ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.

மேலும் தவாபின் முதல் மூன்று சுற்றுக்களின் போதும் நபியவர்கள் ரமல் செய்தார்கள். ரமல் என்பது வேகமாக நடப்பதைக் குறிக்கும். அதாவது இச்சந்தர்ப்பத்தில் ரஸூல் (ஸல்) தங்களின் எட்டுக்களை நெருக்கமாக வைத்து வேகமாக நடந்தார்கள். அவ்வமயம் தங்களின் புயத்தின் மேல் போட்டிருந்த  போர்வையின் ஒரு முனையை தங்களின் ஒரு தோலுக்கு மேலால் போட்டுக் கொண்டார்கள்., மேலும்​ தங்களின் மறு தோலையும், புயத்தையும் திறந்து வைத்துக் கொண்டார்கள். இதுவே ரமலின் முறையாகும்.

மேலும் ஹஜருல் அஸ்வதுக்கு நேரில் வருகின்ற போதெல்லாம் நபியவர்கள் தலைப்பாகம் வளைந்த தங்களின் ஊன்று கோலைக் கொண்டு அதைத் தொட்டு தடியை முத்திக் கொண்டார்கள். அப்போது ​​ اللهُ أُكْبَرُ என்றும் கூறினார்கள். 

மேலும் நபியவர்கள் ருக்னுல் யமானியிடம் வந்ததும் அதனைத் தொட்டார்கள். எனினும் அதனைத் தொட்ட தங்களின் கையை நபியவர்கள் முத்திக்கொள்ள வில்லை.  

நபியவர்கள் தங்களின் தவாபை நிறைவு செய்ததும், மகாமு இபராஹீமுக்குப் பின்னால் வந்து நின்று, 

واتخذوا من مقام إبراهيم مصلى

என்ற வாசகத்தை ஓதினார்கள். அதன் பின்னர், மகாமு இக்ராஹீமை தமக்கும், கஃபாவுக்கும் மத்தியில் ஆக்கிக் கொண்டவாறு இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்ஆத்திலும்,

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ   قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ

சூரா காபிரூன், சூரா இஹ்லாஸ் ஆகிய இரண்டு ஸூராவையும் ஓதினார்கள்.

பின்னர் ஸபா குன்றின் பக்கம் சென்றார்கள். அதனை நெருங்கியதும்.

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّـهِ [البقرة: 159]

 என்று ஓதினார்கள். அதனை அடுத்து

أبدأ بما بدأ الله به

 “அல்லாஹ் எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ அவ்விடத்திலிருந்து தவாபை ஆரம்பம் செய்கின்றேன்” என்று கூறினார்கள். பின்னர் அந்தக் குன்றின் மேல் ஏறி பைதுல்லாஹ் தெரியும் படியாக நின்று கிப்லாவை முன்னோக்கி னார்கள். அதனை அடுத்து அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி, அவன் மீது தக்பீர் கூறினார்கள். பின்னர்,

لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا إله إلا الله وحده، أنجز وعده، ونصر عبده، وهزم الأحزاب وحده

"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் எவரும், எதுவும் இல்லை, அவன் ஒருவன் அவனுக்கு இணை எதுவுமில்லை. ஆட்சி அதிகாரமும், சர்வ புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்து வஸ்துக்களின் மீதும் வல்லமையுள்ளவன். அல்லாஹ்வைத் தவிற வணக்கத்திற்குத் தகுதியானவன் எவரும், எதுவும் இல்லை. அவன் ஒருவன், அவன் தன் வாக்கை நிறைவேற்றியவன், தன் அடியானுக்கு உதவி செய்தவன், படைகளைத் தனியாகத் தோழ்வி யடையச் செய்தவன்.” எனும் வாசகங்களை மூன்று தடவைகள் ஓதி, அதனிடையே பிரார்த்தனை செய்தார்கள்.

பின்னர் அங்கிருந்து இறங்கி மர்வாவுக்கு நடந்து வந்தார்கள். அப்போது நபிகளாரின் பாதங்கள் இரண்டும் பல்லத்தாக்கின் நடுப் பகுதிக்கு இறங்கி வந்த போது,  அங்கிருந்து பல்லத்தாக்கை கடக்கும் வரையில் இரண்டு பச்சை நிற களங்கரை விளக்கிற்கும் அடையாள விளக்கிற்கும் இடையில் ஓடிச் சென்றார்கள். நபியவர்கள் தங்களின் ஸஃயுவை ஸபா, மர்வாவுக்கிடையிலான ஓட்டத்தை கால் நடையாக ஆரம்பித்தார்கள். பின்னர் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்ததும், ஒட்டகத்தின் மேலேறி ஸஃயுவை நிறைவு செய்தார்கள்.

நபியவர்கள் மர்வாவை வந்தடைந்ததும், அதன் மேல் ஏறி நின்றார்கள். பின்னர் கிப்லாவை முன்நோக்கி, அல்லாஹ்வின் மீது தக்பீர் கூறி அவனை ஏகப்படுத்தி, ஸபா குன்றின் மீது செய்தது போலவே இங்கும் செய்தார்கள் 

மர்வாவில் தங்களின் ஸஃயுவை நிறைவு செய்து கொண்ட நபிகளார் தம் வசம் குர்பானீ இல்லாத சகல காரின் மற்றும் முப்ரித்  ஹாஜிகளும் தங்களின் இஹ்ராமைக் கட்டாயம் கலைந்து விட வேண்டும், என கட்டளையிட்டார்கள். (ஹஜ்ஜையும், உம்ராவையும் ஒன்றாகச் சேர்த்து நிறைவேவற்ற வென இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்துக் கொண்ட யாத்திரி “காரின்” என்றும், உம்ராவுக்காக நிய்யத் வைத்து இஹ்ராம் அணிந்து கொண்டு, மக்காவுக்குச் சென்று, உம்ராவின் கடமைகளை நிறைவேற்றிய பின், துல் ஹிஜ்ஜா பிறை எட்டாம் நாள் மக்காவில் வைத்து ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுக் கடமைகளை நிறை வேற்றும் ஒருவர் முதமத்திஉ என்றும்  மேலும் காரினுக்கும், முதமத்திஉவுக்கும் மாறாக   ஹஜ்ஜைத் மாத்திரம் நினைத்து  இஹ்ராம் அணிந்து  கொண்ட ஹாஜி முப்ரித் என்றும் அழைக்கப்படுவர்)   

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள், தான் கொடுக்க வேண்டிய குர்பானீ பிராணியை தம் வசம் வைத்திருந்ததன் காரணமாக அன்னார், உம்ராவை நிறைவேற்றிய பின்னர், தங்களின் இஹ்ராமைக் கலைந்து விடவில்லை.  அன்னார் ஹஜ்ஜை நிறைவேற்றும் காலம் வரையில் தங்களின் இஹ்ராம் உடையில்  தொடர்ந்து இருந்தார்கள். மேலும் “நான் என் காரியத்தை முன்னெடுத்து விட்டால், அதிலிருந்து பின் வாங்க மாட்டேன். நான் என்னுடைய குரபானீயைக் கொண்டு வராதிருந்தால், நான் இதனை உம்ராவாக மாற்றிக் கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.

பின்னர் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளும் பொருட்டு மொட்டையடித்துக் கொண்டோருக்கு மூன்று தடவைகளும், முடியைக் குறைத்துக் கொண்டோருக்கு ஒரு தடவையுமாக ரஸூல் (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.

ரஸூல் (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த காலத்தில், தர்வியா - எனும் துல்ஹிஜ்ஜாவின் எட்டாம் நாள் வரையில் மக்காவுக்கு வெளியே இருந்த தங்களின் வதிவிடத்தில் தொழுகையை கஸ்ரு செய்து- சுறுக்கித் தொழ வைத்தார்கள். 

தர்வியா தினம் காலையில் ரஸூல் (ஸல்) அவர்கள்  தன்னுடன் இருப்பவர்கள் சகிதம் மினாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்பொழுது முன்னர் தங்களின் இஹ்ராமைக் கலைந்தவர்கள், தாமிருக்கும் இடத்தில் இருந்த வாறே ஹஜ்ஜுக்காக இஹராம் அணிந்து நிய்யத் வைத்தனர். 

மினாவை சென்றடைந்த நபிகளார் அங்கு ழுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் சேர்த்து இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகச் சுறுக்கித் தொழுதார்கள். (இப்படித் தொழுவது ஜம்மு கஸ்ர் எனப்படும்) அன்றிரவு நபியவர்கள் அங்கு தங்கினார்கள். சூரியன் உதயமானதும் அங்கிருந்து அரபாவுக்குச் சென்றார்கள். மேலும் நபிகளாரின் தோழர் சிலர் தல்பியாவை முழங்கினர். இன்னும் சில தோழர்கள், தக்பீர் முழங்கினர். இதனை செவி மடுத்துக் கொண்டிருந்த ரஸூல் (ஸல்) அவர்கள், எவரையும் ஆட்சேபிக்க வில்லை. மேலும் தங்களின் கட்டளைப்படி தனக்காக நமிராவில் அடிக்கப் பட்டிருந்த கூடாரத்தை அன்னார் கண்டார்கள். நமிராவானது அரபாவைச் சேர்ந்த இடமல்ல. இது அரபாவின் கிழக்குத் திசைக்குரிய ஒரு கிராமம். எவ்வாறாயினும் நபியவர்கள் அதில் இறங்கினார்கள். சூரியன் உச்சியிலிருந்து விலகும் வரை அதில் இருந்தார்கள். பின்னர் தங்களின் “கஸ்வா” எனும் ஒட்டகத்தை கொண்டு வரும் படி உத்தரவிட்டார்கள். நபியவர்களின் கட்டளைப்படி ஒட்டகத்தில் ஆசனம் பூட்டப்பட்டது. ​

பின்னர் நபியவர்கள் “உர்னா” பூமியின் பத்ன் அல் வாதி வரை சென்றார்கள். அங்கு தங்களின் ஒட்டகத்தின் மீது இருந்தவாறு மக்களுக்கோர் மகத்தான உரை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாத்தின் அடிப்படைகளை உறுதிப்படுத்தி, ஷிர்க்கின் அடிப்படைகளையும், மௌட்டீகச் செயல்களையும் கண்டித்தார்கள். மேலும் வேதங்கள் அனைத்தும் ஒருமித்து ஹராம் என்று கூறியவற்றை உறுதிப்படுத்தி, ஜாஹிலிய்ய- மௌட்டீக விடயங்களையும், ஜாஹிலிய்யத்தான வட்டியையும் தங்களின் பாதத்துக்கடியில் போட்டு மிதித்தார்கள். மேலும் பெண்கள் விடயத்தில் நல்ல முறையைக் கையாலுமாறு உபதேசம் செய்தார்கள். மேலும் அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு  தங்களின் சமூகத்திற்கு வஸிய்யத் செய்தார்கள். மேலும் இவற்றை ஏற்றுக் கொள்ளு மாறும் அவர்களை வேண்டிக்கொண்டார்கள். அத்துடன் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து தாங்கள் எத்தி வைத்து விட்டதாகவும், பொறுப்பை நிறைவேற்றி விட்டதாகவும், உபசேம் செய்து விட்டதாகவும் பிரகடனம் செய்தார்கள். 

நபிகளார்,  பிரசங்கத்தை நிறைவு செய்ததும், அன்னாரின் கட்டளைப்படி பிலால் (ரழி) அவர்கள் அதானும், இகாமத்தும் சொன்னார்கள். அதை அடுத்து ரஸூல் (ஸல்) ழுஹரை இரண்டு ரக்அத்தாகச் சுறுக்கித் தொழுதார்கள். அதில் கிராஅத்தை மெளனமாக ஓதினார்கள். அன்று ஒரு ஜும்ஆ தினம் என்பது குறிப்பிடத் தக்கது. பின்னர் பிலால் (ரழி) அவர்கள் மீண்டும் இகாமத் சொன்னார்கள். அப்போது நபியவர்கள் அஸரையும் இரண்டு ரக்அத்தாகச் சுருக்கித் தொழுதார்கள். அவ்வமயம் அவர்களுடன் மக்கா வாசிகளும் இருந்தனர். எனினும் அவர்கள் தொழுகையைப் பூரணப்படுத்தித் தொழ வேண்டு மென்றோ, அல்லது அவர்கள் ஜம்உ செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றோ நபியவர்கள் அவர்களுக்கு உத்தரவிடவில்லை.

ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையை நிறைவேற்றிய பின்னர்  ஒட்டகத்தில்  ஏறி அரபாவுக்கு வந்தார்கள். அன்று நபியவர்கள் நோன்பு வைத்துள்ளார்களோ என்று மக்கள் ஐயம் கொண்டிருந்த போது, நபியவர்கள் அரபாவில் தங்குமிடத்தில் இருக்கும் போது அன்னாருக்கு மைமூனா (ரழி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் அனுப்பினார்கள். அப்பேது ரஸூல் (ஸல்) அவர்கள் அதனைக் குடித்தார்கள். அங்கிருந்த மனிதர்களும் அதனை அவதானித்துக் கொண்டி ருந்தனர். பின்னர் நபியவர்கள் மலைக்குக் கீழே கற்கள் நிறைந்த ஓர் இடத்தில் கிப்லாவை முன்னோக்கியவாறு நின்றார்கள். அங்கு நபிகளார் தங்களின் ஒட்டகத்தின் மீதமர்ந்து அதன் கயிற்றைத் தங்களின் முன்னால் வைத்துக் கொண்டு, பிரார்த்தனை செய்யவும், இரைஞ்சவும் ஆரம்பித்தார்கள். சூரியன் மறையும் வரையில் இதில் ஈடுபட்டார்கள்.   

பின்னர் “பத்னு உர்னா”வை விட்டும் எல்லோரையும் எழும்பும்படி நபியவர்கள் கட்டளை யிட்டார்கள். பின்னர் தாங்கள் தங்கிருந்த இடத்தைக் காட்டி “ நான் இவ்விடத்தில் தங்கியுள்ளேன். அரபாவின் எல்லா இடமும் “மௌகப்” தான்- தங்குமிடம்தான்” என்று கூறினார்கள்.

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, ஒரு ஏழை உணவு வேண்டி கையேந்துவது போன்று தங்களின் இரு கரங்களையும் தமது நெஞ்சின் பக்கமாக உயர்த்தி வைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் நபிகளார் “பிராத்தனையில் சிறந்தது அரபாவின் பிரார்த்தனையாகும், நானும் எனக்கு முந்திய நபிமார்களும் சொன்ன வார்த்தைகளில் சிறந்தது,

لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير

“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் எவனும் இல்லை, எதுவும் இல்லை, அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை. ஆட்சி அதிகாரமும், சர்வ புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்து வஸ்துக்களின் மீதும் வல்லமையுள்ளவன் எனும் வார்த்தையாகும்” என்றும் கூறினார்கள்.

வானத்தின் சூரியனின் மஞ்சல் நிறம் யாவும் நீங்கி அது முற்றாக மறைந்து விட்ட போது, நபியவர்கள் உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களைத் தமக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டு மிக அமைகியாக அரபாவிலிழுந்து புறப்பட்டார்கள். மேலும் தனது ஒட்டகத்தின் கடிவாளத்தை தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டார்கள். அதன் காரணமாக அதன் தலை அன்னாரின் ஆசனத்தின் ஓரத்தைத் தொடக் கூடிய வாறு இருந்தது. அப்பொழுது நபிகளார், “ஜனங்களே! அமைதி இருங்கள். ஏனெனில் தீவிரப்படுவதில் நன்மை இல்லை” என்று கூறினார்கள்.​​ 

 ரஸூல் (ஸல்) அவர்கள் ஒடுக்கமான ஒரு வழியால் வெளியேறினார்கள்.  அப்போது அவசரமோ, மந்தகெதியோ இல்லாமல் சாதாரணமாக நடந்து சென்றார்கள். வழி விசாலமாகவுள்ள இடத்தில்  வேகமாக நடந்தார்கள்.

          ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வழியில் தல்பியாவை நிறுத்தாமல் கூறிக் கொண்டே சென்றார்கள். இடை வழியில் நபிகளாருக்குச் சிறு நீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அன்னார் சிறு நீர் கழித்த பின்னர் சுத்தம் செய்து கொண்டார்கள். மேலும் அவ்விடத்தில் தொழாமல் நடையைத் தொடர்ந்தார்கள். அப்படியே முஸ்தலிபாவை வந்தடைந்த ரஸூலுல்லாஹ் அங்கு தொழுகைக்காக வுழூஃ செய்து கொண்டார்கள். பின்னர் அதானும், இகாமத்தும் சொல்லும் படி பிலால் (ரழி) அவர்களைப் பணித்தார்கள். பொதிகளை இறக்கி வைத்து, ஒட்டகங்கள் படுத்துக் கொள்ளும் முன்னர் மஃரிபுத் தொழுகையைத் தொழுதார்கள். ஸஹாபாக்கள் தம் பொதிகளை இறக்கிய பின்னர் மீண்டும் இகாமத் சொல்லும் படி நபியவர்கள் பணித்தார்கள். பின்னர் அதான் இன்றி இகாமத்துடன் இஷாத் தொழுகையைத் தொழுதார்கள். இரண்டு தொழுகைக்கும் இடையில் வேறு எதுவும் ரஸூல் (ஸல்) அவர்கள் தொழவில்லை. பின்னர் ஸுபுஹு வரை நித்திரை கொண்டார்கள். எனவே அன்றிரவு நபிகளார் கண் விழித்திருக்கவில்லை. ​

அன்றிரவு சந்திரன் மறைந்ததும்  தங்களின் குடும்பத்திலுள்ள பலவீனர்களுக்கு, பஜ்ரு உதயமாக முன்னர் மினாவுக்குப் புறப்பட்டுச் செல்ல, நபியவர்கள் அனுமதியளித்தார்கள். எனினும் சூரியோதயத்திற்கு முன் கல் எறிய வேண்டாம் என அவர்களை நபிகளார் பணித்தார்கள்.

          பஜ்ரு உதயமானதும் அதான் கூறப்பட்டது. பின்னர் அதன் ஆரம்ப நேரத்திலேயே  இகாமத்தின் பின்  ரஸுல் (ஸல்) அவர்கள் பஜ்ருத் தொழுகையை  தொழுதார்கள்.  பின்னர் ஒட்டகத்தில் ஏறி முஸ்தலிபாவில் உரிய இடத்திற்கு வந்தார்கள். மேலும் முஸ்தலிபாவின் எல்லா இடமும் ஹாஜிகள் தரிப்பதற்குரிய  இடம்தான், என்று நபிகளார் ஜனங்களுக்கு அறிவுருத்தினார்கள். பின்னர் கிப்லாவை முன்னோக்கி நன்றாக விடியும் வரையில் துஆ- பிரார்த்தனையிலும், மற்றும்  தக்பீர் சொல்வதிலும், திக்ரு செய்வதிலும் ஈடுபட்டார்கள். பின்னர் பழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களையும் தம்முடன் ஏற்றிக் கொண்டு,  சூரியன் உதயமாக முன்  முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள்.

ஜம்ராவில் எறிய ஏழு கற்களைப் பொறுக்கி எடுக்க முடியாமல், இப்னு அப்பாஸ் அவர்கள் வழியில் சிரமப் பட்டார்கள். அதனைக் கண்ட நபியவர்கள் அதனைத் தம் கையுள் வைத்து நொறுக்கினார்கள். பின்னர் “இது  போன்ற கற்களைக் கொண்டு எறியுங்கள். மேலும் மார்க்க விடயத்தில் நீங்கள் எல்லை மீறி விடுவதையிட்டும் உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்” என்று​ கூறினார்கள்.

நபியவர்கள் “பத்னு முஹஸ்ஸிரை” வந்தடைந்த போது நடையின் வேகத்தைக் கூட்டினார்கள்.  மேலும் ஜம்ரதுல் குப்ரா ஊடாக வெளியேறும் மத்திய பாதையால் சென்றார்கள். தல்பியா கூறிய வாறு  மினாவை வந்தடைந்த நபியவர்கள்,  கல்லெறியத் துவங்கினார்கள்.  எனவே சூரிய உதயத்தின் பின் நபியவர்கள் ஒட்டகத்தில் இருந்த வாறு ஓடையின் பள்ளத்திலிருந்து ஜம்ரதுல் உக்பாவுக்குக் கல் எறிந்தார்கள். அவ்வமயம் தங்களின் இடது புறத்தில் கஃபாவையும் வலது புறத்தில் மினாவையும் வைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் ரஸுலுல்லாஹ் தக்பீர் சென்னார்கள்.  

பின்னர் நபியவர்கள் மினாவிலிருந்து திரும்பினார் கள். அதனையடுத்து மக்களுக்குத் தெளிவான  பிரசங்கம் ஒன்று நிகழ்த்தினார்கள். அவ்வமயம்  குர்பானீ கொடுக்கும் நாளின் கண்ணியத்தையும் அதன் சிறப்பையும் பற்றி மக்களுக்கு எடுத்து விளக்கினார்கள். அவ்வாறே மக்காவின் கண்ணியத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் கள். மேலும் அல்லாஹ்வின் வேதத்தின் பிரகாரம் அவர்களை வழி நடாத்தும் தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அத்துடன் ஹஜ்ஜின் கிரியைகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் மன்ஹருக்கு-  அதாவது கால்நடைகள் அறுக்கும் இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் சென்றார்கள். அவ்விடத்தில் நூறு ஒட்டகங்கள் அறுக்கப்பட்டன. அதில் அறுபத்து மூன்று ஒட்டகங்கள​  நபியவர்கள் அறுத்தார்கள். அதில் எஞ்சியதை  அறுக்கும்படி அலீ (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஒட்டகங்கள் அறுக்கப்படும்போது அதன் இடது முன் கால்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதனை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறும், அதிலிருந்து எதனையும் கசாப்புக்காரனுக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்கள்.

 மேலும் மினாவின் எல்லா இடங்களும் குர்பானீ பிரானிகள் அறுப்பதற்கு ஏற்ற இடம் என்றும்,  மக்காவின் பாதைகளும் அப்படியே என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தெளிவு படுத்தினார்கள்

பின்னர்  நபியவர்கள்  முடி வெட்டுபரை​ அழைத்தார்கள். அவர் நபிகளாரின் தலையின் வலது பக்கத்தை முதலில் சிரைத்தார். அதன் பின்னர் இடது பாகத்தை சிரைத்தார். பின்னர் நபிகளார், எவரெல்லாம் தங்களின் முடியை சிரைத்துக் கொண்டனரோ அவர்களுக்காக மூன்று தடவைகளும், மேலும் எவர்கள் தங்களின் முடியை வெட்டிக் கொண்டனரோ அவர்களுக்காக ஒரு தடவையும் துஆ செய்தார்கள்.

பின்னர் ழுஹருக்கு முன்னர் வாகனத்தில் ஏறி மக்காவுக்குப் புறப்பட்டார்கள். அங்கு தவாபுல் இபாழாவை- ஹஜ்ஜின் தவாபை  நபிகளார் நிறை வேற்றினார்கள. இது தவிர வேறு தவாப் எதனையும் அன்னார் நிறைற்றவில்லை. மேலும் இந்த தவாபிலும், அவ்வாறே  தவாபுல் விதாவிலும் அன்னார் ரமல் செய்யவுமில்லை.  மக்காவில் பிரவேசித்ததும் நிறைவேற்றும் தவாபுல் குதூமில்  மாத்திரமே நபிகளார் ரமல் செய்தார்கள்.  ​

பின்னர் நபிகளார் ஸம்ஸம் கிணற்றின் பக்கம் சென்றார்கள். அங்கு மக்கள் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடமிருந்து நபிகளார் வாளியைப் பெற்று, அங்கு நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள். பின்னர் மீண்டும் மினாவுக்குத் திரும்பி வந்த நபிகளார், அங்கு அன்றிரவைக் கழித்தார்கள். நபியவர்கள் மக்காவுக்குச் சென்ற போது, அன்று எவ்விடத்தில் வைத்து ழுஹர் தொழுதார்கள் என்பதில் ஒற்றைக் கருத்துக் காணப்பட வில்லை. நபியவர்கள் அன்று மினாவில் ழுஹர் தொழுதார்கள் என்று இப்னு உமர் (ரழி) அவர்களும், மக்காவில் தொழுதார்கள், என்று ஜாபிர் (ரழி) அவர்களும் மற்றும் ஆயிஷா (ரழி) அவர்களும் அறிவித்துள்ளனர்.

மறு நாள் விடிந்ததும் சூரியன் உச்சிலிருந்து விலகும் வரை நபிகளார் காத்திருந்தார்கள். சூரியன் சாய்ந்ததும் தங்களின் தங்கு தலத்திலிருந்து ஜம்ராக்கலுள்ள இடத்திற்குச் சென்றார்கள். முதலில் ஜம்ரதுல் ஊலாவுக்குக் கல் எறிந்தார்கள். இது மஸ்ஜிதுல் கீபுக்குப் பக்கத்தில் இருக்கின்றது. அதற்கு ஏழு கல்லெறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் اللهُ أكْبَر என்று  கூறினார்கள்.

பின்னர் இயன்ற அளவு அதற்கு முன்னுள்ள ஜம்ராவின் பக்கம் முன்னேறினார்கள். அங்கு கிப்லாவின் பக்கம் முகம் நோக்கி தங்களின் இரு கரம் ஏந்தி ஸூரா அல் பகரா அளவு நீளமான ஒரு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.

பின்னர்  ஜம்ரதுல் வுஸ்தாவுக்கும் அதே போன்று கல் எறிந்தார்கள். பின்னர் பல்லத்தாக்கின் இடது பக்கத்தால் இறங்கினார்கள். அங்கும் கிப்லாவை முன்னோக்கி நின்று இரு கரமேந்தி முன்னர் போலவே நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அதனையடுத்து மூன்றாம் ஜம்ராவின் பக்கம் நபியவர்கள் வந்தார்கள். அதுதான்  “ஜம்ரதுல் அகபா” - இறுதி ஜம்ரா எனப்படுகிறது. அங்கு அந்த பல்லத்தாக்கின் உள்ளே நபியவர்கள் வந்தார்கள். பின்னர் ஜம்ராவைத் தங்களின் முன் புறமாகவும், கஃபாவை தங்களின் இடது பக்கமாகவும், மினாவை தங்களின் வலது பக்கத்திலும் ஆக்கிக் கொண்டார்கள். இங்கும் முன் போலவே ஏழு கற்கள் எறிந்தார்கள்.  இங்கு கல் எறிதலை நிறைவு செய்த நபியவர்கள், அங்கு மேலும் நின்று கொண்டிருக்காது அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.

நபியவர்கள் ழுஹர் தொழ முன்னர்  ஜம்ராக்களுக்கு கல் எறிந்து விட்டு அங்கிருந்து திரும்பிய பின்னரே ழுஹர் தொழுதார்கள் என்பது பெரும்பாலோரின் கருத்து. மேலும் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் தண்ணீர் இரைக்கும் பொறுப்பு சாட்டப் பட்டிருந்தது. ஆகையால் மினாவில் கழிக்க வேண்டிய இரவுகளை, அவர்  மக்காவில் கழிக்க அவருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

நபியவர்கள் ஐயாமுத் தஷ்ரீக்கின் மூன்று நாட்களில் அவசரப்பட்டு  இரண்டு நாட்களில் மினாவிலிருந்து வெளியேறி விடாமல், அங்கு மூன்று நாளும் தங்கி இருந்து கல் எறிந்தார்கள். மூன்றாம் நாள் ழுஹருக்குப் பின் புறப்பட்டு  “அல் மிக்ஸபை” வந்தடைந்தார்கள். அங்கு ழுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைளைத் தொழுதார்கள். பின்னர் அங்கு சற்று நேரம் தூங்கியெழுந்து மக்காவுக்குச் சென்றார்கள். அங்கு ஸஹர் நேரத்தில் தவாபுல் விதாஃவை நிறை வேற்றினார்கள். இந்தத் தவாபில் நபியவர்கள் “ரமல்” செய்யவில்லை. இச்சந்தர்ப்பத்தில் ஸபிய்யா (ரழி) அவர்களுக்கு மாதத் தீட்டு ஏற்பட்டிருந்தது. எனவே அவர் தவாபுல் விதாஃவை நிறைவேற்றாம லிருக்க அவருக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் சலுகை வழங்கினார்கள். ஆகையால் அவர் தவாபுல் விதாஃவை நிறைவேற்ற வில்லை.

ஆயிஷா (ரழி) அவர்களின் மனம் திருப்தியடையும் பொருட்டு அவர் உம்ராவுக்கு நிய்யத் வைத்து வர, அவரின் சகோதரன் அப்துர் ரஹ்மான் என்பாருடன் அன்றிரவு அவரை, நபியவர்கள் “தன்ஈமுக்கு” அனுப்பி வைத்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் உம்ராரவை நிறைவேற்றி முடிந்ததும், நபியவர்கள் சகல தோழர்களையும் அழைத்து மக்காவிலிருந்து புறப்டுமாறு உத்தரவிட்டார்கள். எனவே மக்கள் யாவரும் அங்கிருந்து பயணமாகினர்.  ​

 குர்பான் விடயத்தில் நபிகளாரின் வழிகாட்டல்

1.  ஹத்யு

1-   ஹஜ்ஜு கிரியைகளின் பொருட்டு வேறுபடுத்தி வைக்கும் பிராணி  “ஹத்யு எனப்படும். எனவே இவ்வாறு வேறு படுத்திய, ஆடு, மாடு, ஒட்டம் என்பவற்றை, நபியவர்கள் தாங்கள் தங்கியருந்த இடத்திலும், தங்களின் ஹஜ்ஜுவிலும், உம்ராவிலும் தனக்காகவும், தன் மனைவியருக் காகவும் அறுத்துப் பலியிட்டார்கள். 

2-   வேறுபடுத்திய ஆட்டின் மேனியில் அடையளம் எதனையும் பதிய வைக்காது, அதன் கழுத்தில் வளையல் ஒன்றைத் தொங்க விடுவதே நபிகளாரின் நடைமுறையாகும். ரஸூல் (ஸல்) அவர்கள் ஊரில் இருந்து கொண்டு ஒரு ஹத்யுவை மக்காவுக்கு அனுப்பி வைத்த போது, அதன் காரணமாக ஒரு முஹ்ரிமின் மீது சில விடயங்கள் ஹராமாகி விடுவது போன்று, இந்த ஹத்யுவின் காரணமாக ரஸூலுல்லாஹ்வின் மீது எதுவும் ஹராமாகி விடவில்லை.

3-   மேலும் நபியவர்கள் ஒட்டகையை வேறு படுத்திய​ போது அதன் கழுத்தில் வளையலை தொங்க விட்டதுடன், அதன் மேல் ஒரு அடையாளத்தையும் பதித்தார்கள். அப்பொழுது அதன் திமிழின் மேற்பரப்பின்  வலது பக்கத்தில் இரத்தம் வழியும் படி இலேசாகக் கீறி விட்டார்கள்.

4-   மேலும் ஹத்யுவை ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கும் போது அதனை எடுத்துச் செல்பவரிடம், அதற்கு நாசம் ஏதுமுண்டாகி அது அழிந்து விடும் என்றிருந்தால் அதனை அறுத்து விடும் படி கட்டளையிட்டார்கள். பின்னர் அதனை எடுத்துச் செல்பவரின் செருப்பைத் அதன் இரத்தத்தில​ தோய்த்து, அதனை அதன் கண்ணத்தின் மேல் வைக்கும் படியும், அதிலிருந்து எதனையும்  அவரும், அவரின் சகாக்களும் உண்ணாமல், அதன்  மாமிசத்தைப் பகிர்ந்து விடுமாறும் உத்தரவிட்டார்கள்.

5-   மேலும் ஹத்யுவின் விடயத்தில் தங்களின் தோழர்களுக்கிடையில் கூட்டுச் சேர்த்தார்கள். இதன் படி ஒரு ஒட்டகத்தை ஏழு போரும், அவ்வாறே ஒரு மாட்டை ஏழு பேரும் கூட்டு சேர்ந்து குர்பான் கொடுப்பதற்கு நபிகளார் வாயப்பளித்தார்கள்.

6-   தேவைப்படால்  ஹத்யுவை இழுத்துச் செல்லும் நபர் தனக்கு இன்னொரு பிராணி கிடைக்கும் வரை அதில் ஏறிச் செல்ல  நபியவர்கள் அவருக்கு  அனுமதியளித்தார்கள்.

7-   ஒட்டகத்தை நிற்பாட்டி அதன் இடது முன்காலை கட்டி வைத்து அதனை அறுப்பதுவே நபி வழியாகும். மேலும் அதனை அறுக்கும்  போது அன்னார் பிஸ்மிலும், தக்பீரும் சொல்வார்கள்.​    

8-   அறுக்க வேண்டிய தங்களின் பிராணியை நபியவர்கள் தங்களின் கரத்தினாலே அறுப்பார்கள். சில வேளை அதில் சிலதை அறுக்கும் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்து விடுவார்கள்.

9-   நபியவர்கள் ஆட்டை அறுக்கும் போது தங்களின் பாதத்தை அதன் கன்னத்தின் அகளமான பகுதியின் மேல் வைத்துக் கொள்வார்கள். பின்னர் பிஸ்மியும் தக்பீரும் சொல்லி  அதனை அறுப்பார்கள்.​

10-       தமது உம்மத்தினர், தங்களின் ஹத்யவில் இருந்தும், உழ்ஹிய்யாவிலிருந்தும், சாப்பிடுவ தையும், உணவுக்காக அதனை சேகரித்து வைப்பதையும் நபியவர்கள் அனுமதித்தார்கள்.

11-       சில வேளை நபியவர்கள் குர்பானீ மாமிசத்தைப் பகிர்ந்து விடுவார்கள். சில வேளை விரும்பியோர் அதிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.

12-       உம்ராவின் ஹத்யுவை மர்வாவில் வைத்தும், கிரானின் ஹத்யுவை மினாவில் வைத்தும் அறுப்பது நபிகளாரின் வழிகாட்டலாகும். நபியவர்கள் ஒரு போதும் இஹ்ராமின் நிலையிலிருந்து நீங்கிவிடுமுன்னர் தங்களின் ஹத்யுவை அறுத்ததில்லை. மேலும் சூரியன் உதிக்க முன் அதனை அறுக்க ஒரு போதும் யாரையும் அனுமதிக்கவும் இல்லை.

உழ்ஹிய்யாவில் நபிகளாரின் வழி முறை

1-   ரஸூல் (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யா கொடுப்பதைக் கைவிட்டதில்லை. பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இரண்டு செம்மரி ஆடுகளை நபிகளார் அறுப்பார்கள். மேலும் “ஐயாமுத் தஷ்ரீக்கின் எல்லா நாட்களும் குர்பானீ கொடுக்கும் நாட்கள்தான்” என்றும் நவின்றுள்ளார்கள்.

2-   “தொழுகை நிறைவேற்றப்பட முன் எவரேனும் அறுத்துப் பலியிடுவாராகில், அது ஹஜ்ஜின் வழிபாட்டைச் சாராது, அது அவன் தன் குடும்பத்திற்குக் கொடுக்கும் ஒரு மாமிசம்தான்”  என்று நபியவர்கள் அறிவித்துள்ளார்கள்.

3-   குர்பானீ கொடுக்கும் பிராணி ஆடாக இருந்தால், ஆறுமாதம் நிரம்பிய குட்டியையும், மாடாக இருந்தால், ஐந்து வயது நிரம்பிய மாட்டையும், ஒட்டகமாக இருந்தால் மூன்றாம் ஆண்டில் பிரவேசித்துள்ள ஒட்டகத்தையும் அறுக்கும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.

4-   நபியவர்கள் உழுஹிய்யா கொடுக்கும் போது குறைகளில்லாத நல்ல பிராணியைத் தெரிவு செய்தெடுப்பார்கள். எனவே காதருந்த, கொம்பு டைந்த, ஒற்றைக் கண்ணுள்ள, நொண்டியான, எழும்பு முறிந்த பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பதை நபிகளார் தடை செய்தார்கள். ஆகையால் குறையில்லாத நல்ல பிராணிகளைக் கவணித்தெடுக்குமாறு நபிகளார் கட்டளை யிட்டார்கள்.

5-   மேலும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியிருக்கும் ஒருவர், அதனை நிறைவேற்றும் வரை, துல் ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்களிலும் தங்களின் முடியெதையும் அகற்றி விட வேண்டாம் என நபியவர்கள் பணித்தார்கள்.

6-   உழ்ஹிய்யா பிராணியை தொழுகை நிறைவேற்றும் மைதானத்தில் அறுப்பதுவும் ஒரு நபி வழியே.

7-  மேலும் தனக்காகவும், தன் குடும்ப அங்கத்தினர் அதிக எண்ணிக்கையுடையவராக, அல்லது குறைந்த எண்ணிக்கை யுடையவராக இருந்த போதிலும் அவர்கள் எல்லோருக்குமாக ஒரு ஆடு போதுமானது, இதுவும் நபிகளாரின் சிறந்த வழிகாட்டலைச் சார்ந்ததாகும். ​     

அகீகாவில் நபிகளாரின் வழிகாட்டல்

1-   “எல்லா பிள்ளைகளும் அதன் ஏழாம் நாளில் அறுக்கப்படும் அதன் அகீகாவுடன் அடகு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாளில் அதன் முடி சிரைக்கப்பட்டு அதற்குப் பெயரும் சூட்டப்பட வேண்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள்  நவின்றார்கள்.

2-   மேலும் “சிறுவனுக்கு இரண்டு ஆடுகளும், சிறுமிக்கு ஒரு ஆடும் அகீகாவாகும்” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்)

கொடுத்தல் வாங்கலில்

 நபிகளாரின் வழிகாட்டல்

     1- ரஸூல் (ஸல்) அவர்கள் பொருட்களை விற்பனையும் செய்தார்கள், விலை கொடுத்து வாங்கியுமிருக்கின்றார்கள். தங்களுக்கு நபித்துவம் கிடைத்த பின்னர் அன்னார் வர்த்தகம் செய்ததை விட  விலை கொடுத்து வாங்கியதே அதிகம். மேலும் அன்னார் வாடகைக்குக்கும் கொடுத்தார் கள், வாடகைக்கு எடுத்தும் இருக்கின் றார்கள். அவ்வாறே அன்னார்  விடயங்களைப் பொறுப் பேற்றுக் கொண்டார்கள், அது போல் அதன் பொறுப்புக்களைப் பிறரிடம் சாட்டினார்கள். ஆனால் அன்னார் பொறுப்புக்களைப் பிறரிடம் சாட்டியதை விட, அதனைத் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதே அதிகம்.

       2- மேலும் நபி (ஸல்) அவர்கள் பொருளை வாங்கும் போது அதனை உடன் காசுக்கும் வாங்கினார்கள். பிற் கொடுப்பனவுக்கும் வாங்கினார்கள். மேலும் நபிகளார் மற்றவருக்கு சிபாரிசு செய்திருப்பதைப் போன்று மற்றவரின் சிபாரிசைத் தாங்களும் பெற்றிருக்கின்றார்கள். மேலும் அன்னார் அடகு வைத்தும், அடகு இல்லாமலும் கடன் வாங்கி இருக்கின்றார்கள். அவ்வாறே பொருளை இரவலாகவும் வாங்கி யிருக்கின்றார்கள். 

    3- ரஸூல் (ஸல்) அவர்கள் நன்கொடை வழங்கியிருக்கின்றார்கள், நன்கொடையை ஏற்றுக் கொண்டுமிருக்கின்றார்கள். சில வேளை தாங்கள் ஏற்றுக் கொண்ட நன்கொடையைத் திருப்பிக் கொடுத்திருக்கின்றார்கள். அவ்வமயம் அந்த நன்கொடையைத் தந்தவர் அதனைத் திருப்பி எடுக்க விரும்பாத போது, தாங்கள் அதனைத் திருப்பித் தருவதற்காகன நியாயங்களை அவரிடம் நபியவர்கள்  எடுத்துக் கூறுவார்கள். நபியவர் களுக்கு மன்னர்கள் வழங்கிய நன்கொடைகளை  ஏற்று, அதனைத் தன் தோழர்களுக்கு பகிர்ந்தளித்தார்கள்.

  4-  கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மற்றெல்லா மனிதர்களை விடவும் ரஸூல் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த ஒரு மனிதராக விளங்கினார்கள். மேலும் எவரிடமிருந்தேனும் அன்னார் ஒரு பொருளைக் கடனாக வாங்கினால், அதனைத் திருப்பிக் கொடுக்கும் போது அதை விடவும் சிறந்ததைக் கொடுப்பார்கள். அத்துடன் அந்த மனிதனுக்கும், அவரின் குடும்பத்துக்கும், அவரின் செல்வத்திலும் அபிவிருத்தியும் பரக்கத்தும் ஏற்பட வேண்டுமென பிரார்த்தனையும் செய்வார்கள். ஒரு முறை நபியவர்கள் ஒருவரிடம் ஒரு ஒட்டகத்தைக் கடனுக்கு வாங்கியிருந்தார்கள். பின்னர் ஒட்டகத்தின் சொந்தக்காரன் அதனைக் கேட்டு வந்து, வாயில் வந்தவாறு கடுமையாக ரஸூல் (ஸல்) அவர்களுடன் பேசினான். அப்பொழுது நபித் தோழர்கள் அம்மனிதரைத் தாக்க முயன்ற போது, நபியவர்கள் “அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில்  பொருளின் உரிமையாளனுக்கு  பேசும் உரிமை உண்டு” என்று சொன்னார்கள்.

    5- அறியாமை காரணமாக எவரேனும் நபியவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டால், அது நபியவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தாது. மாறாக அது அவர்களின் பொறுமையை அதிகப்படுத்தும். எனவே கடும் கோபத்துக்கு இலக்கானவர், தன் கோபத்தை வுழூவைக் கொண்டு அணைத்துக் கொள்ளுமாறும், ஷைத்தானை விட்டும்  அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமாறும் நபியவர்கள். உத்தர விட்டார்கள். மேலும் நின்று கொண்டிருக்கும் போது ஒருவருக்குக்  கோபம் ஏற்பட்டால், அவர் உட்கார்ந்து கொள்வதன் மூலம் தன் கோபத்தை அணைத்துக் கொள்ளுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.  

​    6- நபியவர்கள் யாருடனும் கர்வத்துடன் நடந்து கொண்டதில்லை. மாறாக தங்களின் தோழர்களுடன் மிகவும் தாழ்மையுடன் நடந்து கொண்டார்கள். மேலும் சிறியோர் பெரியோர் என்ற பேதமின்றி அனைவருக்கும் ஸலாம் சொல்வார்கள்.

          7- ரஸூல் (ஸல்) அவர்கள் பகிடி பண்ணுவார்கள். நபியவர்கள் பகிடி பண்ணும் போதும் உண்மையைத்தான் பேசுவார்கள். மேலும் நபியவர்கள் சிலேடையாகப் பேசுவார்கள், ஆனால் அன்னாரின் சிலேடையில் பொய் இருக்காது. அதில் உண்மைதான் இருக்கும்.

    8- தன் காரியங்களைச் செய்து கொள்ள தாங்களே முன் வருவார்கள். எனவே தங்களின் பாதணி பழுது பட்டால் அதனை தம் கையால் தைத்துக் கொள்வார்கள். அவ்வாறே தங்களின் ஆடைகள் வைத்திருக்கும் இடத்திலிருந்து அதனைத் தாங்களே எடுத்துக் கொள்வார்கள்,​ தங்களின் வாளிக்கு ஒட்டுப் போட்டுக் கொள்வார்கள், ஆட்டிலிருந்து பால் கரந்து கொள்வார்கள், இவ்வாறு தம் வேலைகளைத் தாங்களே செய்து கொண்டார்கள், மேலும் தன் குடும்பத்தவருக்கும் பணிவிடை செய்து கொடுத்தார்கள். பள்ளிவாசல்  நிர்மாண வேலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் தம்​ தோழர்களுடன் சேர்ந்து அவர்களும் கற்களைச் சுமந்து வந்தார்கள்.

9- மனிதரில் மனம் திறந்த ஒரு மாமனிதராகவும், நல் மனம் படைத்தவராகவும் அன்னல் நபி (ஸல்) அவர்கள் விளங்கினார்கள்.

10-  இரண்டு விடயத்தில் எதையேனும் தெரிவு செய்து கொள்ள அன்னாருக்கு வாயப்பளிக்கப் பட்டால், அதில் இலகுவானதை அவர்கள்  தெரிவு செய்து கொள்வார்கள்.

 11- ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களுக்கு எதிரான எந்த அநியாயத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுத்ததில்லை. எனினும் அல்லாஹ்வின் கட்டளை ஏதேனும் அழிக்கப் படும் போது அதனை நபியவர்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். எனவே அவ்வமயம் அவர்களுக்கு ஏற்படும் கோபத்திற்கு எதிரில் யாரும் நிற்க இயலாது.   

 12- நபியவர்கள் பிறருக்கு ஆலோசனை வழங்கியதுடன் பிறரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்கள். மேலும் நோயாளியைத் தரிசிக்கச் சென்றார்கள். ஜனாஸாவில் கலந்து கொண்டார்கள். அழைப்புக்குப் பதில் கொடுத்தார்கள். விதவை, ஏழை, பலமிழந்தோர் களின் தேவைகளை நிறைவேற்றித் தரும் விடயத்தில் அவர்களுக்குப் பக்க பலமாக  இருந்தார்கள்.    ​      

   13- ரஸூல் (ஸல்) அவர்களிடம், அவர்களுக்கு விருப்பமான ஏதேனும்  ஒரு பொருளை எவரேனும்  எடுத்து வந்தால், அவருக்காக நபி  (ஸல்) அவர்கள் துஆ கேட்பார்கள். மேலும் எவரேனும் நபியவரகளுக்கு ஏதும் நன்மை செய்தால், அன்னவரிடம்,

جزاك الله خيرا

அல்லாஹ் உங்களுக்குச் சிறந்த கூலியைத் தந்தருள்வானாக”  என்று துஆ கேட்பார்கள். அத்துடன் அன்னவரைப் பாராட்டுவார்கள்.

திருமணமும், குடும்ப வாழ்க்கையும் ​

1-ரஸூல் (ஸல்) அவர்கள் பிரம்மசாரியத்தை விரும்பவில்லை. மாறாக அன்னார் திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் வெகுவாக விரும்பினார்கள் என்பதை நபியவர் களின் வாக்கும் வாழ்வும் உறுதி செய்கின்றன. “உங்களின் உலக வாழ்வில் எனக்கு மிகவும் விருப்பமானது, பெண்ணும், வாசனையும்தான். மேலும் என் கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் “இளைஞர்களே! உங்களில் திருமணம் செய்து கொள்ள திராணியுள்ளவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” என்றும், “நீங்கள் பரிவுள்ள, மற்றும் அதிகமதிகம் குழந்தைகளை பெறுக்கூடிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றும் கூறினார்கள்.

ரஸூல் (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை, நல்லதோர் குடும்ப வாழ்க்கையாகவும், நற் பண்புகள் கொண்டதாகவும் இருந்தது. மேலும் “உங்களில் எவர் தன் இல்லாளிடம் சிறந்து விளங்கு கின்றாரோ, அன்னவர்தான் உங்களில் சிந்தவர். மேலும் நானோ, என் மனைவியரிடம் சிறந்து விளங்கும் விடயத்தில் உங்களை விடவும் சிறந்தவனாக இருக்கின்றேன்.” என்று கூறினார்கள்.

3- நபியவர்களின் மனைவியரில் எவரேனும், தடையில்லாத கருமம் எதனையும் செய்யும்போது, நபியவர்களும் அதில் கலந்து கொள்வார்கள்.​ மேலும் ஆயிஷா (ரழி) அவர்களுடன் விளையாடு வதற்காக நபியவர்கள் மதீனாவின் சிறுமிகளை அனுப்புவார்கள். மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் வாய் வைத்துக் குடித்த பாத்திரத்தில், அவர்களின் வாய் பட்ட இடத்தில் நபிவர்கள் தங்களின் வாயை வைத்துக்  குடித்தார்கள். மேலும் அன்னை ஆயிஷா அவர்களின் மடியில் ரஸூல் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்வார்கள். அத்துடன் சில வேளை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு மாதத் தீட்டு ஏற்பட்டிருந்தால், அவர் உடுத்திருக்கும் இடுப்புத் துணியை மாற்றிக் கொள்ளுமாறு நபியர்கள் வேண்டிக் கொள்வார்கள். பின்னர் நபியவர்கள்  அவர்களுடன் நெருங்கியிருப்பார்கள்.

4- அஸர் தொழுகைக்குப் பின் நபியவர்கள் தங்களின் மனைவியரின் இல்லங்களக்குச் சென்று, அவர்களிடம் நலம் விசாரிப்பார்கள். அத்துடன்  இரவு நேரம் வந்ததும், தவணைப்படி எந்த மனைவியிடம் அன்றைய இரவைக் கழிக்க வேண்டுமோ, அதன் பிரகாரம் ​அன்றைய இரவை அவரிடம் கழிப்பார்கள்.

5- நபியவர்கள் தங்களின் மனைவியரிடம்  இரவைக் கழிக்கும் விடயத்திலும், அவர்களுக்கு ஜீவனோ​பாயம் வழங்கும் விடயத்திலும் உரிய முறையில் தவணையையும், பங்குகளையும் வகுத்து வைத்திருந்தார்கள். சில வேளை சந்தர்ப்பத்தைப் பொருத்து தங்களின் ஏனைய மனைவியர் முன்னிலையில் சில மனைவியின் பக்கம் விசேட கவணம் செலுத்துவார்கள்.

6- நபியவர்கள் இரவின் கடைசி பகுதியிலும் மற்றும் முன்னிரவிலும் தம் மனைவியரிடம் வந்து தங்குவார்கள். எனவே இரவின் ஆரம்பப் பகுதியில் நபியவர்கள் கலவையில் ஈடுபட்டால் சில வேளை அப்பொழுதே குளித்து விட்டு தூங்கி விடுவார்கள். சில வேளை வுழூ செய்து கொண்டு தூங்கி விடுவார்கள். மேலும் “எவன் தன் மனைவியின் ஆசனப் பகுதியில் பிரவேசித்தானோ, அவன் சாபத்துக்குரியவன்” என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும் உங்களில் தன் மனைவியுடன் சேர விரும்பும் ஒருவன், அப்போது,

اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

“அல்லாஹ்வே! எங்களை விட்டும்  ஷைத்தானை தூரமாக்கி வைப்பாயாக. மேலும் நீ எமக்குத் தந்தருளும் பாக்கியத்தை விட்டும் ஷைத்தானைத் தூரமாக்கி வைப்பாயாக.” என்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.” ஏனெனில் இப்படி சொல்வதன் மூலம்,  இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவருக்குமிடையில் குழந்தை கிடைப்பதற்கான வாய்ப்பிருந்தால், ஷைத்தானால் அந்த பிள்ளைக்கு ஒரு போதும் கேடு விளைவிக்க முடியாது” என்று  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7- மேலும் நீங்கள் எவரேனும் ஒரு பெண்ணையோ, சேவகனையோ, அல்லது ஒரு கால் நடையையோ அடைந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதன் நெற்றி முடியைப் பிடித்து, பிஸ்மில் சொல்லி,

اللهم إني أسألك خيرها وخير ماجبلت عليه وأعوذ بك من شرها وشر ماجبلت عليه

“அல்லாஹ்வே! அதன் நன்மைகளை எனக்கு அநுகூலமாக்கித் தந்து, அதன் தீமைகள​ள விட்டும் என்னைப் பாதுகாத்தருளுமாறு உன்னிடம் வேண்டுகிறேன்” என்று பிரார்த்தனை செய்யுமாறு ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 8- மேலும்  நபியவர்கள் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளையிடம்,

بارك الله لك ، وبارك عليك ، وجمع بينكما في خير "

“அல்லாஹ் உங்கள் மீது அருள் பாளித்து, நன்மை பயக்கும் விடயத்தில்  உங்கள் இருவரும் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி வைப்பானாக.” என்று வாழ்த்துவார்கள்.

9- நபியவர்கள் பிரயாணம் மேற் கொள்ளும் போது, தம்முடன் மனைவியர் எவரையும் அழைத்துச் செல்வதாயின், அவர்களுக்கிடையில் சீட்டுப் போடுவார்கள். அதில் எவர் தெரிவாகின்றரோ,​ அவரை தன்னுடன் அழைத்துச் செல்வார்கள். மற்றவர்கள் விடயத்தில் வேறு தீர்ப்பெதுவும் எடுக்க மாட்டார்கள்.

10- ஏழைகளை ஒதுக்கி வைப்பதும், அவர்களை வெறுப்பதும், அவர்களின் மீது சுமையை ஏற்படுத்துவதும், அவர்களை வஞ்சிப்ப தும், அவர்களைத் தூரமாக்கி வைப்பதும் நபியவர்களின் வழிகாட்டலைச் சார்ந்ததல்ல.

11- நபியவர்கள் தம் மனைவியரில் சிலரை விவாக ரத்து செய்து விட்டு, மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். மேலும் அன்னார் தம் மனைவியரை ஒரு மாத காலம் வரை “ஈலாஉ” செய்திருந்தார்கள். எனினும் நபியவர்கள் தம் மனைவியர் எவரையும் “ழிஹார்” செய்ததில்லை.

ஒருவர் தன் மனைவியிடம் “ அல்லாஹ்வின் மீது ஆணையாக  நான் இனி மேல் உன்னுடன் சேர மாட்டேன், என்று சத்தியம் செய்து கூறுவது “ஈலாஉ” எனப்படும், இப்படி தன் மனைவியை “ஈலாஉ” செய்தவன் நான்கு மாதம் முடியும் வரையில் அவளைத் தீண்டாமல் இருந்தால். அது தலாக்காக மாறிவிடும். அதனால் அது விவாக ரத்துச் சட்டத்தின் கீழ் வந்து விடும்.

ஜாஹிலிய்யாக் காலத்துப் பெண்கள் “ஈலாஉ” மூலம் பெரும் கஷ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளானார்கள். ஏனெனில் அக்காலத்தில்  தம் மனைவியரின் குற்றங்களைச் சகிக்க முடியாத ஆண்கள் “ஈலாஉ” மூலம் அவளை ஒதுக்கி வைக்கும் போது “அல்லாஹ்வின் மீது ஆணையாக இரண்டு வருடங்கள் வரை, அல்லது ஆயுள் பூராவும்  நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிவிடுவார். இதன் காரணமாக “ஈலாஉ” செய்தவனின் மனைவி அவனுக்கு மனைவியாக இருந்து அவனுடன் வாழவும் முடியாமல், அவனிடமிருந்து விவாக ரத்துப் பெற்று பிரிந்து செல்லவும் முடியாமல் பெரும் கொடுமைக்கு உட்பட்டாள். எனவே இந்தக் கொடுமையிலிருந்து பெண்களைக் காப்பாற்றுமுகமாக இஸ்லாம் மார்க்கம் “ஈலாஉ” விடயத்தில் நான்கு மாதக் காலக் கெடுவை விதித்தது.

    எனவே கட்டுப்படாத மனைவிக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் நோக்கில் அவளுடைய கணவன் அவளை “ஈலாஉ” மூலம்  ஒதுக்கி வைக்க விரும்பினால், அதற்கு இஸ்லாம் மார்க்கம் நான்கு மாத காலம் அவகாசம் தந்துள்ளது. ஆகையால் நான்கு மாதங்களை விடவும் அதிக காலத்துக்கு, ஒருவன் தன் மனைவியை “ஈலாஉ” செய்திருந்தால் அது செல்லுபடியாகாது, எனவே நான்கு மாதம் கழியும் வரை காத்திராமல், அதற்குள்ளாக அவளுடன் அவன் கூடி அவளை தன் மனைவியாக வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அவனிடமிருந்து அவள் விவாக ரத்து பெற்றுச் செல்லலாம் என்ற உரிமையை அல்குர்ஆன் அவளுக்கு வழங்கியது. இவ்வாறு “ஈலாஉ” விடயத்தில் இஸ்லாம் மார்க்கம்  திருத்தத்தை ஏற்படுத்தி, ​ஜாஹிலிய்யாக் கால கெடுமையிலிருந்து பெண் இனத்தை காப்பற்றியது.    

மேலும் “ழிஹார்”  என்பது ஒருவன் தன் மனைவியிடம் நீ என் தாயைப் போன்றவள், அல்லது என் சகோதரி போன்று எனக்கு மஹ்ரமான இன்னாரைப் போன்று எனக்கு நீ எனக்கு ஹராமாக்கப் பட்டவள், என்று சொல்வதை, அல்லது தன் மனைவியின் உருப்பெதனையும்  தனக்கு மஹ்ரமான பெண் எவரினதும் உருப்புக்களுக்கு ஒப்பிட்டுச் சொல்வதைக் குறிக்கும். இப்படி “ழிஹார்” செய்த பெண்ணை அவளின் கணவன் தீண்டுவது அவன் மீது ஹராமாகி விடும். இதன் மூலம் பெண் அநியாயத்திற்கு இலக்காகின்ற படியால், இஸ்லாம் “ழிஹாரை” தடை செய்துள்ளது. எனவே தன் மனைவியை ழிஹார் செய்த கணவனுக்குத் தன் மனைவி பிடிக்க வில்லை என்றால் அவன் அவளைத் தலாக் செய்து விட வேண்டும். அல்லது  ழிஹாரை விட்டும் நீங்கி அவளை மனைவியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், அவள் மனைவி, ஆனால் மனைவி இல்லை என்ற இரண்டும் கெட்ட நிலைக்கு அவளைத் தள்ளக் கூடாது.

எனவே ழிஹாருக்குட் பட்ட மனைவியை  கணவன் சேர்த்துக் கொள்ளும் போது, அவளுடன் கலவையில் ஈடுபட முன்னர் அவன் “கப்பாரா” கொடுப்பது அவன் மீது கடமை. கப்பாரா கொடுக்கு முன் அவளுடன் அவன் கூடுவது ஹராமாகும். எனவே இதற்கு கப்பாராவாக ஒரு அடிமையை உரிமையிட வேண்டும், அதற்கு வசதி இல்லாது போனால், இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு பிடிக்க வேண்டும். அதற்கும் திராணி இல்லை யென்றால் அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.

 உணவும், பானமும்

ஆகார விடயத்தில் நபிகளாரின் வழி காட்டல்

1-ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடைவார்கள்.  எனவே கை வசம் உள்ளதை ஒதுக்க மாட்டார்கள். அவ்வாறே இல்லாத ஒன்றை அடைந்து கொள்ளும் பொருட்டு தங்களை வருத்திக் கொள்ளவும் மாட்டார்கள். மேலும் ஹலாலான உணவெதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அனேகமாக அதனை அவர்கள் உண்ணாமல் இருப்பதில்லை. எனினும் அன்னவரின் மனம் விரும்பாத ஆகாரம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்டால் அதனை அவர்கள் உண்ணாமல் தவிர்ந்து கொண்டாலும், அதனை ஹராம் என்று சொல்ல மாட்டார்கள்.  அத்துடன் அதனை உண்ணும் படியாகத் தங்கள் மனதை வற்புருத்தவும் மாட்டார்கள். எந்தவொரு உணவைப் பற்றியும் ஒரு போதும் குறை கூறமாட்டார்கள். அவ்வுணவு தங்களுக்குப் பிடித்தால் அதனைச் சாப்பிடுவார்கள். அல்லாது போனால், அதனை ​உண்ணாமல் விட்டு விடுவார்கள். உடும்புக் கறி உண்ணுவது தங்களின் பழக்கத்தில் இல்லாததன் காரணமாக அதனை அவர்கள் உண்ணாமல் விட்டு விட்டார்கள்.

2- நபியவர்கள் தங்களுக்கு வாய்த்ததை​​ச் சாப்பிடுவார்கள். எனினும் உணவு கிடைக்காது போனால், பொறுமையுடன் இருப்பார்கள். சில சமயங்களில் பட்டினியைத் தாங்கிக் கொள்வ தற்காக தங்களின் வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. மேலும் நபியவர்களின் வீட்டு அடுப்பங் கரையில் பல நாட்கள் நெருப்பு எரிந்ததில்லை.

3- இன்னொரு உணவை உட் கொள்ளாது, ஒரே வகையான (விலை கூடிய) உணவை மாத்திரம் சாப்பிட்டு  வரும் பழக்கம் நபியவர்களின் வழி முறையில் காணப்பட வில்லை.      

4-ரஸூல் (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டமும், தேனையும் விரும்பி சாப்பிட்டார்கள். மேலும் ஒட்டகம், கோழி, செம்மரி ஆடு, வெள்ளாடு, முயல் ஆகிய மிருகங்களின் மாமிசத்தையும், கடல் உணவுகளையும் சாப்பிட்டார்கள். அவ்வாறே பொரித்த கறியையும் பேரீத்தம் பழத்தையும், மாமிசம் சேர்த்து சமைத்த ரொட்டியையும், சாப்பிட்டார்கள். மேலும் எண்ணைய் கலந்த​ ரொட்டியையும், வெள்ளரிக் காயை ஈத்தம் பழத்துடன் சேர்த்தும் நபியவர்கள் சாப்பிட்டார்கள். மேலும் சமைத்த பூசனிக் காயை நபியவர்கள் விரும்பி சாப்பிட்டார்கள். மேலும் உலர்த்திய  இறைச்சியும், ஈத்தம் பழத்தை வெண்ணையுடன் சேர்த்தும் நபியவர்கள் உண்டார்கள்.​

5-நபியவர்கள் மாமிசத்தை வெகுவாக விரும்பினார்கள். அதிலும் மிருகத்தின் முன் காலும், ஆட்டின் முன் பகுதியும் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவையாக இருந்தன.

6- தங்களின் பிரதேசத்துப் பழங்கள் வரும் காலத்தில் அதனை நபியவர்கள் சாப்பிடுவார்கள். அதனை ஒதுக்க மாட்டார்கள்.

7-நபியவர்களின் முக்கியமான ஆகாரம் நிலத்தில் ஒரு விரிப்பின் மீது வைக்கப்படும்.

8- வலது கையால் உண்ணும் படியும், இடது கையால் உண்ண வேண்டாம் என்றும் நபியவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். மேலும் “ஷைத்தான் இடது கையால் சாப்பிடுகின்றான், அவன் இடது கையினாலேயே பருகுகின்றான்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

  9- நபியவர்கள் மூன்று விரலால் சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடிந்தும் தங்களின் விரல்களைச் சூப்புவார்கள்.

10- நபியவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டார்கள். சாய்ந்து இருத்தல் மூன்று வகைப்படும்.  ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து இருத்தல், இரண்டாவது சம்மனம் கட்டி அமருதல், மூன்றாவது ஒரு கையை ஊண்டி சாய்ந்து  கொண்டு மறு கையால் சாப்பிடுதல். எவ்வாறாயினும் சாப்பிடும் போது இவ்வாறு  மூன்று விதமாகச் சாய்ந்து கொண்டு சாப்பிடுவது இழிவான செயலாகும். மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் சாப்பிடும் போது தங்களின் இரண்டு கெண்டைக் காலையும் நிற்பாட்டி, குந்தியவாறு சாப்பிடுவார்கள். மேலும் “நான் அடிமை உட்காருவது போல் உட்கார்ந்து, அடிமை சாப்பிடுவது போன்று சாப்பிடுகின்றேன்” என்று கூறுவார்கள்.

11- நபியவர்கள் உணவில் கை வைத்ததும், “பிஸ்மில்லாஹ்” என்று சொல்வார்கள். மேலும் உணவு சாப்பிடுகின்றவரை பிஸ்மில் சொல்லுமாறு பணித்தார்கள். மேலும் ”உங்களில் எவராகிலும் சாப்பிடும் போது முதலில் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக் கொள்ள வேண்டும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டால், بسم الله في أوله وآخره  என்று சொல்லி விடவும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

12- மேலும் “அல்லாஹ்வின் பெயர் குறிக்காமல் உண்ணும் உணவை ஷைத்தான் தனக்கு ஆகுமாக்கிக் கொள்வான்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

13- கொடை வள்ளல்கள் செய்வது போன்று தங்களின் விருந்தினருக்கு நபியவர்கள் திரும்பத் திரும்ப உணவு பரிமாறு வார்கள்.

14- தங்களின் எதிரில் உணவு வைக்கப்பட்டதும் நபியவர்கள்,

الحمد لله كثيراً طيباً مباركاً فيه غير مكفي ولا مودع ولا مستغنى عن ربن  الحمدُ للهِ حَمْدًا كثيرًا طيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ ولا مُوَدَّعٍ ولا مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا

“பரிசுத்தமானதும் அருள் நிறைந்ததும் எண்ணிலடங்காததுமான புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நம் இரட்சகனே! யாரும் உனது புகழைக் கூறி அதனை நிறைவு செய்யவும், அதிலிருந்து விடை பெறவும், மற்றும் தேவையற்றிருக்கவும் இயலாது” என்று கூறுவார்கள்.

15- நபியவர்கள் மக்களிடமிருந்து ஆகாரம் எதுவும் சாப்பிட்டால், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யாமல் அவ்விடத்தை விட்டும் வெளியேற மாட்டார்கள்.​ மேலும்

أفطر عندكم الصائمون ، وأكل طعامكم الأبرار ، وصلّت عليكم الملائكة

“உங்ளிடம் நோன்பாளிகள் நோன்பு திறந்து கொண்டனர், உங்களின் ஆகாரத்தினை சான்றோர் சாப்பிட்டு விட்டனர், மேலும் மலக்குகளின் பிராத்தனை உங்களை வந்து அடைந்து விட்டது” என்று கூறுவார்கள். (இந்த பிராரத்தனையில் நோன்பாளிகள் பற்றிக் குறிப்பிப் பட்டுள்ள போதிலும், இது நோன்புடன் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல, பொதுவாக நோன்பல்லாத காலத்திலும் நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள், என்று அஷ்ஷெய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.​

16- ஏழைகளுக்கு விருந்தளித்து உபசரிப்போருக்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்து, அவர்களைப் பாராட்டுவார்கள்.

17- சிறியோர், பெரியோர், சுதந்திரவான், அடிமை, பட்டிக்காட்டான், வழிப்போக்கர் முஹாஜிர் என்ற பாகுபாடின்றி யாருடனும் ஒன்றாக இருந்து சாப்பிடுவதை ஒரு போதும் நபியவர்கள் வெறுத்ததில்லை.

18- நபியவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது, அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டால், அன்னார், “நான் நோன்பு வைத்திருக்கின்றேன்" என்று கூறுவார்கள். மேலும்  ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது யாரேனும் அவருக்கு உணவு பரிமாறினால், அந்த மனிதருக்காக துஆ கேட்குமாறு, நோன்பாளியை நபியவர்கள் பணித்தார்கள். மேலும் யாருக்கு உணவு வழங்கப்படதோ அவர் நோன்பு வைத்திருக்க வில்லையனில், அவர் அதனைச் சாப்பிடும்படியும் நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

19-  ரஸுல் (ஸல்) அவர்களை யாரேனும் சாப்பட்டுக்கு அழைத்தால், அதில் கலந்து கொள்வதற்காக அன்னார் செல்லும் போது அழையாத விருந்தாளி எவரேனும் அவர்களைப் பின் தொடர்ந்து வருவாராகில், சாப்பாட்டுக்கு அழைத்த வீட்டுக்காரனிடம்  “ இன்னார் நம்மைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றார். நீங்கள் விரும்பினால் அவரை அனுமதிக்கலாம். அல்லது  இவ்விடத்திலிருந்து அவர் திரும்பி விட வேண்டும் என்று நீங்கள் கருதினால் அவர் இங்கிருந்து திரும்பி விடுவார்” என்று நபியவர்கள் கூறுவார்கள்.

 20- கூட்டுச் சேர்ந்து சாப்பிடுவதன் காரணமாக தமது வயிறு நிரம்புவதில்லை, என்று தங்களிடம் முறையிட்டவர்களிடம், “நீங்கள் பிரிந்து விடாது, ஒன்றாக இருந்து சாப்பிடுங்கள். அப்பொழுது  அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். அதன் மூலம்  அல்லாஹ் பரக்கத் செய்வான்” என்று  ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

21- மேலும் “மனிதன் தான் நிரப்பிக் கொள்ளும் பாத்திரங்களில் கெட்டது, அவனின் வயிற்றை விட எதுவுமில்லை. மேலும் மனிதன் எடுத்துக் கொள்ளும் கவளங்களின் அளவுகளே, அவனின் முல்லந் தண்டை நிமிர வைக்கின்றன. எனவே அவனுக்கு அப்படிச் செய்ய வேண்டு மெனறால், அவன் தன் வயிற்றில் உணவுக்காக மூன்றில் ஒரு பாகத்தையும், குடி பானத்துக்காக மூன்றில் ஒரு பாகத்தையும், மூச்சு விடுவதற்காக மூன்றில் ஒரு பாகத்தையும் ஒதுக்கிக் கொள்வானாக” என்று கூறினார்கள்.

22- ஓரிரவு நபியவர்கள் தங்களின் வீட்டில் பிரவேசித்த போது ஏதும் உணவு கிடைக்குமா, என்று தேடிப் பார்த்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்க வில்லை. எனவே

اللهم أطعم من أطعمنى واسق من سقاني   

“அல்லாஹ்வே! எனக்கு உணவளிப்பவனுக்கு நீ உணவளிப்பாயாக, மேலும் எனக்குத் தண்ணீர் புகட்டுகின்றவனுக்கு நீ தண்ணீர் புகட்டுவாயாக.” என்று துஆ கேட்டார்கள்.

அருந்தும் விடயத்தில் நபிகளாரின் வழிகாட்டல்

1-ரஸூல் (ஸல்) அவர்கள் அருந்தும் போது, உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்ளும் விடயத்தில் அதிகம் கவணம் செலுத்தி வந்தார்கள். மேலும் ரஸூல் (ஸல்) அவர்களுக்குக் குளிர் பானம் மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது. நபியவர்கள் சில வேலை வெறும் பா​லைத் தூய்மையாகக் குடிப்பார்கள். அதில் எதுவும் கலக்கமாட்டார்கள்.  சில வேலை அதில் தண்ணீர்ர் கலந்து கொதிக்க வைத்துக் குடிப்பார்கள்.  மேலும் உணவு, மற்றும் குடி பான விடயத்தில பாலுக்கு நிகரான உணவு  வேறு எதுவும் இல்லை என்ற படியால் நபியவர்கள் பால் அருந்திய பின்,

اللهم بارك لنا فيه وزدنا منه

“அல்லாஹ்வே! இவ்விடயத்தில் நமக்கு பரகத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்து வாயாக” என்று கூறுவார்கள்.

2- உணவு சாப்பிட்டதும் அதற்கு மேலால் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நபியவர்களிடம் இருந்தில்லை. மேலும் இரவின் ஆரம்பப் பகுதியில் ரஸூல் (ஸல்) அவர்களுக்காக “நபீத்” எனும் திராட்சைப் பழச் சாறு தயார் செய்யப்படும். மறு நாள் காலையிலும், இரவும் அதனை நபியவர்கள்  குடிப்பார்கள். மேலும் அதற்கு அடுத்த நாளும்,​ இரவும், அதனை நபியவர்கள் குடிப்பார்கள். அத்துடன் அதனை அடுத்த நாளும் அஸர் வரையில், நபியவர்கள் அதனைக் குடிப்பார்கள். அதன் பிறகும் அதில் ஏதேனும் எஞ்சியிருந்தால். அதனைத் தன் சேவகனுக்குப் புகட்டுவார்கள். அல்லது அதனைக் கொட்டி விடும் படி பணிப்பார்கள்.

(“நபீத்” என்பது, ஈத்தம் பழம் கலந்த இனிப்பான திராட்சைப் பழச்சாறாகும். இப்படியான திராட்சைப் பழச் சாற்றில் மாற்றம் ஏற்பட்டு அது போதைப் பொருளாக மாறிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக அதனை மூன்று நாட்களுக்கு மேல் நபியவர்கள் குடித்ததில்லை.)

3- நபியவர்கள் எதனையும் குடிக்கும் போது உட்கார்ந்து கொண்டு குடிப்பதுதான் அவர்களின் வழக்கம். எனவே நின்று கொண்டு குடிப்பதை நபியவர்கள் கண்டித்தார்கள். எனினும் நபியவர்கள் ஒரு முறை நின்று கொண்டு குடித்தார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இக்கட்டான சந்தர்ப்பத்தில் நபியவர்கள் அப்படிச் செய்தார்கள், என்றும், நின்று கொண்டு குடிக்க ஆரம்பத்தில் அனுமதி இருந்த படியால், நபியவர்கள் அப்படிச் செய்து, பின்னர் அதனைத் தடை செய்து விட்டார்கள் என்றும், இரண்டு காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே என்பதை எடுத்துக் காட்டுவதற்காக நபியவர்கள் அப்படிச் செய்தார்கள் என்றும் கூறப்படுகின்றன.

4- ரஸூல் (ஸல்) அவர்கள் எதையேனும் குடிக்கும் போது ஒரே தடவையில்  குடிக்க மாட்டார்கள், அதனை மூன்று தடவைகள் மூச்சு விட்டு விட்டுக் குடிப்பார்கள். மேலும்

انهُ أَرْوَى و أَمْرَأُ وَأبْرَأُ    நிச்சயமாக இது தாராளமாகவும், இலகுவாக உட்செல்லக் கூடியதாகவும், சுகம் தரக்கூடியதாகவும் இருந்தது என்று கூறுவார்கள். மேலும் நபியவர்கள் மூச்சு விடும் போது, தான் குடிக்கும் கோப்பைக்குள்ளே மூச்சு விடமாட்டார்கள் என்பது கவணத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் “உங்களில் எவரேனும் குடிக்கும் போது கோப்பையில் மூச்சு விடாமல் இருக்கட்டும். ஆயினும் அவர் மூச்சு விடுவதாயின், தன் வாயை பாத்திரத்தை விட்டும்  தூரமாக்கிக் கொள்ளட்டும்.” என்று நபியவர்கள் நவின்றார்கள். மேலும் நபியவர்கள், உடைந்த, ஓட்டையான கோப்பையில் குடிப்பதையும், மற்றும் தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் வாய் வைத்து குடிப்பதையும் தடை செய்தார்கள்.

5- ரஸுல் (ஸல்) அவர்கள் குடிக்கும் போது பிஸ்மில் சொல்வார்கள். குடித்து முடிந்ததும் அல்லாஹ்வைப் புகழ்வார்கள். மேலும் “உண்ட உணவுக்காகவும், குடித்த பானத்திற்காகவும் அல்லாஹ்வைப் புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6- ரஸூல் (ஸல்) அவர்களுக்காக  உவர்ப்பில்லாத நல்ல தண்ணீர் எடுத்து வரப்படும். மேலும் நபியவர்கள் இரவு நேரத்தில் எடுத்து வைத்த தண்ணீரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

7- ரஸூல் (ஸல்) அவர்கள் குடித்து முடிந்ததும், வலது பக்கத்தில் இருப்பருக்கு அதனைக் கொடுப்பார்கள், ஆனால் இடது பக்கத்தில் இருப்பவர் அவரை விடவும் பெரியவராயின், அதனை முதலில் அவருக்குக் கொடுப்பார்கள்.

8- பாத்திரத்தை மூடியோ, அதன் வாயைக் கட்டியோ வைக்கும் படி, அல்லது அதன் மேல் குச்சி ஒன்றையாவது வைத்து விடும்படி  ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மார்க்கப் பிரச்சா விடயத்தில் நபிகளாரின் வழி காட்டல்

1-ரஸூல் (ஸல்) அவர்கள் இரவிலும் பகலிலும், மற்றும் இரகசியமாகவும் வெளிப்படை யாகவும் அல்லாஹ்வின் பால் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் தங்களுக்கு நபித்துவம் கிடைத்து, அவர்கள் மக்காவில் இருந்த முதல் மூன்றாண்டுகளில் மறைவான முறையில் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள். எப்பொழுது “ஆகவே உங்களுக்கு ஏவப்பட்டதை (தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்” (15-94) என்ற வசனம் அவர்களுக்கு அருளப்பட்டதோ, அவர்கள்  உடனடியாக அல்லாஹ்வின் கட்டளையைத் தெளிவு படுத்துவதற்காக களம் இறங்கினார்கள். அதனால் அவர்களுக்கு விடுக்கப்பட்ட எந்த வொரு பழிச்சொல்லையும், கண்டனத்தையும் அன்னார் பொருட்படுத்த வில்லை. எனவே அன்னார் பெரியோர், சிறியோர், சுதந்திரவான், அடிமை, ஆண்​ பெண் என்றும், மனு ஜின் என்றும் வித்தியாசம் பாராமல் யாவரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள்.

2- மக்காவில்  தன் தோழர்கள் மீதான தொல்லைகள்  தீவிரம் அடைந்த போது, ஹபஷாவுக்கு புலம் பெயர்ந்து செல்ல அவர்களுக்கு நபியவர்கள் அனுமதியளித்தார்கள்..

3- மேலும் “தாஇப்” வாழ் மக்கள் தங்களுக்கு உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் நபியவர்கள் அங்கு சென்றார்கள். அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். ஆனால் நபியவர்கள் தங்களுக்கு  உதவக்கூடிய   ஒருவரையும்   அங்கு    காணவில்லை. அந்த மக்களோ, நபியவர்களுக்குக் கடும் தொல்லையும் துன்பமும் விளைவித்தனர்.  நபியவர்கள் அந்த மக்களிடமிருந்து, பெற்றுக் கொண்ட கஷ்டங்களும், துயரங்களும் தங்களின் சமூகத்தாரிடம் அடைந்து கொண்டதை விடவும் பாரியது. ஈற்றில் அம்மக்கள் நபியவர்களை மக்காவுக்கே துரத்தி விட்டனர். எனவே முத்இம் இப்னு அதீ என்பாரின் பாதுகாப்பின் பேரில் நபியவர்கள் மக்காவில் பிரவேசித்தார்கள்.

4- மக்காவில் பத்தாண்டுகள் நபியவர்கள் அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள். எல்லா ஆண்டும் ஹஜ்ஜுக் காலத்தில் வெளியூரிலிருந்து வரும் ஹாஜிகள் தங்கியிருக்கும் வீடுகளுக்குச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். ​அவ்வாறே ஹஜ்ஜுக் காலத்தில் “உக்காழ், மஜின்னா, மற்றும் துல் மஜாஸ்” எனும் சந்தைகளில் ஒன்று சேரும் மக்களிடம் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் நபியவர்கள் அழைத்தார்கள். அத்துடன் அவர்களின் கபீலாக் களைப் பற்றியும், அவர்களின் இருப்பிடங்கள் பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

5- பின்னர் அகபா குன்றின் மீது கஸ்ரஜ் கூட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர்களை ரஸூல் (ஸல்) அவர்கள் சந்தித்து, அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அவர்கள் ஆறு பேரும் இஸ்லாம் மாரக்கத்தை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து மதீனாவுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள் அங்கு மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தனர். இதன் காரணமாக மதீனா எங்கும் இஸ்லாம் மார்க்கம் பரவியது. மதீனாவில் இஸ்லாம் மார்க்கம் சென்றடையாத ஒரு வீடேனும் இருக்க வில்லை. எல்லா இல்லங்களிலும் இஸ்லாம் புரவேசித்தது.

6- மறு வருடம் மதீனாவிலிருந்து பன்னிரெண்டு பேர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் அகபா குன்றின் மீது வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக நபியவர்கள், அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். அதன் பிரகாரம் அவர்கள், நபியவர்களின் கட்டளையைக் கேட்டு அதற்கு அடிபணிய வேண்டுமென்றும், இஸ்லாத்திற்காக செலவு செய்ய வேண்டுமென்றும், நல்லதைக் கொண்டு ஏவி, தீயதை தடுத்து வர வேண்டு​மென்றும், எந்த வொ​ரு பழிச் சொல்லையும், கண்டனத்தையும் பொருட்படுத்தாமல்  அல்லாஹ்வின் விடயங்களை பேசி ​வர வேண்டுமென்றும், மேலும் நபியவர் களுக்கு உதவி ஒத்தாசைகள் செய்வதுடன் தமது உயிரையும், மனைவி மக்களையும் பாதுகாப்பது போன்று நபியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டமென்றும், இதனை அவர்கள் செய்து வந்தால் அவர்களுக்கு சுவர்க்கம் உண்டென்றும், அவர்களுடன் ரஸூல் (ஸூல்) அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.

பின்னர் அம்மக்கள் மதீனாவுக்குத் திரும்பினர். அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கவும், அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கவும் அவர்களுடன் இப்னு உம்மி மக்தூம் (ரழி) அவர்களையும், முஸ்அப் இப்னு உமைர்  (ரழி) அவர்களையும் ரஸூல் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் இருவரின் மூலம் ஏராளமான மக்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். உஸைத் இப்னு ஹுழைர், ஸஃத் இப்னு முஆத் என்ற இருவரும் இவர்களிடம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களே.

7- அதன் பின்னர் நபியவர்கள் மக்காவின் முஸ்லிம்களை, மதீனாவுக்கு  ஹிஜ்ரத் செல்ல அனுமதியளித்தார்கள். எனவே மக்கள் இடம் பெயரலானர். அவர்களைத் தொடர்ந்து ரஸூல் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர் அபூ பகர் ஸீத்தீக் (ரழி) அவர்களும் மதினாவுக்கு ஹிஜரத் செய்தனர்.

8- அங்கு தொண்ணூறு பேர்களைக் கொண்ட அன்ஸாரீன்களுக்கும், முஹாஜிரீன்களுக் குமிடையில் சகோதர ஒப்பந்தம் ஒன்றை நபியவர்கள் செய்து வைத்தார்கள்.

நபியவர்களின் அமானிதம் பேணுதல், நல்லிணக்கம் மற்றும், தூதுவர்களுடன் நடந்து கொண்டமுறை

1-“அன்னிய ஒருவருக்கு ஒரு முஸ்லிம் வழங்கிய பாதுகாப்பு உத்தரவாத விடயத்தில் சகல முஸ்லிம்களும்  சமமானவர்கள். எனவே கீழ் மட்டத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதமும் இதன்படியே  கையாளப்படும்” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் “எவருக்கேனும் இன்னொரு சமூகத்துடன் உடன்படிக்கை ஏதுமிருந்தால், அதன் காலக்கெடு முடியும் வரையில் அதன் ஒரு முடிச்சையேனும் அவர் அவிழ்த்து விடவோ, அல்லது அதில் இன்னொரு முடிச்சு போடவோ கூடாது, ஆனால் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டாலோ இதனைப் பேண வேண்டிய தில்லை. அவர்களும் இவ்விடயத்தில் சமமானவர் கள்.​” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2- மேலும் “எவராகிலும் ஒரு மனிதனின் உயிருக்குப் பாதகாப்பு உத்தரவாதம் வழங்கிய பின்னர், அவர் அந்த நபரைக் கொலை செய்து விடுவாராகில், நான் கொலைகாரனின் பொறுப்பிலிருந்து நீங்கிக் கொண்டேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

3- இரண்டு தூதர்கள் முஸைலமா என்பானிடமிருந்து வந்து,  ரஸூல் (ஸல்) அவர் களிடம்  பேச வேண்டியதை எல்லாம் பேசிய பின் நபியவர்கள், அவர்களைப் பார்த்து “தூதுவர் கொல்லப்படலாகாது என்று இல்லாதிருந்தால், உங்கள் இருவரின் கழுத்தையும் நான் வெட்டி இருப்பேன்” என்று கூறினார்கள். இதன் பின் தூதுவர் எவரையும் கொலை செய்யக் கூடாது என்ற நபியின் வழி முறை அமுலுக்கு வந்தது.

4- நபியவர்கள் தங்களிடம் வந்த தூதர் எவரும் தங்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால், அன்னவரைத் தம்முடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நபியவர்கள் அவரை திருப்பி அனுப்பி விடுவார்கள். 

5- ரஸூல் அவர்களிடம் அனுமதி பெறாமல்​, முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமில்லாத ஒரு விடயத்தில் நபித் தோழர் எவருடனாவது, தங்களின் எதிரிகள் எவரும் உடன்படிக்கை செய்து கொண்டால், அதனை செயற் படுத்த நபியவர்கள் இடமளித்தார்கள்.

6- ரஸூல் (ஸல்) அவர்கள் எதிரிகளுடன் பத்தாண்டு கால யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட்டார்கள். அதில் எதிர் தரப்பிலிருந்து இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று தங்களிடம் வருகின்ற வரை அவர்களிடமே திருப்பி அனுப்பிவிட ணேடும் என்றும், முஸ்லிம்களின் தரப்பிலிருந்து எதிரி களிடம் வருகின்றவரைத் தங்களிடம் திருப்பி யனுப்ப வேண்டியதில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் எதிர் தரப்பி லிருந்து வரும் பெண்கள் விடயத்தில் இந் நிபந்தனையில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தி னான். எனவே அங்கிருந்து வரும் பெண்களைப் பரிசோதனை செய்து பார்த்து, அவர்கள் முஸ்லிம்கள்தான் என்பது தெளிவாகிய பின்னர் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான்.

7- முஸ்லிம் ஒருவரின் மனைவி முர்தத்தாகி விட்டால், அவளுக்கு கொடுக்கவிருக்கும் மஹரை ​அவளுக்குத திருப்பிக்  கொடுத்து விடவேண்டும், என்று முஸ்லிம்களுக்கு நபியவர்கள் கட்டளை யிட்டார்கள். இதன்படி காபிரான ஒருவனின் மனைவி அவனின் மார்க்கத்தை விட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால், அவர்கள் அந்த “முஹாஜிரா”​ பெண்ணின் மஹரைத் திருப்பிக் கொடுப்பதுவும் கடமையாகி விடும். ​  

8- எதிரிகளிடமிருந்து தப்பி வந்து, தங்களிடம் சேர்ந்து கொண்ட ஒருவரை, எதிரிகள் எடுத்துச் செல்லுமிடத்து, அதனை நபியவர்கள் தடுக்க வில்லை. அத்துடன் திரும்பி வரும்படி அவரைத் வற்புருத்தவில்லை, கட்டளையிடவுமில்லை. மேலும் அவர்களிடமிருந்து தப்பி வந்த ஆண்கள், ரஸூல் (ஸல்) அவர்களின் கையிலிருந்து விடுபட்டு செல்லும் போது அவர்கள் தங்களின் எதிரியைக் கொலை செய்து விட்டாலோ, அல்லது அவர்களின் பொருள் எதனையும் எடுத்துக் கொண்டு, அவர்கள் தங்களிடம் வந்து சேர வில்லை என்றாலோ, அவர்களின் அந்த செயலை ரஸூல் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. அத்துடன் அவர்களுக்காக அதன் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை.

9- கைபர் வாசிகளுடன் ரஸூல் (ஸல்) அவர்கள் சமாதான உடன்படிக்கை யொன்று செய்து கொண்டார்கள். அப்போது அவர்கள், தாங்கள் விரும்பியதை எடுத்துச் செல்லலாம் என்றும், அதன்படி அவர்களின் ஒட்டங்களில் ஏற்றிக் கொள்ளும் அனைத்தும் அவர்களுக்கு உரியதென்றும்,  தங்கமும், வெள்ளியும் மற்றும் ஆயுதமும் அல்லாஹ்வின் தூதருக்குரியன என்றும் குறிப்பிட்டார்கள்.

10- மேலும்  பூமியின் உற்பத்தியில் பாதியை அவர்கள்  எடுத்துக் கொள்ளலாம் என்றும், இன்னும் அவர்கள் விரும்பிய காலம்வரை அதில் குடியிருக்கலாம் என்றும் அவர்களுடன் நபியவர் கள் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். மேலும் அவர்களின் கனிகளை மதிப்பீடு செய்வதற்காக வருடம் தோறும் மதிப்பீட்டா ளர்களை அனுப்பினார்கள். மரத்திலிருந்து பறிக்கும் கனிகளை அவர்கள் கவணித்து மதிப்பீடு செய்த பின்னர், முஸ்லிம் தரப்பினருக்கு கிடைக்க வேண்டிய பங்கினை நபியவர்கள் பொறுப்பேற்று, அதனை முஸ்லிம் சமூக விவகாரத்தில் பயன் படுத்தினார்கள்.

மன்னர்களுக்கு அழைப்பு விடுத்தலும், அவர்களின் பால் தூதர்களையும், நிருபங்களையும் அனுப்புதலும்​

 1-ரஸூல் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா விலிருந்து திரும்பியதும், அரசர்களுக்கு கடிதங்கள் எழுதவும், அவர்களிடம் தூதுவர்களை அனுப்பவும் தொடங்கினார்கள். அச்சமயம் உரோமாபுரி  அரசனுக்குக் கடிதம் ஒன்று எழுதி அதனை அவருக்கு அனுப்பி வைத்தார்கள். அது கண்டு அவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றிட எண்ணிய போதிலும் அவர் அப்படி செய்யவில்லை.

2- மன்னர் நஜ்ஜாஷி அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்கள். அவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்.

3- யமன் தேசத்திற்கு அபூ மூஸா அல் அஷ்அரீ அவர்களையும், மஆத் இப்னு ஜபல் அவர்களையும் அனுப்பினார்கள். அந்நாட்டுப் பிரஜைகள்   எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

முனாபிக்குகளும் நபியவர்களின் நடவடிக்கையும்

1- முனாபிக்குகள் வெளிப்படையில் சொல்வதை ரஸூல் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டு, அவர்களின் அந்தரங்க விவகாரங்களை அல்லாஹ்விடம் சாட்டினார்கள். மேலும் ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் அடிப்படை யாக வைத்தே அவர்களுடன் செயவாற்றினார்கள். அவர்களின் உண்மை நிலை தெரிய வந்ததும் அவர்களைப் புறக்கனித்தார்கள். அவர்களுடன் கடுமையாகவும் நடந்து கொண்டார்கள். மேலும் தெளிவான வார்த்தைகளைக் கொண்டு அவர்களின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

2- மேலும் அவர்களின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்து முகமாக அவர்களை நபியவர்கள் கொலை செய்ய வில்லை. “முஹம்மத், தன் சஹாக்களை கொலை செய்கின்றார், என்று மக்கள் பேசிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகளாரின் தியானம்

 ​அல்லாஹ்வை நினைவு கூறுவதிலும், அவனைத் தியானிப்பதிலும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு பரிபூரணமான மனிதராக விளங்கினார்கள். மொத்தத்தில் நபியவர்களின் பேச்சுக்கள் யாவும் அல்லாஹ்வை நினைவு கூறுகின்ற, அதனுடன் தொடர்புடைய விடயங்க ளாகவே இருந்தன. மேலும் நபியவர்கள், சமூகத்தினருக்கு வழங்கிய ஏவலும், விலக்களும், சட்டங்களும் அல்லாஹ்வை நினைவு படுத்துகின் றனவாகவே இருந்தன. மேலும் நபியவர்களின் மௌனம் அவர்கள் அல்லாஹ்வை மனதில் நினைவு கூறுகின்றதாய் விளங்கின. அவாறே நபியவர்கள் எழுந்து நிற்கும் போதும், உட்காரும் போதும், சாய்ந்து இருக்கும் போதும், நடந்து செல்லும் போதும், வாகனத்தில் ஏறும் போதும், அதிலிருந்து இறங்கும் போதும், பிரயாணத்தி லிருக்கும் போதும், மற்றும் ஊரில் இருக்கும் போதும் அன்னார் விடும் ஒவ்வொரு மூச்சிலும் அல்லாஹ்வைப் பற்றிய நினைவும், தியானமும் ஓடிக் கொண்டிருந்தன.

ரஸூல் (ஸல்) அவர்களின் காலை, மாலை துஆ

1-ரஸூல் (ஸல்) அவர்கள் காலையில் எழுந்ததும்,​

أَصْبَحْنَا عَلَى فِطْرةِ الإِسْلَامِ وَعَلَى كَلِمَةِ الإخْلاَصِ، وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صلى الله عليه وسلم، وَعَلَى مِلَّةِ أبِينَا إبْرَاهِيْمَ، حَنِيْفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ المُشْرِكِينَ

 “இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் தூய்மையான வாக்கின் மீதும், நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களினதும் மற்றும் இணைவைக்கும் கூட்டத்தைச் சேராத தூய்மையான, முஸ்லிமான நம் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களினதும் மார்க்கத்தின் மீதும், நாம் இருக்கும் நிலையில் நமது காலைப்பொழுதை அடைந்து கொண்டோம்.” என்று கூறுவார்கள். மேலும் உங்களில் எவரும் காலைப் பொழுதை அடைந்து கொண்டதும்,

اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور

“அல்லாஹ்வே! உன் பொருட்டால் நாம் காலைப் பொழுதையும் மாலைப் பொழுதையும் அடைந்து கொண்டோம், மேலும், உன் பொருட்டாலேயே நாம் உயிர் வாழ்கின்றோம், நாம் மரணமடைவதும்.  அதன்படியே.  ​மேலும் உன் பக்கமே நாம் மீண்டும் எழுப்பப் படுவோம்.” என்றும்

أصبحنا وأصبح الملك لله رب العالمين ، اللهم إني أسألك خير هذا اليوم فتحه، ونصره ،ونوره ،وبركته، وهداه، وأعوذ بك من شر ما فيه وشر ما بعده" 

“ஆட்சி அதிகாரம் யாவும் சர்வலோக இரட்சகனாம் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்துடையதாக இருக்கும் நிலையில், காலைப் பொழுதை நாம்  அடைந்து விட்டோம். அல்லாஹ்வே! இந் நாளின் வெற்றி, உதவிகள், பிரகாசம், மற்றும் அதன் பரகத்து, நேர் வழி அனைத்தையும் நமக்குக் பெற்றுத் தருமாறு நான் உன்னிடம் வேண்டுகின்றேன். மேலும் இத்தினத்திலும், அதன் பின்னரும் ஏற்படக் கூடிய சகல தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்,” என்றும்  கூறும் படி நபியவர்கள் நவின்றார்கள்.

    2- மேலும் سيد الإستغفار “தலைமைப் பாவ மண்ணிப்புக்” கோரல் என்றால்

اللَّهُمَّ أَنْتَ رَبِّي ، لا إِلَه إِلاَّ أَنْتَ خَلَقْتَني وأَنَا عَبْدُكَ ، وأَنَا على عهْدِكَ ووعْدِكَ ما اسْتَطَعْتُ ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ ما صنَعْتُ ، أَبوءُ لَكَ بِنِعْمتِكَ علَيَ ، وأَبُوءُ بذَنْبي فَاغْفِرْ لي ، فَإِنَّهُ لا يغْفِرُ الذُّنُوبِ إِلاَّ أَنْتَ . منْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِناً بِهَا ، فَمـاتَ مِنْ يوْمِهِ قَبْل أَنْ يُمْسِيَ ، فَهُو مِنْ أَهْلِ الجنَّةِ ، ومَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وهُو مُوقِنٌ بها فَمَاتَ قَبل أَنْ يُصْبِح ، فهُو مِنْ أَهْلِ الجنَّةِ » رواه البخاري .   

அல்லாஹ்வே! என் இரட்சகன் நீயே,. வணக்கத்திற்குத் தகுதியானவன் உன்னையன்றி எதுவும் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நானோ உன் அடிமை. நான் என்னால் முடிந்த வரை உன் உடன்படிக்கையின் மீதும் உனக்களித்த வாக்குறுதியின் மீதும் உறுதியாக இருக்கின்றேன். நான் மேற் கொள்ளும் தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மேலும் நீ என் மீது சொரிந்துள்ள அருட்கொடைகளை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அத்துடன் எனது குற்றங்களையும் நான் ஒப்புக் கொள்கின்றேன். ஆகையால் நீ என்னை மன்னித்தருள்வாயாக. ஏனெனில் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு எவரும் இல்லை.” என்ற வாசகங்களாகும்.

எனவே எவர் இந்த வாசகங்களைக் காலையில் எழுந்ததும்  உறுதியான எண்ணத்துடன் ஓதுகின் றாரோ, அவர்  அன்று மாலைப் பொழுதை அடைய முன்னர் மரணமடைந்து விடுவாராகில், அவர் சுவர்க்கத்தில் பிரவேசித்து விடுவார். மேலும் எவர் இதனை மாலைப் பொழுதிலோ, இரவிலோ​ உறுதியான எண்ணத்துடன் ஓதுகின்றாரோ, அவர் அன்றைய இரவில் மரணமடைந்து  விடுவாராகில் அவரும் சுவர்க்கதில் பிரவேசித்து விடுவார்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.​

3- மேலும் ஒருவன் காலையில் நூறு தடவைகள்,

لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ

“வணக்கத்துக்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வையன்றி எதுவமில்லை. அவன் ஒருவன். அவனுக்கு இணை எதுவுமில்லை. சகல ஆட்சி அதிகாரங்களும், பாராட்டுக்களும் அவனுக்கே உரியன.  மேலும் சர்வ விடயங்கள் மீதும் வல்லமை யுடையவனும் அவனே.”  எனும்  வாசகங்களை ஓதி வருவானாகில், அது அவன் பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமனாகும், மேலும் அதன் நிமித்தம் அவனுக்குப் பத்து நன்மைகள் எழுதப்படும். அவனுடைய பத்துத் தீமைகள் அழிக்கப்படும். மேலும் அன்றைய தினம் அவன் மாலைப் பொழுதை அடையும் வரையில் சைத்தானை விட்டும் அவனைப் பாது காக்கும் அரனாகவும் அது விளங்கும், என்றும், மேலும் இதனுடன் இன்னும் மேலதிக நல்லமல் செய்த ஒரு மனிதனையல்லாது வேறு எவரும் இவன் செய்த நல் அமலுக்கு ஈடாக எதனையும் கொண்டு வர இயலாது,” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   

4- மேலும் காலையில் எழுகின்ற போதும், மாலைப் பொழுதை அடைகின்ற போதும் ரஸூல் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆக்களை ஓதுவார்கள்,

اللهم إني أسألك العافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عورتي، اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي.

“அல்லாஹ்வே! இவ்வுலகிலும் மறு உலகிலும் சுக வாழ்வை உன்னிடம் வேண்டு கிறேன். அல்லாஹ்வே! என்னுடைய உலக, மறுமை, குடும்ப, மற்றும் என் பொருளாதாரம்  ஆகிய விவகாரங்களில் மன்னிப்பையும், நல்லதையும் ஏற்படுத்தித் தருமாறு உன்னிடம வேண்டுகிறேன். அல்லாஹ்வே என்னுடைய தவறுகளை மறைத்திடுவாயாக. அல்லாஹ்வே! என் எதிர் புறத்தாலும், பின் புறத்தாலும், வலது புறத்தாலும், இடது புறத்தாலும், மேல் புறத்தாலும் என்னைப் பாதுகாப்பாயாக. மேலும் நான்  மண்ணுக்குள் புதையுண்டு கொல்லப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.”

5- மேலும்,

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم،

“பூமியிலும் வானத்திலுமுள்ள எந்தவொரு பொருளும் அல்லாஹ்வின் பெயருடன்  தீமை எதுவும் விளைவிக்காது. அவன் அனைத்தையும் கேட்கின்றவனாகவும், எல்லாவற்றையும் அறிந்தவ னாகும் இருக்கின்றான்” 

என்ற வாசகத்தை தினமும் காலையிலும் மாலையிலும் ஓதி வருகின்ற அடியனை எந்த வொரு ​தீங்கும் விளைவிக்காது” என்று ரஸூ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6- “நான் காலையிலும் மாலையிலும் ஓதி வரும்படியாக ஏதேனும் ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று அபூ பக்ர் (ரழி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, அதற்கு நபிகளார்,

اللهم فاطر السموات والأرض عَالِمَ الغيب والشَّهادة، ، رب كل شيء ومليكه، أشهد أن لا إله إلا أنت . أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه وأن اقترف على نفسي سوءًا أو أجُره إلى مسلم "

“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வே! மறைவானதையும், வெளிப்படை யானதையும் அறிந்தவனே! எல்லா வஸ்துக்களை யும் இரட்சிப்பவனே! அதன் சொ​ந்தக்காரனே! உன்னை யன்றி வணக்கத்திற்குத் தகுதியான எதுவுமில்லை, என்று நான் சாட்சி பகர்கின்றேன். மேலும் ​என் ஆத்மாவின் தீமையையும், மற்றும்  சைத்தானின் தீமையையும், அவனை இணையாக ஆக்கிக் கொள்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். மேலும் நானே என் உயிருக்கு தீமை எதனையும் விளைவிப்பதை, அல்லது இன்னொரு முஸ்லிமிடம் அதனை இழுத்து வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.​​​”​ என்ற வாசகத்தை நீங்கள் காலையிலும், மாலையிலும், இன்னும்ம் நீங்கள் படுக்கைக்குச் செல்லும போதும் ஓதி வாருங்கள், என்று கூறினார்கள்.

 ரஸூல் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள்ளே  வரும் போதும், வெளியே செல்லும் போதும்

1-   ரஸூல் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும் போது,

باسم الله توكلت على الله ، اللهم إني أعوذ بك أن أضل أو أضل ، أو أزل أو أزل ، أو أظلم أو أظلم ، أو أجهل أو يجهل علي

“அல்லாஹ்வின் பெயரால் என் பொறுப்புக்களை அல்லாஹ் விடமே சாட்டி விட்டேன்​. அல்லாஹ்வே! நான் வழி கெடுப்பதை யும், வழி கெடுக்கப்படுவதையும் விட்டும். மேலும் நான் பிறரைச் சறுக்கி விடுவதையும், பிறர் மூலம் நான் சறுக்கி விடப்படுவதையும் விட்டும், மேலும் நான் அநீதி விளைவிப்பதையும், பிறர் மூலம் எனக்கு அநீதி உண்டாவதையும் விட்டும் மேலும் நான் மற்றவரை முட்டாள் ஆக்குவதையும், மற்றவர் மூலம் நான் முட்டாள் ஆக்கப்படுவதையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.” என்று கூறுவார்கள்.

2- மேலும் எவர் தன் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது,

من قال إذا خرج من بيته  بسم الله توكلت على الله  ولاحول ولا قوة إلا بالله ، يقال له : كفيت ووقيت وهديت ، وتنحى عنه الشيطان

“அல்லாஹ்வின் பெயரால், என் பொறுப்புக்களை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்​. அல்லாஹ்வின் உதவியின்றி எந்த வொருளிலும் எவ்வித அசைவும், சக்தியும் இல்லை.” என்ற வாசத்தை கூறிக் கொள்கின்றாரோ, அவரிடம் “உனக்குப் போதிய அளவு வழங்கப்பட்ட விட்டது., நீ பாதுகாக்கப்பட்டு விட்டாய், மேலும் சீரான வழியும் உனக்கு  காட்டப்பட்டு விட்டது. மேலும் அவனிடமிருந்து சைத்தானும்  தூரமாகி விட்டான்” என்று கூறப்படுமென, ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

          3-மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பஜ்ருத் தொழுகைக்காகப் புறப்படும் போது.

للهم اجعل في قلبي نوراً، وفي لساني نوراً، وفي بصري نوراً، وفي سمعي نوراً، وعن يميني نوراً، وعن يساري نوراً، ومن فوقي نوراً، ومن تحتي نوراً، ومن أمامي نوراً، ومن خلفي نوراً، واجعل لي في نفسي نوراً، وأعظم لي نوراً)

“அல்லாஹ்வே! என் உள்ளத்திலும், என் நாவிலும், என் பார்வையிலும், என் செவியிலும், என் வலப் புறத்திலும், என் இடப் புறத்திலும், என் மேல் புறத்திலும், என் கீழ் புறத்திலும்,  என் முன் புறத்திலும், என் பின் புறத்திலும், மேலும் என் ஆத்மாவிலும் பிரகாசத்தை ஏற்படுத்தி, என் பிரகாசத்தை இன்னும் அதிகப்படுத்தி வைப்பாயாக.” என்று பிரார்த்தனை செய்வார்கள்.  ​

4-  وفال رسول الله اذا ولج الرجل بيته فليقل

  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ ، وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا،

 மேலும் ஒருவர் தன் வீட்டில் பிரவேசிக்கும் போது,

“அல்லாஹ்வே! நான் பிரவேசிக்கும் இடத்தை நல்லதாய் ஆக்கியருள்வாயாக. மேலும் நான் புறப்பட்டுச் செல்லும் இடத்தையும் நல்லதாய் ஆக்கியருள்வாயாக. அல்லாஹ்வின் பெயரால் நாம் இங்கு பிரவேசித்தோம். மேலும் அல்லாஹ்வின் பெயரால் நாம் இங்கிருந்து புறப்பட்டோம். மேலும் நம் இரட்சகனாம் அல்லாஹ்வின் மீது நமது பொறுப்புகளைச் சாட்டி விட்டோம்” என்ற வாசகங்களைச் சொல்லி விட்டு,  ثُمَّ لِيُسَلِّمْ عَلَى أَهْلِهِ அவர் தன் வீட்டார் மீது ஸலாம் சொல்வாராக” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.​​

நபியவர்கள் பள்ளி வாசலில் பிரவேசிக்கும் போது

1-   ரஸூல் (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் பிரவேசிக்கும் போது,

أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم

“கண்ணிய மிக்க அல்லாஹ்வின் பொருட்டால்., அவனின் கண்ணியமான திருமுகத்தின் பொருட்டால், அவனின் பூர்வீக அதிகாரத்தின் பொருட்டால், தூக்கி எறியப்பட்ட சைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்.” என்று கூறுவார்கள். மேலும் இப்படிக் கூறினால், “அவர் இன்றைய தினத்தில் என்னிடமிருந்து முற்றாகப் பாதுகாக்கப்ப்பட்டு விட்டார்” என்று சைத்தான் கூறுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். 

2-மேலும் உங்களில் எவ​ரேனும் பள்ளி வாசலில் பிரவேசிக்கும் போது, அவர் ரஸூல் (ஸல்) அவர்ளின் மீது ஸலாத்தும் ஸலாமும் கூறிய பின்னர்,

اللهم افتح لي أبواب رحمتك ،

“அல்லாஹ்வே! உன்னுடைய  அருள் நிறைந்த வாசல்களை எனக்குத் திறந்து விடுவாயாக” எனறும், பள்ளி வாசலில் இருந்து வெளியே வரும் போது.

 اللهم إني أسألك من فضلك

“அல்லாஹ்வே! நான் உன்னிடம் , உனது அருளை வேண்டுகிறேன், என்றும் அவர்  கூறிக் கொள்வாராக” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தலைப் பிறையைக் காணும் போது

ரஸூல் (ஸல்) அவர்கள் தலைப்பிறையைக் காணும் போது,

اللهـم أَهْللـهُ علينـا باليمـنِ والإيمـان ، والسـلامةِ والإسـلام ، ربـي وربُّـكَ الله

“என்னுடைய இரட்சகனும், உன்னுடைய இரட்சகனும் அல்லாஹ்தான். ஆகையால் அல்லாஹ்வே! இந்தப் பிறை மூலம் நம் மீது  அருளையும், ஈமானையும், மற்றும்  சாந்தியையும், இஸ்லாத்தையும் வெளிப்படுத்துவாயாக” என்று சொல்வார்கள்.

தும்மல் மற்றும் கொட்டாவி ஏற்படும் போது

1- “அல்லாஹ் நிச்சயமாக தும்மலை விரும்புகின்றான். மேலும் கொட்டாவியை வெறுக்கின்றான். எனவே உங்களில் எவரேனும் தும்மிய பின்னர் அவர் الحمد لله என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டால்., அதனைச் செவியுறும் ஒரு முஸ்லிம்  يرحمك الله  “அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக” என்று செல்வது  அவர் மீது கடமை. ஆனால் கொட்டாவி சைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். ஆகையால்  உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வந்து விட்டால், அவர் தன்னால் முடிந்த வரை அதைத் தடுத்துக் கொள்ளட்டும். ஏனெனில் கொட்டாவி விட்டவரைப் பார்த்து சைத்தான் சிரிக்கின்றான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2-ரஸூல் (ஸல்) அவர்களுக்கு கொட்டாவி வந்து விட்டால் நபியவர்கள் தங்களின் வாய் மீது தங்களின் கையை அல்லது துணியை வைத்துக் கொள்வார்கள். அதன் மூலம் தங்களின் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள் அல்லது மறைத்துக் கொள்வார்கள்.

3-ரஸூல் (ஸல்) அவர்கள் தும்மியதைக் கேட்டு, அன்னாரிடம் يرحمك الله   “அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக” என்று கூறப் பட்ட போது, அதற்கு நபியவர்கள்,  يرحمنا الله وإياكم ويغفر لنا ولكم " அல்லாஹ் நம் மீதும், உங்கள் மீதும் அருள் புரிவானாக, மேலும் நம்மையும், உங்களையும் அவன் மன்னிப்பானாக” என்று கூறுவார்கள்.

4-மேலும் உங்களில் ஒருவருக்குத் தும்மல் வந்து விட்டால், அவர் الحمد لله " புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும்” என்று கூறுவாராக. அதற்கு அவரின் சகோதரன் அல்லது அவரின் தோழன் يرحمك الله “அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக” என்று கூறுவாராக. அதற்கு அவர் يهديكم الله ويصلح بالكم “அல்லாஹ் உஙகளுக்கு நேர் வழியைத் தந்து உங்களின் விவகாரங்களைச் சீரமைத்துத் தருவானாக” என்று கூறட்டும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5-உங்களில் தும்மல் ஏற்பட்ட ஒருவர், அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வாராகில், நீங்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ வில்லை எனில், நீங்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டாம். மேலும் ஒருவர் மூன்று தடவைக ளுக்கும் அதிகமாக தும்மி விட்டால் அவருக்காவும் பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை. என்னும் “இவர் ஜலதோசம் பிடித்த ஒரு மனிதர்” என்று கூறிவிட வேண்டும், என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ​

6-மேலும் யூதர்கள் தங்களுக்காக ரஸுல் (ஸல்) அவர்கள் يرحمكم الله  “அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக” என்று பிரார்த்தனை செய்ய வேண்டு மென்பதை எதிர்பார்த்தவர்களாக, நபியவர்களிடம் வந்து தும்முவார்கள். அப்போது நபியவர்கள், ​ يهديكم الله ويصلح بالكم “அல்லாஹ் உங்களுக்கு நேர் வழியைத் தந்து, உங்களின் விவகாரங்களைச் சீரமைத்துத் தருவானாக” என்று கூறுவார்கள்.

 சோதனைக்கு​ள்ளானவனைக் காணும் போது ஓதும் துஆ

சோதனைக்குள்ளானவனைக் காணும் ஒருவன், அந்நேரத்தில்            

" الْحَمْدُ لِلّهِ اَّلذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلاَكَ بِه ، وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلاً

    “புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் உன்னை சோதித்துள்ள விடயத்திலிருந்து என்னைப் பாதுகாத்து எனக்கு ஆரோக்கியத்தைத் தந்திருக்கின்றான். மேலும் அவன் தனது அதிகமான சிருஷ்டிகளுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை விடவும் ஏராளமான அருட்கொடைகளை எனக்கு வழங்கியுள்ளான்.”  எனும் வாசகங்களை ஓதினால், அத்தகைய சோதனை எங்கு ஏற்பட்ட போதிலும், அது அவனைத் தீண்டாது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கழுதை கத்துவதையும், சேவல் கூவுவதையும் கேட்கும் போது

கழுதை கத்தும் சத்தம் கேட்டால், சைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடு மாறும், சேவல் கூவும் சத்தம் கேட்டால் அல்லாஹ்விடம் அவனின் அருளைக் கேட்குமாறும், ரஸூல் (ஸல்) தன் உம்மத்திரனருக்குக் கட்டளையிட்டார்கள்.

 கடும் கோபத்துக்குள்ளானவன்  செய்ய வேண்டியது

    கடும் கோபத்துள்ளானவனை வுழூஃ செய்து கொள்ளுமாறு ரஸூல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். மேலும் அப்போது அவன் நின்று கொண்டிருந்தால் அவனை உட்கார்ந்து கொள்ளுமாறும், அவன் உகார்ந்து கொண்டிருந்தால் சாய்ந்து கொள்ளுமாறும், அத்துடன் சைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுமாறும் அவனை, ரஸூல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

 அதானும், அதன் திக்ருகளும்

    1-அதானை تَرْجِيْعْ செய்தும்   تَرْجِيْعْ இல்லாமலும், சொல்லும் முறையை ரஸூல் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். (تَرْجِيْعْ என்றால் அதான் சொல்லும் போது الله اكبر​  என்ற வாசகத்தை நான்கு தடவைகள் கூறிய பின் اشهد ان لااله الاالله என்ற வாசகத்தையும், اشهد ان محمدا رسول الله எனும் வாசகத்தையும் இரண்டு தடவைகள் மெதுவாகவும், மேலும் இரண்டு தடவைகள் சத்தத்தை உயர்த்தியும் கூறுவதைக் குறிக்கும். இதன்படி இந்த வாசகம் ஒவ்வொன்றும் நான்கு தடவைகள் உச்சரிக்கப்படும்)

          2-அதான் சொல்வதைச் செவி மடுக்கும் ஒருவன், حي على الصلاة حي على الفلاح எனும் வாசகங்கள் தவிர ஏனைய வாசகங்களைக் கேட்கும் போது  பதிலுக்கு முஅத்தின் சொல்வது போன்று அதே வாசகங்களைத் திரும்பச் சொல்லும் படியும், எனினும் அவ்விரு வாசகங்களையும் செவி மடுக்கும் போது,​ لاحول ولاقوة إلا بالله எனும் வாசகத்தைக் கூறுமாறும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

          3-மேலும் அதான் சொல்வதைக் கேட்கும் ஒருவன,

أنَا أشْهَدُ أنْ لاَ إلهَ إلاَّ اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَأنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ، رَضِيْتُ باِللهِ ربًّا، وَبِمُحَمَّدٍ رَسُوْلاً، وَبِالإسْلَامِ دِيْنًا،

“வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி எதுவுமில்லை, அவன் ஒருவன், அவனுக்கு இணை எதுவுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன். மேலும் அல்லாஹ் என் இரட்சகனாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் என் ரஸூலாகவும், இஸ்லாம் என்னுடைய மார்க்கமாகவும் இருப்பதை இட்டு நான் திருப்தி அடைகின்றேன்.” என்று கூறினால், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என ஒரு ரிவாயத்தில் பதிவாகியுள்ளது. 

          4-மேலும் எவர் அதான் ஒலியைக் கேட்டு, அதற்குப் பதில் கூறிய பின், ரஸூல் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்து உரைத்து, அதனைத் தொடர்ந்து,

(اللهم رب هذه الدعوة التامة، والصلاة القائمة، آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاماً محموداً الذي وعدته) 

“பரிபூரண இந்த அழைப்பினதும், நிலையான தொழுகையினதும் உரிமையாளனான அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்திலுள்ள “வஸீலா” எனும் மேலான இடத்தையும், மற்றும் மேலதிக அந்தஸ்தையும் வழங்குவாயாக. மேலும் நீ வாக்களித்துள்ள “மகாமுன் மஹ்மூத்” என்ற சபாஅத் செய்யும் அந்தஸ்தையும் அவருக்கு வழங்குவாயாக” என்று சொல்வாராகில், அவருக்கு தன்னுடைய சபாஅத் கிட்டும், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

    5-மேலும் அதானுக்கும், இகாமத்திற்கும் இடையில் கேட்கும் பிராத்தனை, மறுக்கப்பட மாட்டாது, என்று நபியவர்கள் கூறினார்கள்.

 துல் ஹிஜ்ஜா மாத்தில் திக்ரில் ஈடுபாடு கொள்ளல்

    ரஸூல் (ஸல்) அவர்கள் துல்ஹிஜ்ஜா மாத்தின் பத்தாவது நாளில் துஆ பிரார்த்தனையில் அதிகமாக ஈடுபட்டு வந்தார்கள். மேலும் அத்தினத்தில் அதிகமாக கலிமாவும், தக்பீரும் சொல்லுமாறும், இன்னும் அல்லாஹ்வை அதிகமதிகப் புகழுமாறும் கட்டளை யிட்டார்கள்

 அல்குர்ஆன் பாராயணம்

ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு “ஹிஸ்பு” குர்ஆனை  சிரமம் எதுவுமின்றி ​ஓதுவார்கள். (அல் குர்ஆனின் பதினைந்து பாகங்கள் ஒரு ஹிஸ்பு, எனப்படும்)

ரஸூல் (ஸல்) அவர்கள் அல் குர்ஆனை அவசரமாகவும் வேகமாகவும் ஓதியதில்லை. அதனை முறைப்படி தர்த்தீலாக ஓதினார்கள். எனவே அவர்கள் ஓதும் போது ஒவ்வொரு எழுத்தும் தெளிவாக விளங்கத் தக்கதாய் இருந்தன.

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் எல்லா ஆயத்தின் முடிவிலும் அதனை நிறுத்தி,  அடுத்து வரும் ஆயத்தினை அதிலிருந்து பிரித்து, ஓதுவார்கள்.

மேலும் நபியவர்கள் அல் குர்ஆனை ஓதும் போது, மத்துடைய எழுத்துக்களான நெடில் எழுத்துக்களை நீட்டி ஓதுவார்கள். இதன் பிரகாரம் الرحمن, الرحيم எனும் சொற்களை நீட்டி ஓதுவார்கள்.

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் கிராஅத்தை ஆரம்பம் செய்யும் போது أعوذ بالله من الشيطان الرجيم என்று கூறி சைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்வார்கள். சில வே​ளை,

 اللهم إني أعوذبك من الشيطان الرجيم مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ

“அல்லாஹ்வே! எறியப்பட்ட சைத்தானின் தீங்குகள்,​ஊசலாட்டங்களை விட்டும், மேலும் அவன் வாயிலிருந்து வெளியாகும் காற்று, எச்சில்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.

நபியவர்கள் நிலையிலும், உட்கார்ந்தும், சாய்ந்தும், வுழூவுடனும், வுழூ இல்லாமலும் அல்குர்ஆனை ஓதி இருக்கின்றார்கள். அவர்கள் ஜனாபா எனும் பெரும் தொடக்குடன் இருந்த சந்தர்ப்பங்களைத் தவிர வேறு எந்தவொரு சந்தர்ப்பமும் அவர்கள் அல்குர்ஆனை ஓத தடையாக இருக்கவில்லை.

நபியவர்கள் அல்குர்ஆனை இராகத்துடன் ஓதுவார்கள். மேலும் “அல்குர்ஆனை இராகத்துடன் ஓதாதவன் நம்மைச் சார்ந்வனல்ல” என்றும், “நீங்கள் உங்களின் ஓசை மூலம் அல்குர்ஆனை அழகு படுத்துங்கள்” என்றும் கூறினார்கள்.

இன்னொருவர் அல்குர்ஆனை ஓத, அதனை  ரஸூல் (ஸல்) அவர்கள்  விருப்பத்துடன் செவிமடுத்து வந்தார்கள்.

நபியவர்கள் அல்குர்ஆனை ஓதும் சந்தர்ப்பத்தில் ஸஜதாவின் வசனம் வந்தால், தக்பீர் கூறி ஸஜதா செய்வார்கள். அவ்வமயம் சில வேளை ஸுஜூதில் இருந்த வாறு,

سَجَد وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ ‏وَشَقَّ سَمْعَهُ وَبَصرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ" 

“தன் செயலாலும் வல்லமையாலும் தன்னைப் படைத்து, வடிவமைத்து, தன் செவியையும், பார்வையையும் திறக்கச் செய்து அதனைக் கேட்கவும், பார்க்கவும் செய்த அல்லாஹ்வுக்கு என் முகம் சாஸ்டாங்கம் செய்தது​” என்றும், இன்னும் சில வேளை

" اللهم أكْتُبْ لِيْ بِهَا عِنْدَكَ أجْرًا ، وَضَعْ عَنِّيْ بِهَا وِزْرًا ، وَاجْعَلْهَا لِيْ عِنْدَكَ ذُخْراً ، وَتَقَبَّلْهَا مِنِّيْ كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُوْدَ "

“அல்லாஹ்வே! இதன் மூலம் உன்னிடம்  எனக்கொரு கூலியை பதிவு செய்து வைப்பாயாக. மேலும் இதன் மூலம் என் பாவ மொன்றை அழித்து விடுவாயாக. மேலும் இதனை உன்னிடம் எனது சேமிப்பாகவும் வைத்து உன்னுடைய அடியார் தாவூதிடமிருந்து நீ இதனை ஏற்றுக் கொண்டது போல், என்னிடமிருந்தும் நீ இதனை ஏற்றுக் கொள்வாயாக” என்றும் கூறுவார்கள். மேலும் இந்த ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போது ரஸூல் (ஸல்) அவர்கள் தக்பீர் சொன்னதில்லை அவ்வாறே அவ்வமயம் அத்தஹிய்யாத் ஓதவும், ஸலாம் கொடுக்கவும் இல்லை.

நபியவர்கள் பிரசங்கம் பண்ணும் போது​

1.           ரஸூல் (ஸல்) அவர்கள் பிரசங்கம் பண்ணும் போது அவர்களின் இரண்டு கண்களும் சிவந்து விடும். அவர்களின் குரல் உயர்ந்து விடும். அவர்களின் கோபம் கடினமாகி விடும். அப்பொழுது அவர்கள் ஒரு படையை எச்சரிக்கை செய்யும் ஒரு தளபதி போன்று காட்சியளிப்பார்கள். மேலும் “அவன்தான் நீங்கள் காலப் பொழுதையும், மாலைப் பொழுதையும் அடையும்படி செய்தான்” என்று கூறுவார்கள். மேலும் தங்களின் ஆல் காட்டி விரலையும், நடு விரலையும் பிணைத்து, இவ்விரண்டையும் போல் இறுதி நாள் மிகவும் நெறுக்கமாக இருக்கும் நிலையில் நான் அனுப்பப் பட்டுள்ளேன்” என்று கூறுவார்கள். மேலும்

أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهديِ هديُ محمد، وشر الأمور محدَثاتها، وكل بدعة ضلالة))؛

“ஹம்து, ஸலாவாத் என்பதைக் கூறிய பின்னர், செய்தியில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும், இன்னும் வழிகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் வழியாகும், மார்க்கக் கருமங்களில் தீயது அநாசாரமாகும். மேலும் அநாசாரங்கள் யாவும் வழி கேடாகும்” என்று கூறுவார்கள். மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் முதலில் அல்லாஹ்வைப் புகழாமல் எந்த வொரு பிரசங்கமும் நிகழ்த்த மாட்டார்கள்.

2.           மேலும் எவ்வாறு உரை நிகழ்த்த வேண்டு மென்பதைத் தன் தோழர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அவ்வமயம்

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله و أن محمدا عبده ورسوله.

“புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நாம் அவனைப் போற்றுகின்றோம். மேலும் நாம் அவனிடம் உதவி கோரி, அவனிடம் பாவ மன்னிப்பும் கோருகின்றோம். மேலும் நம் ஆத்மாவின் தீமை களையும், நமது கெட்ட செய்கைளையும் விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழியைக் கொடுக்கின்றானோ, அவனை யாரும் வழி கெடுக்க முடியாது. மேலும் அவன் யாரை தவறான வழியில் செல்ல விட்டு விடுகின்றானோ, அவனுக்கு யாராலும் நேர் வழியைக் கொடுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி எதுவும் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன்.” என்று கூறி விட்டு,  

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ حَقَّ تُقَاتِهِ  (آل عمران’102)

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ  (النساء, 01)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا ﴿٧٠الأحزاب)

ஆகிய திரு வசனங்களை ஓதுவார்கள்.

இஸ்திகாரா” செய்யும் முறையைத் தன் தோழர்களுக்கு ரஸூல் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.  “இஸ்திகாரா”  என்றால் தான் மேற் கொள்ள நினைக்கும் காரியம் நல்லதெனில் அது  அநுகூலமாக வேண்டும் என்றும், இல்லையெனில் அது  தடைப்பட வேண்டும் என்றும் அல்லாஹ்விடம்  பிரார்த்தனை செய்வ​தை​க் குறிக்கும். இது பற்றி சில நபித் தோழர்கள் குறிப்பிடும் போது,

-  كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ : إذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ

 “ரஸூல் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அல்குர்ஆன் ஸூரா ஒன்றைத் கற்றுத் தருவது போன்ற இஸ்திகாரா செய்யும் முறையைக் கற்றுத் தந்தார்கள். உங்களில் யாரேனும் ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தால், அவர் பர்ழுத் தொழுகையை தவிர இரண்டு ரக்ஆத்துக்கள் தொழுது விட்டு

3 ( اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ , وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ , وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ , وَتَعْلَمُ وَلا أَعْلَمُ , وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ , اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ , اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ ارْضِنِي بِهِ . وَيُسَمِّي حَاجَتَهُ ) وَفِي رواية  ثُمَّ رَضِّنِي بِهِ( رَوَاهُ الْبُخَارِيُّ)

“அல்லாஹ்வே! உன் அறிவின் பொருட்டால் நான் செய்ய நினைக்கும் கருமத்தில்  உன் தெரிவை வேண்டுகின்றேன்.  மேலும் உன் வல்லமையின் பொருட்டால் அதனைச் செய்யும் திராணியை நான் உன்னிடம் வேண்டுகின்றேன். மேலும் உன் மகத்தான அருட் கொடையையும் உன்னிடம் வேண்டுகின்றேன். ஏனெனில் நிச்சயமாக நீ திராணி உள்ளவனாகவும், நான் திராணி இல்லாதவனாகவும் இருக்கின்றேன். இன்னும் நீ அறிந்தவனாகவும் நான் அறியாதவனாவும் இருக்கின்றேன். மேலும் நீயோ மறைவான அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய். ஆகையால் அல்லாஹ்வே! இக் காரியம் (தன்னுடைய காரியம் என்னவென்பதைக் குறிப்பிடல் வேண்டும்.) ​எனக்கு என் மார்க்க விடயத்திலும், என் வாழ்வாதார விடயத்திலும், என் விவகாரத்தின் முடிவிலும் பயனுள்ளது என்று நீ கருதுவாயாகில், அதனைச் செய்யும் திராணியை நீ எனக்குத்  தந்து நீ அதனை எனக்கு அனுகூலமாக்கி அதில் பரக்கத்தையும் ஏற்படுத்தித்​ தந்தருள்வாயாக. மேலும் இக் கருமம் (தன்னுடைய காரியம் என்ன வென்பதைக் குறிப்பிடல் வேண்டும்.) எனக்கு என் மார்க்க விடயத்திலும், என் வாழ்வாதார விடயத்திலும், என் விகாரத்தின் முடிவிலும் தீமை பயக்கும் என்று நீ கருதுவாயாகில் அதனை விட்டும் என்னைத் தடுத்து, சிறந்த விடயம் எங்கிருந்த போதிலும் அதனைச் செய்யும் ஆற்றலை நீ எனக்குத் தந்திடுவாயாக. மேலும் அதனைக் கொண்டு திருப்தியடையும் மன நிலையையும் நீ எனக்குத் தந்திடுவாயாக.” என்று பிராத்தனை செய்யுமாறு கூறினார்கள், என்று கூறினர்.”

தூங்கும் போதும், கண் விழிக்கும் பேதும், கனவு கண்ட போதும்

1.  ரஸூல் (ஸல்) அவர்கள் நித்திரை கொள்ளும் போது, சில  வேளை விரிப்பிலும் மற்றும் தோல் விரிப்பிலும், இன்னும் சில வேளை பாயிலும், மற்றும் சில வேளை தரையிலும், கட்டிலிலும் தூங்குவார்கள். நபியவர்களின் விரிப்பு இலைகளால் நிரப்பப்பட்ட பதனிட்டத் தோலைக் கொண்டதாக இருந்தது. அன்னாரின் தலையணையும் அப்படியே அமைந்திருந்தது.

2.   ரஸுல் (ஸல்) அவர்கள் தேவைக்கதிகம் தூங்கமாட்டார்கள். மேலும் தங்களின் தேவைக்கும் குறைவாக தூங்காமல் இருக்கவும் மாட்டார்கள்.

3.   நபியவர்கள் இரவின் ஆரம்பப் பகுதியில் நித்திரை செய்து விட்டு, இரவின்  கடைசிப் பகுதியில் எழுந்திருப்பார்கள். சில வேளை முஸ்லிம் மக்களின் நலன் கருதி இரவின் முதற் பகுதியில் தூங்கி விடாமல் கண் விழித்திருப்பார்கள்.

4.   நபியவர்கள் இரவு காலத்தில் பிரயாணம் செய்யும் போது ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக இரவின் இறுதிப் பகுதியில் எங்கேனும் இறங்கினால் தங்களின் வலது பக்கமாகச் சாயந்து கொள்வார்கள். மேலும் அவ்வாறு ஸுபுஹுக்குச் சற்று முன் இறங்கினால் தங்களின் கால் சந்தை நிற்பாட்டி, தங்களின் மணிக்கட்டின் மீது தங்களின் தலையை வைத்துக் கொள்வார்கள்.

5.   ரஸுல் (ஸல்) அவர்கள் நித்திரை கொண்டால் அவர்கள் சுயமாக எழுந்திருக்கும் வரை, அவர்களை யாரும் எழுப்ப மாட்டார்கள். மேலும் நபியவர்களின் இரண்டு கண்களும் தூங்கிய போதிலும் அவர்களின் உள்ளம் தூங்குவது இல்லை.

6.   நபியவர்கள் நித்திரைக்காகத் தங்களின் படுக்கைக்குச் சென்றதும்,

بِاسْمِكَ اللهُمَّ أحْيا وَأمُوتُ

“அல்லாஹ்வே! நான் உயிர் வாழ்வதும், இறந்து போவதும் உன் பெயராலேயே.” என்று கூறுவார்கள். மேலும் நபியவர்கள், தங்ளின் உள்ளங் கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து  அதன் மீது ,

 , سورة الإخلاص     قل أعوذ برب الفلق, قل أعوذ برب الناس

எனும் ஸூராக்களை ஓதி  அதனை கொண்டு தங்களின் தேகத்தின் மீது இயலுமான இடமெல்லாம் தடவிக் கொள்வார்கள். முதலில் தங்களின் தலை மீது தடவுவார்கள், பின்னர் தங்களின் முகத்திலும்,  உடம்பின் முன் பக்கத்திலும் தடவுவார்கள். இவ்வாறு மூன்று தடவைகள் செய்வார்கள்.

7.      நபியவர்கள் வலது பக்கமாக சாய்ந்து கொண்டு நித்திரை செய்வார்கள். அவ்வமயம் தங்களின் கையை வலது கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொண்டு,

الّلهُمَّ قَنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعثُ عِبَادَكَ

“அல்லாஹ்வே! நீ உன் அடியார்களை எழுப்பும் நாளில், உன் வேதனையை விட்டும் என்னைக் காப்பற்றுவாயாக” என்று கூறுவார்கள்.​​ மேலும் தம் தோழர்கள் சிலரிடம் “,நீங்கள் உங்கள் படுக்கைக்குச் செல்லும் போது நீங்கள் தொழுவதற்காக வுழூ செய்து கொள்வது போன்று வுழூ செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களின் வலது பக்கமாகச் சாய்ந்து கொண்டு,

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إليْكَ ، وَوجَّهْتُ وَجْهي إلَيْكَ ، وفَوَّضْتُ أَمْرِي إلَيْكَ ، وَأَلجَأْتُ ظهْري إلَيْكَ ، رَغْبةً وَرهْبَةً إلَيْكَ ، لا مَلْجأ ولا مَنْجى مِنْكَ إلاَّ إلَيْكَ ، آمَنْتُ بِكتَابكَ الذي أَنْزلتَ ، وَنَبيِّكَ الذي أَرْسَلْتَ »  

“அல்லாஹ்வே! என் ஆத்மாவை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முகத்தை உன் பக்கம் திருப்பிக் கொண்டேன். என்னுடைய விவகாரத்தை உன்னடம் சாட்டி விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் ஒதுக்கிக் கொண்டேன். இது உன்னை அடைய வேண்டுமென்ற ஆர்வத்திலும், உன் மீதுள்ள அச்சத்தின் காரணமாகவும் தான். ஏனெனில் உன் பக்கத்திலன்றி நான் ஒதுங்கிக் கொள்ளவும், உன்னை விட்டும் தப்பித்துக் கொள்ளவும் எனக்கு எந்த வொரு இடமும் இல்லை. நானோ நீ இறக்கிய வேத்தின் மீதும், நீ அனுப்பிய உன் நபியின் மீதும் விசுவாசம் கொண்டுள்ளேன்.”  என்று கூறுங்கள். மேலும்  இந்த வாசகங்கள் உங்களின் பேச்சுக்களின்  இருதியாக இருக்கட்டும். மேலும் இந்நிலையில் அன்றைய இரவு நீங்கள் இறந்து போனால், நீங்கள் இயற்கையான இஸ்லாம் மார்க்கத்தின் இறந்து போவீர்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. ரஸுல் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்திருக்கும் போது,

اللهم رَبَّ جبريل وميكائيل وإسرافيل فَاطِرَ السَّموَاتِ وَالأرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أنتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيْمَا كَانُوا فِيْهِ يَخْتَلِفُونَ اللهم اهْدِنِي لِمَا اخْتَلَفَ فِيهِ مِنَ الْحَقِّ إنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ اللهم  

“ஜிப்ரீல், மீகாஈல், இஸ்ராபீல் என்போரின் இரட்சகனே! வானத்தையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், நிதர்சனமானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் முரண் பட்டிருக்கும் விடயத்தில் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குபவன் நீயே. அல்லாஹ்வே! நிச்சயமாக நீ யாருக்கு நேர் வழியைக் கொடுக்க நாடுகின்றாயோ, அவருக்கு நேர் வழியைக் கொடுப்பவன் நீயே, என்ற படியால். உன்மையான விடயத்தில், எதன் மீது    அவர்கள் முரண் பட்டுள்ளனரோ  அவ்விடயத்தில் எனக்கு சரியான வழியைக் காட்டியருள்வாயாக.” என்று கூறுவார்கள்.

9.      மேலும் ரஸுல் (ஸல்) அவ்கள்  தூக்கத்தை விட்டு கண் விழித்ததும்,

الحمد لله الذي أحيانا بعد ما   أماتنا و إليه النشور

“நம்மை இறக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் சொந்தம். மேலும் அவனிடமே நாம் எழுப்பப்படுவோம்.” என்று கூறுவார்கள். அதன் பின் மிஸ்வாக் செய்து கொள்வார்கள். சில வேளை ஆல “இமரான்” அத்தியாயத்தின் இறுதி பத்து வசனங்களையும் ஓதுவார்கள்.

10.    மேலும் சேவல் கூவும் சப்தத்தைக் கேட்கும் போது ரஸூல் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அவனை பெருமைப் படுத்தி அவனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.

11.    மேலும் “நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றவை, மற்ற கனவுகள் சைத்தானிடமிருந்து வருபவை.  ஆகையால் யாரேனும் தனக்குப் பிடிக்காத கனவொன்றைக் கண்டால், அவர் தன்னுடைய இடது பக்கத்தில் மூன்று தடவைகள் துப்பி விட்டு சைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும், அப்போது அது அவருக்கு தீமை விளைவிக்காது. எனவே அது பற்றி யாரிடமும் கூறவும் கூடாது மேலும் அவர் நல்ல கனவொன்றைக் காண்பாராகில், அவர் அதையிட்டு மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டும். அத்துடன் தனக்கு விருப்பமான ஒருவரிடமல்லாது வேறு எவரிமும் அதனைத் தெரியப் படுத்தக் கூடாது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் எவர் தனக்குப் பிடிக்காத கனவைக் காண்கின்றாரோ, அவர் தான் படுத்திருக்கும் பக்கத்தை விட்டும் விலகி மறு பக்கமாகத் திரும்பி ஸலவாத்து சொல்லிக் கொள்ள வேண்டும் என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்

 ஆடை அழங்கார விடயத்தில் நபிகளாரின் வழி காட்டல்.

1-ரஸூல் (ஸல்) அவர்கள் வாசனைப் பொருட்களை வெகுவாக விரும்பி வந்ததுடன், அதனை அதிகமாகப் பயன் படுத்தியும் வந்தார்கள். மேலும் அவர்கள் அதனை ஒரு போதும் தட்டிக் கழித்ததில்லை. மேலும் நபியவர்களுக்கு கஸ்தூரி  மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் வாசனைப் பொருளாகும்.

2-ரஸூல் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதை மிகவும் விரும்பினார்கள். எனவே அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போதும், நேன்பில்லாத போதும், தூக்கத்தை விட்டும் கண் விழிக்கும் போதும், வுழூஃ செய்யும் போதும், மற்றும் தொழுகைக்காக ஆயத்தமாகும் போதும், வீட்டில் பிரவேசிக்கும் போதும் என எல்லா சந்தர்ப்பத்திலும் மிஸ்வாக் செய்து கொள்வார்கள்.  

3-ரஸூல் (ஸல்) அவர்கள் கண்களில் சுர்மா போட்டுக் கொள்வார்கள். மேலும் “ நீங்கள் இட்டுக் கொள்ளும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்” என்ற சுர்மாவாகும்” என்று ரஸூல் அவர்கள் நவின்றார்கள். (இஸ்மித் என்பது சிவப்புச் சாயல் கொண்ட ஒரு வகை கருமையான சுர்மாவாகும். இது சுர்மா வகைகனில் எல்லாம் மிகவும் சிறந்தது.)

4-ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தலை முடியைச் சீவிக் கொள்வார்கள். சில வேளை ஆயிஷா (ரழி) அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களின் முடியை சீவி விடுவார்கள். மேலும் நபியவர்கள் சில வேளை தங்களின் தலை முடியை சி​ரைத்துக் கொள்வார்கள். சில வேளை அப்படி செய்ய மாட்டார்கள்.

5- ஹஜ்ஜு, உம்ரா கிரியைகளை நிறை வேற்றும் சந்தர்ப்பதிலல்லாது வேறு சந்தர்ப்பங்களி,ல் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தலை முடியை முற்றாகச் சிரைத்துக் கொண்டதில்லை மேலும் நபியவர்களின் முடி அன்னாரின் புஜத்திற்கு மேலாகவும்​, காதின் மடலுக்குக் கீழாகவும் இருந்தது.  மேலும் அவர்களின் முடி அவர்களின் காதின் மடலில் பட்டுக் கொண்டிருந்தது. ​ 

6-தலை முடியின் சில பாகத்தை சிரைத்தும் இன்னும் சில பாகத்தைச் சிரைக்காமலும் விட்டு வைப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்.

7- “நீங்கள் இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள், இன்னும் உங்கள் தாடியை வளர்த்து, மீசையை சிரையுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8-ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களுக்கு வாய்த்த ஆடைகளை அணிந்து கொள்வார்கள். எனவே சில வேளை கம்பளி ஆடையையும், இன்னும் சில வேளை பருத்தி ஆடையையும் மற்றும் கதர் ஆடையையும் அணிவார்கள். மேலும் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு கமிசை - ஜுப்பா மிகவும் விருப்பமான ஓர் ஆடையாக இருந்தது.

9-மேலும் நபியவர்கள் வரிகள் இடப்பட்ட யமன் தேசத்தின் ஆடையையும்,  அதிலும் பசுமை நிற ஆடையையும், ஜுப்பா, மற்றும்  மணிக்கட்டு ஒடுக்கமான ஆ​டை, நீட்ட கால் சட்டை, லுங்கி, சால்வை, பூட்ஸ், செருப்பு, தலைப்பாகை என்பவற்றையும் அணிந்தார்கள்.

10-மேலும் நபியவர்கள் தலைப்பாகை அணியும் போது அதன் சில பகுதியை தங்களின் தாடைக்குக் கீழ் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். சில வேளை அதன் முனையை தங்களின் பின் புறத்தில் தொங்க விடுவார்கள். சில வேளை தொங்க விடமாட்டார்கள்.

11-மேலும் நபியவர்கள் கருப்புத் தலைப்பாகையும், சிவப்பு லுங்கியும், சால்வையும் அணிந்தார்கள்.

12-மேலும் நபியவர்கள் வெள்ளி மோதிரம் அணிந்தார்கள். அவ்வமயம் மோதிரத்தில் கல் பதிக்குமிடத்தை உள்ளங் கை பக்கமாக வைத்துக் கொண்டார்கள்.

13-மேலும் நபியவர்கள் சட்டை, சால்வை தலைப்பாகை என்று  எந்த வொரு புத்தாடையை அணியும் போதும்  அதன் பெயரைக் குறிப்பிட்டு

: اللهم لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْ هَذَا ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وخَيْرِ مَا صُنِعَ لَهُ وأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ .

“அல்லாஹ்வே! புகழ் யாவும் உனக்கே சொந்தம். இதனை நீயே எனக்கு அணிவித்தாய். எனவே அதன் நலனையும், அதன் உருவாக்கத்தின் நலனையும் உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் அதன் தீமையையும், அதன் உருவாக்கத்தின் தீமையையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.” என்று கூறுவார்கள். 

14-ரஸூல் (ஸல்) அவர்கள் சட்டை அணியும் போது தங்களின் வலது பக்கத்தால் அதனை அணியத் தொடங்குவார்கள்.

15 ரஸுல் (ஸல்) அவர்கள் தங்களின் தலை முடியை வாரும் போதும், செருப்பு அணியும் போதும், அதனை சுத்தம் செய்யும் போதும், அதனை எடுக்கும் போதும் கொடுக்கும் போதும் வலது கையால் பரிமாறிக் கொள்வதையே மிகவும் விரும்பினார்கள்.

16-ரஸூல் 9ஸல்) அவர்கள் தங்களுக்குத் தும்மல் வரும்  போது தங்களின் வாய் மீது தங்களின் கையையோ, ஒரு துணியையோ வைத்து அதன் சப்தத்தைக் அடக்கிக் கொள்வார்கள்.

17-வீட்டு மூலையில் ஒளிந்து கொள்ளும் கன்னியரைப் பார்க்கிலும் ரஸூல் (ஸல்) அவர்கள் மிகவும் நாணமுள்ளவராக விளங்கினார்கள்.

18-சிரிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ரஸூல் (ஸல்) அவர்கள் சிரிப்பார்கள். நபியவர்களின் சிரிப்பு பெரும்பாலும் புன்முறுவலாகத் தான் இருந்தது. சில வேளை நபியவர்கள் சிரிக்கும் போது அவர்களின் கடைவாய்ப் பற்கள் வெளியில் தெரியும். மேலும் நபியவர்கள் சிரிக்கும் போது சத்தமிட்டு சிரிக்க மாட்டார்கள், அது போன்றுதான் அவர்கள் அழும் போதும் அதில் ஒப்பாரியும், அதிக சப்தமும் இருக்காது. எனினும் அவ்வமயம் அவர்களின் இரண்டு கண்ணிலிருந்தும் கண்ணீர் வடியும், அவ்வமயம் அவர்களின் இருதயத்தின் இரைச்சல் பிறர் கேட்கக்கூடியதாய் இருக்கும்.

ஸலாம் கூறலும் அனுமதி பெறுதலும் .

  1-ரஸூல் (ஸல்) அவர்கள் மக்களிடம் வரும் போதும், அவர்களிடமிருந்து விடை பெறும் போதும் அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள். மேலும் ஸலாத​தைப் பரப்பும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

  2-மேலும் சிறியோர் பெரியோருக்கும், நடந்து செல்வோர் உட்கார்ந்து இருப்போருக்கும், வாகனத்தில் செல்வோர் நடந்து செல்வோருக்கும், சிறு கூட்டத்தினர் பெரும் கூட்டத்தினருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும், என்றார்கள் ரஸுல் (ஸல்) அவர்கள்.

3-நபியவர்கள் எவரை சந்தித்தாலும் அவருக்கு அன்னவர்களே முதலில் ஸலாம் சொல்வார்கள். மேலும் அவர்கள் தொழுகை அல்லது சுய தேவை ஒன்றை நிறைறேறிக் கொள்ளுதல் போன்ற காரியம் எதிலும் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பமல்லாது வேறு எந்த சந்தர்ப்பதிலேனும் அவர்களுக்கு யாரேனும் ஸலாம் கூறிவிட்டாலோ, உடனே  நபியர்கள்  அவருக்கு அது போன்று அல்லது அதைவிடவும் சிறந்த முறையில் பதில் ஸலாம் சொல்வார்கள்.

4-மேலும் நபியவர்கள் முதலில் ஸலாம் சொல்லும் போது

السلام عليكم ورحمة الله

என்று சொல்வார்கள். மேலும் முதலில் ஸலாம் சொல்கின்றவர்

عليك السلام

என்று சொல்வதை அவர்கள் விரும்ப வில்லை. எனினும் ஸலாம் கூறியவருக்குப் பதில் கூறும் போது,

وعليك السلام

என்று  அதன் ஆரம்பத்தில்   و எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள்.

          5-மேலும் பெரும் கூட்டத்தினருக்கு நபியவர்கள் ஸலாம் கூறுகையில் தாங்கள் கூறும் ஸலாம் அவர்கள் யாவரையும் சென்றடையாது என்று நினைத்தால், அவர்களுக்கு மூன்று தடவைகள் ஸலாம் சொல்வார்கள்.

          6-மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் பிரவேசித்ததும், முதலில் இரண்டு ரகஅத் “தஹிய்யதுல் மஸ்ஜித்” தொழுகையைத் தொழுவார்கள். அதன் பின்னர் மக்களிடம் வந்து அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள்.

    7-மேலும் நபியவர்கள் தொழுகையில் இருக்கும் போது ஜாடை மூலம் பதில் ஸலாம் கூறியிருக்கின்றார்கள் இதுவல்லாது வேறு சந்தர்ப்பங்களில் அன்னார்  தங்களின் கை மூலமோ, சிரசு மூலமோ, விரல் மூலமோ ஜாடை செய்து ஸலாத்திற்குப் பதில் கூறியதில்லை..

          8-ரஸூல் (ஸல்) அவர்கள் சிறுவர்கள் இருக்கும் இடங்களையும், பெண்கள் இருக்கும் இடங்களையும் தாண்டிச் செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். அவ்வாறே  நபித்தோழர்கள் ஜும்ஆ தெழுகையைத் தொழுது விட்டுச் செல்லும் வழியில் வயோதிபர்களைக் கண்டால் அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள்.

          9-ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்தில் இல்லாத ஒருவருக்குத் தங்களுடைய ஸலாத்தைக் கூறி விடும்படி,யான பொறுப்பை  இன்னொருவரிடம்  ஒப்படைப்பார்கள். மேலும் யாரேனும் இன்னொருவருக்கு தன்னுடைய ஸலாத்தைக் கூறும் படி தங்களிடம் கூறினால்  அதன் பொறுப்பை நபியவர்கள்  ஏற்றுக் கொள்வார்கள். மேலும் யாரேனும் தங்களிடம் பிறருடைய ஸலாத்தைத் தாங்கி வந்தால், அதற்கு நபியவர்கள் பதில் கூறும் போது ஸலாம் கூறியவருக்கு மாத்திரமல்லாம் அதனைத் தாங்கி வந்தவருக்கும் சேர்த்துப் பதில் கூறுவார்கள்.

          10-ஒருவன் தன் சகோதரனைச் சந்திக்கும் போது அவருக்குத் தலை சாய்க்கலாமா? என்று நபிகளாரிடம் வினவப்பட்டது. அப்போது, நபியவர்கள் இல்லை என்றார்கள். அபொழுது அவரைத் கட்டித் தழுவி முத்தமிடலாமா? என்று மீண்டும் வினவப்பட்டது. அதற்கும் நபியவர்கள் இல்லை என்றார்கள். அப்பொழுது, அப்படியாயின் அவருடன் கைலாகு செய்து கொள்ளலாமா? என்று மறுபடியும் வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் ஆம் என்றார்கள்.

          11-நபியவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் வரும் போது, அவர்களிடம் குறை தேடி வருவது போன்று அவர்களிடம்  திடீர்  பிரவேசம் செய்ய மாட்டார்கள். மாறாக அவர்களிடம் செல்லும் போது அவர்களுக்கு முதலில் ஸலாம் சொல்வார்கள். மேலும் அவர்களிடம் பிரவேசித்ததுவும் அவர்களிடம் குசலம் விசாரிப்பார்கள்.

    12-நபியவர்கள் இரவு காலத்தில் தங்களின் வீட்டுக்குச் சென்றால், தூங்கிக் கொண்டிப்பவர்கள் எழுந்து விடாதபடி, விழித்திருப்பவர்களுக்கு மாத்திரம் கேட்கும் படியாக ஸலாம் சொல்வார்கள்.

          13-மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் யாரையேனும் காணச் சென்று அவரிடம் அனுமதி கோருங் கால், அவர்களிடம் நீங்கள் யார்? என்று வினவினால் அதற்கு நபியவர்கள் “நான்” என்று பதில் சொல்ல மாட்டார்கள், மாறாக “இன்னாரின் மகன் இன்னார்” என்று கூறுவார்கள். அல்லது தங்களின் புணைப் பெயரையோ, தங்களின் பட்டத்தையோ கூறுவார்கள்.

          14-மேலும் தங்களின் அனுமதி கோரலுக்குப் பதில் கிடைகாத போது, ரஸூல் (ஸல்) அவர்கள்  மூன்று தடவைகள்  அனுமதி கோருவார்கள். அதற்கும் பதில் கிடைக்காது போனால் அங்கிருந்து திரும்பிப் போய் விடுவார்கள்.

          15-மேலும் ஸலாம் கூறி அனுமதி கோர வேண்டு மென்று, அனுமதி கோரும் முறையை ரஸூல் (ஸல்) அவர்கள்  தன் தோழர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

          16-ரஸுல் (ஸல்) அவர்கள் யாருடையேனும் வீட்டுக்குச் சென்றால், அதன் கதவுக்கு நேரில் வந்து நின்று கொள்ள மாட்டார்கள். எனினும் அதன் வலது, அல்லது இடது பக்கத்தில் நின்று கொள்வார்கள். மேலும் “அனுமதி கோருதலின் அவசியம், பார்வையின் நிமித்தமே” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பேச்சு மற்றும் மௌனம் விடயத்தில்

  கவணமாக இருத்தல்

1.      அல்லாஹ்வின் சிருஷ்டிகளில் மிகவும் தெளிவாகவும் இனிமையாகவும், வேகமாகவும் பேசும் ஒரு மனிதராக  நபியவர்கள், விளங்கினார்கள்.

2.      தேவையிருந்தால் மாத்திரமே ரஸூல் (ஸல்) அவர்கள் பேசுவார்கள். ஆகையால் தேவையற்றப் பேச்சுக்களிலோ, தவறான பேச்சுக்களிலோ நபியவர்கள் ஈடுபட மாட்டார்கள். எனவே ரஸூல் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார்கள்.

3.      நபியவர்களின் பேச்சு சுறுக்கமாகவும், கருத்துச் செறிவுள்ளதாகவும் இருந்தது. மேலும் நபியவர்கள் பேசும் போது தங்களின் வார்த்தைகளைப் பிரித்துப் பிரித்துப் பேசுவார்கள். அதனால் அவர்களின் வாக்குகளை கணக்கிட்டுப் பார்க்க விரும்பும் ஒருவர் அதனைக் கணக்கிட முடியுமானதாக இருந்தது. மேலும் நபியவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அதனை பாடமிட்டுக் கொள்ள முடியாத படி அவர்களின் பேச்சு வேகம் கூடியதாக இருக்கவில்லை. மேலும் அவர்கள் தங்களின் பேச்சில் இடைஞ்சல்  ஏற்படக் கூடிய வாறு  பேச்சை இடை இடையே துண்டிக்க மாட்டார்கள்.

4.      நபியவர்கள் உரை நிகழ்த்தும் போது நல்ல அழகான வார்த்கைளைத் தெரிவு செய்து பேசுவார்கள். அவர்களின் பேச்சில் ஆபாசம் இருக்காது.

5.      தகுதியற்றவர்கள் விடயத்தில் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்துவதையும், கண்ணிய மானவர்களின் விடயத்தில், தகுதி குறைந்த சொற்களைப் பயன் படுத்துவதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. எனவே முனாபிக்குகளைப் பார்த்து பிரபு என்றும், அபூஜஹ்லை அவனுடைய பெயரான “அபுல் ஹகம்” அறிவின் தந்தை என்றும், அரசர்களை மன்னாதி மன்னன் என்றோ, “கலீபதுல்லாஹ்” அல்லாஹ்வின் பிரதிநிதி என்றோ கூறுவதையும் நபியவர்கள் தடை செய்தார்கள். ​

6.      மேலும் யாருக்கேனும் சைத்தானிடமிருந்து தீங்கு ஏதும் ஏற்பட்டால், சைத்தானை சபித்துக் கொண்டும், ஏசிக் கொண்டும், அவன் நாசமாகக் கடவது என்றும் சொல்லிக் கொண்டு இருக்காமல்  بسم الله அல்லாஹ்வின் பெயரால் உதவி தேடுகின்றேன் என்று கூறும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7.      நபியவர்கள் அழகிய பெயர்களை விரும்பினார்கள். மேலும் யாரேனும் தம்மிடம் ஒரு தூதரை அனுப்புமிடத்து அழகிய நாமமும், அழகிய முகமும் உடைய ஒருவரை அனுப்பி வைக்கும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். சொல்லை கவணித்து, அதற்கும், அதனைக் கொண்டு பெயர் சூட்டப்பட்டுள்ளவனுக்கு மிடையில் உள்ள தொடர்பை நபியவர்கள் எடுத்துக் காட்டுவார்கள்.   

8.      மேலும் உங்களின் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் - அல்லாஹ்வின் அடியான், அப்துர் ரஹ்மான்- அருளாளனின் அடியான் என்றும் மேலும் ஹாரிஸ்- விவசயி, ஹம்மாம்- காரிய சித்தன் எனும் பெயர்களும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவை என்றும், இன்னும் பெயர்களில் மோசமானவை ஹர்பு - யுத்தம்,  முர்ரா- உலோபி என்பவை என்றும் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.​ 

9.      பாவி என்ற பொருளுடைய  ‘ஆஸியா’ எனும் சொல்லை கொண்டு பெயர் சூடிய ஒரு பெண்ணை நபியவர்கள் பார்த்து நீ “ஜமீலா”-  அழகி என்று அவளின் பெயரை பெயர் மாற்றம் செய்தார்கள். மேலும் ”அஸ்ரம்”- காது கிழிந்தவன் எனும் பெயருடையவனின் பெயரை زُرْعَة “முளை பயிர்” என்று மாற்றினார்கள். அவ்வாறே நபியவர்கள் மதீனாவுக்கு விஜயம் செய்த சமயம் அதன் பெயர் “யஸ்ரிப்” “இழிவானது” என்றிருந்தது. அதனை நபியவர்கள் “தையிபா” அதாவது “சிறந்தது” என்று மாற்றினார்கள்.

10.    தன்னுடைய சொந்தப் பெயரல்லாமல், அதற்குப் பதிலாக இன்னொரு பெயரைத் தெரிவு செய்து அதன் முன்னால் “அபூ” அள்ளது உம்மு என்று சேர்த்துக் கொள்வது “குன்னிய்யத்” எனப்படும். நபியவர்கள் தங்களின் தோழர்களுக்கு இவ்வாறு புணைப் பெயர்கள் சூட்டினார்கள்.​ சில வேளை நபியவர்கள்  சிறார்களையும்  புணைப் பெயர் கொண்டு அழைத்தார்கள். அவ்வாறே தங்களின் மனைவியர் சிலருக்கும் இவ்வாறு புணைப் பெயர்களைச் சூட்டினார்கள்.

11.    மேலும் பிள்ளையுடையவர்களும், இல்லாத வர்களும்  தங்களுக்குக் குன்னியத்துக் களை வைத்துக் கொள்ள வேண்டு மென்பது நபி வழியாகும்.

12.    மேலும் “عِشَاء” ‘இரவு’ என்பதைத் தவிர்த்து ,”عَتَمَة” “கறுப்பாயி” என்று பெயர் வைத்துக் கொள்வதை நபியவர்கள் தடை செய்தார்கள். மேலும் كَرْمٌ  என்றால் விசுவாசியின் உள்ளம் என்பதாகும். ஆகையால் திராட்சைப் பழத்தை, عِنَبٌ  என்பதற்குப் பதிலாக كَرْمٌ என்று சொல்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

13.    மேலும் “இன்ன நட்சத்திரத்தின் பொருட்டால் நமக்கு மழை பொழிந்தது, என்றும், அல்லாஹ்வுடையவும், உங்களுடையவும் நாட்டத்தின் பிரகாரம் இது நடை பெற்றது, என்றும் கூறுவதை ரஸுல் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அவ்வாறே அல்லாஹ்வின் மீதல்லாது, வேறு எவர் மீதும் ஆணையிடவோ, அதிகமாக சத்தியம் பண்ணவோ கூடாதென்றும் நபியவர்கள் கூறினார்கள். மேலும் சத்தியம் பண்ணுகின்றவன் ஒருவனைக் குறிப்பிட்டு “இந்த யஹூதி” இவ்வாறு செய்தால்” என்று அல்லது இது போன்ற வாசகத்தைக் கூறி சத்தியம் செய்ய வேண்டாம் என்றும் நபியவர்கள் கூறினார்கள். அவ்வாறே ஒரு எஜமான் தன் அடிமையைப் பார்த்து “என் அடியானே! என் அடியாளே! என்றும், அவ்வாறே ஒருவன் என் ஆத்மா கெட்டு விட்டது, என்றும், சைத்தான் நாசமடையக் கடவது, என்றும், அல்லாஹ்வே! நீ விரும்பினால் என்னை மன்னித்து விடு, என்றும் கூறலாகாது” என ரஸூல​ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

14.    மேலும் காலத்தையும், காற்றையும், காய்ச்சலையும், மற்றும் சேவல் கூவும் சப்தத்தையும் நபியவர்கள் திட்ட வேண்டாம் என்றார்கள். அவ்வாறே ஜாஹிலிய்யாக் கால மக்களைப் போன்று குடும்பப் பெருமை பேசுவதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.

 நடந்து  செல்லும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும்

1.      ரஸூல் (ஸல்) நடந்து செல்லும் போது பள்ளம் இறங்குவது போன்று வேகமாக நடப்பார்கள். ஏனெனில் நபியவர்கள் வேகமாகவும், அழகாகவும், அமைதியாகவும் நடக்கும் ஒரு மனிதராக விளங்கினார்கள்.

2.      நபியவர்கள் சில வேளை செறுப்பு அணிந்து கொண்டும், இன்னும் சில வேளை வெற்றுக் காலுடனும் நடந்து செல்வார்கள்.

3.      மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை, கழுதை என்பவற்றில் சவாரி செய்வார்கள். மேலும் நபியவர்கள் சில வேளை சேணம் பூட்டிய - ஆசனம் பூட்டிய குதிரையிலும், சில வேளை ஆசனம் பூட்டாத குதிரையிலும் சவாரி செய்வார்கள். மேலும் தங்களின் வாகனத்தில் தங்களுக்கு முன் புறத்திலும் மற்றும் பின் புறத்திலும் ஆட்களை ஏற்றிச் செல்வார்கள்.

4.      ரஸூல் (ஸல்) அவர்கள் சில வேளை தரையிலும், பாயிலும், விரிப்பிலும் அமர்ந்திருப்பார்கள்.

5.      ரஸூல் (ஸல்) அவர்கள் தலயணையில் சாய்ந்து கொள்ளும் போது, சில வேளை தங்களின் இடது பக்கமாகவும், இன்னும் சில வேளை தங்களின் வலது பக்கமாகவும் சாய்ந்து கொள்வார்கள்.

6.      மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் சில வேளை சப்பணமிட்ட படியும், மல்லாந்த படியும், அமருவார்கள். சில வேளை தங்களின் ஒரு காலை மறு காலின் மேலால் வைத்துக் கொணடு உட்காருவார்கள். மேலும் நபியவர்கள் தங்களிடம் பலவீனம் எதனையும் காணும் போது, தேவையெனக் கண்டால் தங்களின் சில தோழர்களின் மீது சாய்ந்து கொண்டு செல்வார்கள்

7.      வெயிலின் சில பகுதியும், நிழலின் சில பகுதியும் கலந்து படர்ந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொள்வதை ரஸூல் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

8.      அல்லாஹ்வைப் பற்றி நினைவு படுத்தாத மஜ்லிஸுகளை​நபியவர்கள் விரும்ப வில்லை. எனவே “ஒரு அமர்வில் பங்கேற்ற எவரேனும் அதில் அல்லாஹ்வை நினைவு கூற வில்லையெனில், அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கவலை உண்டாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

9.      மேலும் “கூச்சல் அதிகமான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், அங்கிருந்து எழுந்திருக்க முன்னர்,

سُبْحَانَكَ اللَّهُمَّ وبَحَمْدكَ أشْهدُ أنْ لا إلهَ إلا أنْتَ أَسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ

“அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றேன். உன்னையன்றி வணக்கத்திற்குத் தகுதியான கடவுள் எதுவுமில்லை. ஆகையால் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோரி உன்னிடமே மீளுகின்றேன்” என்று கூறுவாராகில் அந்த மஜ்லிஸில் ஏற்பட்ட தவறுக்காக அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்” என்று ரஸூல் )ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

 அருள் கிட்டும் போது, துயரம் நீங்கும் போது  ஸஜதா சுக்ர்

ரஸுல் (ஸல்) அவர்கள் தங்களின் தேவையேதும் நிறைவேறும் போது, அதன் நிமித்தம்  அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாக ஸுஜூது செய்து அல்லாஹ்வைப் பெருமைப் படுத்துவார்கள்.

 துக்கம், துயரங்களுக்குப் பரிகாரம்

1-துக்கம் ஏற்படும் போது ரஸூல் (ஸல்) அவர்கள்

لا إِلَه إِلاَّ اللَّه العظِيمُ الحلِيمُ ، لا إِله إِلاَّ اللَّه رَبُّ العَرْشِ العظِيمِ ، لا إِلَهَ إِلاَّ اللَّه رَبُّ السمَواتِ السبع، وربُّ الأَرْض ، ورَبُّ العرشِ الكريمِ

“கண்ணியமும் ஞானமுமிக்க அல்லாஹ்வை யன்றி வணக்கத்திற்குத் தகுதியானது எதுவு மில்லை. கண்ணியம் பொருந்திய அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வையன்றி வணக்கத் திற்குத் தகுதியானது எதுவுமில்லை. ஏழு வாணங்கள், பூமி, மற்றும் கண்ணியம் பொருந்திய அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியானது எதுவுமில்லை.” என்று கூறுவார்கள்.

2.      கவலை தரும் சம்வம் ஏதேனும் நபியவர்களுக்கு ஏற்பட்டால், அவர்கள்

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

“நித்திய ஜீவனே!  என்றும் நிலைத்திருப்பவனே! உன் அருளால் பாதுகாவல் தேடுகின்றேன்.” என்று கூறுவார்கள். மேலும் கவலைகள் அதிகரிக்கும் போது,

اللهم رَحْمَتَكَ أَرْجُوْ فَلاَ تَكِلْنِيْ إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ لا إله إلا أنت. (رواه أبو داود والنسائ)

“அல்லாஹ்வே! உன் அருளை விரும்புகிறேன். ஆகையால் ஒரு நொடிப் பொழுதேனும் என் காரியங்களின் பொறுப்பை என் ஆத்மாவிடம் சாட்டி விடாதே. மேலும் எனது சகல கருமங்களையும் எனக்கு சீராக்கித் தந்திடுவாயாக. உன்னையன்றி  வணக்கத்திற்குத் தகுதியானது எதுவுமில்லை” என்று கூறும்படி சொன்னார்கள். மேலும் நபியவர்கள் தங்களுக்கு கவலை அதிகரிக்கும் போது தொ​ழுவார்கள்.

3.      மேலும் துக்கம் துயரத்திற்குள்ளான அடியான்,

اللهم إني عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ , ابنُ أَمَتِكَ, نَاصِيَتِيْ بِيَدِكَ , مَاضٍ فِيَّ حُكْمُكَ , عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ , أَسْأَلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ, أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أو عَلَّمْتَهُ أحداً مِنْ خَلْقِكَ , أنْ تَجْعَلَ الْقُرْآَنَ رَبِيْعَ قَلْبِيْ , وَنُوْرَ صَدْرِي , وَجَلاَءَ حُزْنِي , وَذَهَاَبَ هَمِّيْ وَغَمِّيْ ,

“அல்லாஹ்வே! நான் உனது அடிமை. உனது அடிமையின் மகன், உனது அடியானின் மகன். எனது நெற்றி முடி உன் கை வசமிருக்கின்றது. உன் கட்டளை என் மீது செயல்பட்ட வண்ணம் இருக்கின்றது. என் மீதான உனது தீர்ப்பு நீதியானதாகவும் இருக்கின்றது. ஆகையால் இறைவா! கண்ணியம் பொருந்திய அல்குர்ஆனை எனது உள்ளத்தின் வசந்தமாகவும், எனது மனதின் ஒளியாகவும், எனது துக்கம் துயரங்களின் நீக்கியதாகவும் ஆக்கியருளுமாறு நீயே உனக்கு வைத்துக் கொண்ட, அல்லது உனது வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது நீ உனது அடியான் ஒருவனுக்குக் கற்றுக் கொடுத்த எல்லா பெயர்களின் ​பொருட்டாலும் வேண்டுகின்​றேன்” என்று கூறுவானாகில், அல்லாஹ் அவனுடைய துக்கம் துயரங்களைப் போக்கி, அதற்குப் பதிலாக அவனுக்கு மன மகிழ்ச்சியைத் தராமல் இருக்கமாட்டான்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4.      மேலும் அச்சம் ஏற்படும் போது,

"أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه ، وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون "

“அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும், அவனின்  தண்டனையிலிருந்தும், அவனின் அடியார்களின் தீமைகளில் இருந்தும், சாத்தான்களின் தீமைகளில் இருந்தும் அவை என்னிடம் ஆஜராகுவதில் இருந்தும் அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்கியங்களின் பொருட்டால் பாதுகாவல் தேடுகின்றேன்” என்று கூறும் படி ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

5.      மேலும் ஏதேனும் துயரத்திற்கு இலக்கான ஒருவன்,​  ​

 إنا لله وإنا إليه راجعون ، اللهم أجرني في مصيبتي ، واخلف لي خيرا منها ،

    “நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பி விடுவோம். அல்லாஹ்வே! எனது துயரத்தை அகற்றி ,அதற்குப் பதிலாக அதை விடவும் சிறந்ததை எனக்குத் தந்திடுவாயா” என்று கூறுவானாகில், அல்லாஹ் அவனுடைய துயரத்தை அகற்றி அதைப் பார்க்கிலும் சிறந்த ஒன்றை​ அவனுக்கு வழங்குவான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 பிரயாணம் மேற் கொள்ளும் போது

1.      வியாழக்கிழமை முற்பகலில் பிரயாணம் செய்வதை ரஸூல் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

2.      மேலும் ஒருவர் இரவில் தனியாக நடந்து செல்வதையும், தனியாகப் பிரயாணம் செய்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

3.      மேலும் மூவர் ஒன்றாகப் பிரயாணம் செய்யும் போது, அவர்களில் ஒருவரைத் தங்களின் தலைவராக ஆக்கிக் கொள்ளுமாறு ரஸூல் (ஸல்) அவர்கள் பிரயாணிகளுக்கு கட்டளையிட்டார்கள்.

4.      ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறியதும்,

، الله أكبر என்று  மூன்று தடவைகள் சொல்வார்கள். பின்னர்

،{سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ  اللهم إنا نسألُكَ في سفرنا هذا البرَّ والتقوى، ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واطو عنا بعده، اللهم أنت الصاحب في السفر، والخليفة في الأهل،  اللهم اصحبنا في سفرنا واخلفنا في اهلنا   

   “இதனை நமக்கு வசப்படுத்தித் தந்த அல்லாஹ்வைத நாம் துதிக்கின்றோம். நாம் இதனைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் அல்ல. நிச்சயமாக நாம் நமது இரட்சகனிடம் செல்லக் கூடியவர்களே. அல்லாஹ்வே நாம் நமது இந்தப் பிரயாணத்தில் நன்மை பயக்கும் விடயங்களையும், இறை பக்தியையும், நீ பொருந்திக் கொள்ளும் காரியத்தையும் உன்னிடம் வேண்டுகின்றோம்.      மேலும் நமது இந்தப் பயணத்தை இலகுவாக்கி அதன் தூரத்தை சுறுக்கித் தந்தருள்வாயாக. அல்லாஹ்வே! நீதான் நமது பயணத் தோழன். நமது குடும்பத்தின் பிரதிநிதியும் நீயே. அல்லாஹ்வே! நீ நமது பயணத்தில் நமக்குத் தோழனாக இருந்து,  நமது குடும்பதில் நமக்குப் பிரதிநிதியாகவும் இருப்பாயாக.” என்று கூறுவார்கள். மேலும் பயணத்திலிருந்து திரும்பியதும்,

"آيبون، تائبون، عابدون، لربنا حامدون"

“நாம் திரும்பிவிட்டோம், நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பை வேண்டுகின்றோம், மேலும் நமது இரட்சகனை வணங்கி அவனைப் போற்றுகின்றோம்.” என்று கூறுவார்கள்.

5.      மேலும் நபியவர்கள் மேடுகளில் ஏறும் போது அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். மேலும் ஒருவர் நபியவர்களிடம் வந்து “நான் பயணம் செய்யப் போகிறேன்” என்றார். அப்பொழுது நபியவர்கள் “அல்லாஹ்வைப் பயந்து கொள்ளும் படியும், எல்லா உயரமான இடத்திலும் “அல்லாஹு அக்பர்” என்று கூறும் படியும்.  நான் உனக்கு வஸிய்யத் செய்கின்றேன்” என்று அவரிடம் கூறினார்கள்.

6.      மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் இருக்கும் போது காலைப் பொழுதை அடைந்தால்,

سَمَّعَ سَامِعٌ بِحَمْدِ اللّهَ وَحُسْنِ بَلاَئِهِ عَلَيْنَا رَبَّنَا صَاحِبْنَا وَأَفضِلْ عَلَيْنَا عَائِذًا بِاللهِ مِنَ النَّارِ

“அல்லாஹ்வின் புகழையும், அவன் நம்மீது சொரிந்துள்ள அருளையும் நாம் மேலோங்கச் செய்தோம். நமது இரட்சகனே! நீ நம்முடன் இருந்து நீ நம்மீது அருள் புரிவாயாக. மேலும் நம்மை நரகிலிருந்து உன்னிடம் பாதுகாப்பாயாக” என்று கூறுவார்கள்​.

7.      மேலும் தோழர்கள் பயணமாகின்ற போது அவர்களிடம் நபியவர்கள்.​​

 أَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخوَاتِيْمَ أعْماَلِكَ

“உங்களின் மார்க்கத்தையும், உங்ளின் பொறுப்புக்களையும், உங்களின் காரியங்களின் முடிவையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுகின்றேன்” என்று கூறி, அவர்களை வழி அனுப்பி வைப்பார்கள்.

8.      மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் உங்களில் எவரேனும் எங்கேனும் ஓரிடத்தில் இறங்கினால் அவர்,

أعوذ بكلمات الله التامات من شر ماخلق

“அல்லாஹ்வின் சிருஷ்டிகளின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் அவனின் பரிபூரணமான வாரத்தைகளின் பொருட்டால் பாதுகாவல் தேடுகின்றேன்” என்று கூறுவாராக” என நவின்றார்கள்.

9.      மேலும் “பிரயாணி தன்னுடைய பயணத் தேவையை நிறைவேற்றிக் கொண்டதும், உடனே தன் இல்லத்திற்கு திரும்பி விட வேண்டும்” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் பிரயாணிகளுக்குக் கட்டளையிட்டார்கள்.

10.    மேலும் தூது கொண்டு செல்வதற்குரிய குறுகிய தூரமான சுமார் பத்து மைல்கள் கொண்ட தொலைவுக்காயினும் மஹ்ரமின்றி பெண்கள் பிரயாணம் செய்யக் கூடாது என்றார்கள் நபியவர்கள். அவாறே எதிரிகள் அல்குர்ஆனை இழிவு படுத்தக் கூடும் என்ற அச்சம் காணப்படுமாயின் அவர்களின்​ பிரதேசங்களுக்குப் பயணம்  செய்யும்  போது அங்கு அல்குர்ஆனை எடுத்துச் செல்வதையும்  ​நபியவர்கள்  தடை செய்தார்கள்.

11.    இணை வைப்பவர்கள் மத்தியில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தடைகள் இருந்தால், அங்கிருந்து இடம் பெயர இயலுமான முஸ்லிம் பிரஜையை ​அங்கு குடியிருக்க வேண்டாம் என்று அவர்களை ரஸுல் (ஸல்) தடை செய்தார்கள். மேலும் முஷ்ரிக்கீன்கள் மத்தியில் வாழ்ந்து வரும் எந்த வொரு முஸ்லிமின் பொறுப்பையும் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, என்றும், மேலும் முஷரிகீன்களுடன் இருந்து அவர்களைப் போன்று வாழ்ந்து வரும் ஒருவனும் அவர்களைப் போன்ற ஒருவனே, என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

12.    நுபுவ்வத்தின் பின்னர் ரஸுல் (ஸல்) அவர்கள் நான்கு வகை பயணங்களை மேற் கொண்டார்கள்.  ஒன்று அவர்களின் ஹிஜ்ரத் பயணம். இரண்டாவது அவர்களின் ஜிஹாத் பயணம். இது அவர்கள் அதிகமாக மேற் கொண்ட ஒரு பயணமாகும். மூன்றாவது அவர்களின் உம்ராப் பயணம். நான்காவது அவர்களின் ஹஜ்ஜுப் பயணம்.

13.    நபியவர்கள் பிரயாணத்தில் இருக்கும் போது நான்கு ரக்ஆத்துக்களைச் சுறுக்கித் தொழுவார்கள். எனவே அவர்கள் பயணத்திற்காகப் புறப்படது முதல் அதிலிருந்து திரும்பி வரும் வரையில்  அதனை இரண்டு ரக்ஆத்துக்களாகத் தொழுவார்கள். மேலும் நபியவர்கள் பிரயாணத்தில் இருக்கும் போது  வித்ருத் தெழுகையும் ஸுபுஹுவின் ஸுன்னத்துத் தொழுகையும் நீங்களாக ஏனைய ஸுன்னத்துத் தொழுகைகளைத் தவிர்த்து பர்ழுத் தொழுகையுடன் தங்களின் தொழுகையை ​சுறுக்கிக் கொள்வார்கள்.

14.    மேலும் தொழுகையைக் கஸ்று செய்து கொள்வும், நோன்பை நோற்காமலிருக்கவும், பயணம் இத்தனை ​தூரத்தினைக் கொண்டிருக்க வேண்டு மென்று, அதன் தூரத்தினை தங்களின் உம்மத்தினர்ருக்கு நபியவர்கள் ​வரையறை செய்யவில்லை.

15.    ரஸூல் (ஸல்) அவர்கள் வாகனத்தில் சவாரி செய்து கொண்டிருக்கும் போது “ஜம்உ” செய்து தொழமாட்டார்கள். எனினும் பயணத்தில் களைப்பு ஏற்படும் போது வாகனத்திலிருந்து  இறங்கிய பின்னரே ஜம்உ செய்வார்கள், அவ்வாறே ​தொழுகையை நிறைவேற்றிய சற்று நேரத்தில் பயணம் செய்ய விருக்கும்​ சந்தர்ப்பத்திலும் தொழுகையை​ “ஜம்உ” செய்வார்கள். மேலும் சூரியன் உச்சியிலிருந்து விலக முன்னர் நபியவர்கள் பயணம் செய்வார்களாயின் ழுஹரை, அஸருடைய நேரம் வரையில் பிற்படுத்தி வைப்பார்கள். பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி அதனை அஸருடன் சேர்த்துத் தொழுவார்கள். மேலும் அன்னார் பயணத்தை மேற்கொள்ள முன்னர் சூரியன் உச்சியிருந்து விலகியிருந்நதாலோ, நபியவர்கள் முதலில் ழுஹர் தொழுகையைத் தொழுவார்கள். அதன்  பின்னரே தங்களின் பயணத்தை மேற் கொள்வார்கள். மேலும் நபியவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்தில் மஃரிபுத் தொழுகையை இஷாவுடன் சேர்த்துத் தொழுவதற்காக அதனை இஷாவுடைய நேரம் வரை பிற்படுத்தி வைப்பார்கள்.

16.    மேலும் நபியவர்கள் இரவிலும் சரி பகலிலும் சரி, அவர்கள் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது அது எந்தத் திசையில் சென்ற போதிலும் அதனைப் பொருட் படுத்தாது அதில் இருந்தவாறே நபிலான தொழுகை களைத் தொழுவார்கள். அவ்வமயம் ருகூவையும், ஸுஜூதையும் சாடை செய்து நிறைவேற்றுவார்கள். மேலும் ருகூவை விடவும் ஸுஜூதை தாழ்வாக ஆக்கிக் கொள்வார்கள்.​

17.    சில வேளை ரஸூல் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பிரயாணம் செய்த போது நோன்பு நோற்பதை தவிர்த்துக் கொண்டார்கள். எனினும் அப்போது நோன்பை விடுவதா, அல்லது வைத்துக் கொள்வதா? என்ற விடயத்தில் தாங்கள் விரும்பியதைத் தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பைத் தங்களின் தோழர்களுக்கு நபியவர்கள் வழங்கினார்கள்.

18.    நபியவர்கள் பியாணத்தின் போது அனேகமாக பூட்ஸ் அணிந்து கொள்வார்கள்.​

19.    நீண்ட நாட்களின் பின்னர் வீடு திரும்புவோர்,​ இரவு காலத்தில் வந்து தங்களின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டாம், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தடை உத்தரவு பிறப்பித்தார்கள்.

20.    மேலும் நாய் மற்றும் மணிகளை வைத்துள்ள பிரயாணக் கோஷ்டியினருக்கு, ​மலக்குகள் வழித் தோழர்களாக இருக்க மாட்டார்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

21.    மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்ஆத்துக்கள்  தொழுவார்கள், மேலும் தங்களின் குடும்பச் சிறார்களுக்கு எதையேனும் பரிசிலாகக் கொடுப்பார்கள்.

22.    பயணத்திலிருந்து திரும்பியவரை ரஸூல் (ஸல்) அவர்கள் “முஆனகா” செய்து வரவேற்பார்கள. அன்னவர் தங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரெனில் அவரை முத்தமிடுவார்கள்​.

 மருத்துவமும், நோயாயாளிகளைத் தரிசித்தலும்

    1- நபியவர்கள் தங்களுக்கு சுகவீனம் ஏற்பட்ட போது, அதற்காக அவர்கள் வைத்தியம் செய்து கொண்டார்கள். மேலும் தங்களின் குடும்பத்தினரும், தோழர்களும் நோய்வாய்ப் பட்ட போது அவர்களை வைத்தியம் செய்து கொள்ளுமாறு நபியவர்கள் பணித்தார்கள்.

          2. மேலும் “நோய்க்குரிய நிவாரணம் எதனையும்  ஏற்படுத்தாமல், எந்த வொரு நோயையும் அல்லாஹ் இறக்கவில்லை” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

     3. நோய்களுக்கு மூன்று வகையில் ரஸூல் (ஸல்) அவர்கள்  பரிகாரம் செய்தார்கள். ஒன்று பௌதிக முறையில் இரண்டாவது ஆத்மீக மருந்துகள் மூலம் மூன்றாவது இரண்டு முறைகளும் ஒன்று சேர்ந்த வைத்தியம் என்பன.

          4. மதுபானம் கொண்டும், அசுத்தமான பொருளைக் கொண்டும் வைத்தியம் செய்வதை ரஸூல் )ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

          5. ரஸூல் (ஸல்) அவர்கள், சுகவீனமுற்ற  தன் தோழர்களை நோய் விசாரித்து வந்தார்கள். மேலும் தங்களுக்குப் பணிவிடை செய்து வந்த ஒரு யூதப் பையன் சுகவீனமுற்ற போதும் இன்னும் இணை வைப்பாளராக இருந்த தங்களின் சிறிய தந்தை சுகவீனமுற்ற போதும் அவர்களிடம் நோய் விசாரிக்க ரஸூல் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவ்வமயம் அவர்களிடம் நபியவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை முன் வைத்த போது யூதப் பையன் இஸ்லாம் மார்கத்தை ஏற்றுக் கொண்டான், எனினும் நபியவர்களின் சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 

6. மேலும் நபியவர்கள் நோயாளியிடம் நெருங்கி வந்து, அவரின் தலைமாட்டில் அமர்ந்திருந்து கொள்வார்கள். பின்னர் அவரின் நிலைப் பற்றி வசாரிப்பார்கள்.​

7. மேலும் நோயாளியை,​ நோய் விசாரிப்பதற்கென்று  குறிப்பாக ஒரு நாளையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தையோ வேறு படுத்தி வைக்கும் வழக்கம் நபியவர்களின் வழிகாட்டலில் காணப்பட வில்லை. எனவே இ​ரவிலும், பகலிலும், மாத்திரமின்றி வேறு சந்தர்ப்பங்களிலும் நோயாளிகளிடம் சென்று நோய் விசாரிப்பதை ​ரஸூல் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

 பௌதிக மருந்துகளைக் கொண்டு வைத்தியம் செய்தல்

1- நரக கொதிப்பின் பரவுதலின் காரணமாகவே காய்ச்சல் அல்லது கடும் காய்ச்சல் உண்டாகின்றது, ஆகையால் தண்ணீரைக் கொண்டு அதனைக் குளிரச் செய்யுங்கள்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(காய்ச்சல் பல வகை. மேலும் அதன் சிகிச்சையும் ஆளுக்காள் வேறு பட்டவை என்ற படியால் காய்ச்சல் பீடித்திருபவர் மீது தண்ணீர் ஊற்றும் விடயத்தில் இதனைக் கருத்தில் கொள்வது அவசியம். இது மொழி பெயர்த்தோன் கருத்து)

2- உங்களில் எவருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் மூன்று இரவு ஸஹர் நேரத்தில் அவர் மீது  தண்ணீரைத் தெளித்து  விடுங்கள்” என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.​

3- மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், ஒரு தோல் பத்திரத்தில் தண்ணீர் எடுத்து வரச் செய்து அதனைத் தங்களின் தலை மீது கொட்டிக் குளிப்பார்கள்.  மேலும் ரஸூல் (ஸல்) அவர்களிடம் காயச்ச்ல் பற்றி பல தடவைகள் எடுத்துக் கூறப்பட்ட போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன் அதனை திட்டலானார். அப்போது நபியவர்கள் “அதனைத் திட்ட வேண்டாம். ஏனெனில் இரும்பிலிருக்கும் அழுக்கை நெருப்பு  எப்படி அகற்றி விடுகின்றதோ அது போன்று நிச்சயமாக இது பாவங்களை அழித்து விடும்” என்று கூறினார்கள். 

4- ஒருவர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து “எனது சகோதரனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது,” என்றார். இன்னொரு அறிவிப்பில் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார், என்று பதிவாகியுள்ளது. அப்போது நபியவர்கள் “அவருக்குத் தேனைப் புகட்டுங்கள்” என்றார்கள். மேலும் நபியவர்கள் தண்ணீரில் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றோடு அதனை​ குடிப்பார்கள்.  

5- மதீனாவில் சிலரின் வயிறு ஊதி அவர்கள் வயிற்றுக் கோளாறுக்கு இலக்காகி யிருந்தனர். அவர்களிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் “ஸதகாவாக கிடைத்திருக்கும் ஒட்டகம் வைத்திருக்கும் இடத்திற்கு நீங்கள் சென்று அதன் சிறு நீரையும், அதன் பாலையும் அருந்துங்கள்” என்றார்கள். அவர்களும் அப்படியே செய்தனர். அதனால் அவர்கள் குணமடைந்தனர்.

6- உஹுது யுத்தத்தின் போது ரஸூல் (ஸல்) அவர்கள் காயப்பட்டார்கள். அவ்வாமயம் பாதிமா (ரழி) அவர்கள் ஒரு பாய்த்  துண்டை எடுத்து வந்து அதனை எரித்து அதன் சாம்பலை நபியவர்களின் காயத்தில் வைத்துக் கட்டினார்கள். அது இரத்தம் வடிவதை தடுத்து விட்டது.

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் உபை இப்னு கஃபு (ரழி) அவர்களிடம் ஒரு வைத்தியரை அனுப்பினார்கள். அவர் உபையின் நரம்பொன்றை அறுத்து அதன் மீது நெருப்பால் சூடு போட்டர்கள். அதன் பின்னர் நபியவர்கள் “தேன் அருந்துதல், ஹிஜாமா செய்தல், நெருப்பைக் கொண்டு சூடு போடுதல் ஆகிய​ மூன்று விடயங்களிலும் நோய் நிவாரணி இருக்கின்றது. எனினும் எனது உம்மத்தினர் சூடு போட்டுக் கொள்வதை நான் தடை செய்கின்றேன்” என்று கூறினார்கள். சூடு போடும் போது அதி சீக்கிரத்தில் வலி ஏற்படுகின்ற படியால், ஏனைய வைத்திய முறைகள் பயனளிக்காத போது இறுதி கட்டத்தில் இதனை மேற் கொள்ள வேண​டு மென்பதையே இந்நபி மொழி சுட்டிக் காட்டுகின்றது.

7- ரஸூல் (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்து கொண்டார்கள். மேலும் தங்களுக்கு ஹிஜாமா செய்தவருக்கு அதன் கூலியையும் கொடுத்தார்கள். மேலும் நீங்கள் செய்து கொள்ளும் சிகிச்சையில் சிறந்தது, ஹிஜாமாவாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது அவர்களுக்குத் தலைவலி ஏற்பட்டது. அப்போது நபியவர்கள் அதற்காக ஹிஜாமா செய்து கொண்டார்கள். அவ்வாறே அவர்களின் கால் சந்தின் மீது வலி ஏற்பட்ட போதும் நபியவர்கள் ஹிஜாமா செய்தார்கள்.

மேலும் தங்களின் இரண்டு புயங்களுக்கும் மத்தியில் முதுகின் மீதும் தங்களின் கழுத்தின் பக்கத்திலிருக்கும் இரண்டு நரம்புகள் மீதும் நபியவர்கள் ஹிஜாமா செய்து கொள்ளும் போது, முதுகுப் பகுதிக்காக்  ஒரு தடவையும், கழுத்தின் நரம்புகளுக்காக  இரண்டு தடவைகளும் என மூன்று விடுத்தம் ஹிஜாமா செய்து கொள்வார்கள். மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் நஞ்சூட்டிய ஆட்டிரைச்சியை சாப்பிட்ட போது தங்களின் இரண்டு புயங்களுக்கும் மத்தியில் முதுகின் மீது மூன்று விடுத்தம் ஹிஜாமா செய்து கொண்டார்கள். மேலும் ஹிஜாமா செய்து கொள்ளும்படி தங்களின் தோழர்களை ரஸுல் (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.     ​

8- எவரேனும்  தன்னுடைய தலையில் வலி ஏற்பட்டுள்ளது என்று ரஸுல் (ஸல்) அவர்களிடம் முறையிட்டால், நபியவர்கள் அவரிடம் “நீங்கள் ஹிஜாமா செய்து கொள்ளுங்கள்” என்று கூறுவார்கள். அவ்வாறே தன்னுடைய இரண்டு காலிலும் வலி ஏற்பட்டுள்ளது, என்று எவரேனும் முறையிட்டால், அவரிடம் நபியவர்கள் “நீங்கள் மருதாணி போட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்கள்.

9- ரஸுல் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, அல்லது முள் ஒன்று தைத்து விட்டாலோ அவர்கள் அதன் மீது மருதாணியை வைத்துக் கொள்வார்கள்.” என்று ராபிஃ (ரழி) அவர்களின் தாயாரும் ரஸூல் அவர்களின் சேவகியுமாகிய ஸல்மா (ரழி) அவர்கள் கூறினார்கள், என்று திர்மிதியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10.​ கால் சந்திலிருந்து துவங்கி அதன் பின் பக்கமாக தொடை வரை இறங்கி வரும் வலியை عِرْقُ النِّساَ  என்பர். இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது ரஸூல் (ஸல்) அவர்கள், “عِرْقُ النِّسا” வின் மருந்து, ​தினமும் வெறும் வயிற்றுடன் ஆட்டின் பின் கால் சந்தின் ஸூப்பிலிருந்து  சிலதை பருகுவதாகும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

11. வயிறு காய்ந்து மலச்சிக்கல் ஏற்படும் போது, அதற்குரிய பேதி மருந்து பற்றி ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது,

“மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்குமான நிவாரணம்  ‘الَّسنا’ என்ற இலையிலும்,    السَّنُّوت என்பதிலும் இருக்கின்றன. ஆகையால் இவ்விரண்டையும் நீங்கள் பாவியுங்கள்.  என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (  மேலும் السِّنَا என்பது ஒரு வகை இலை இது பேதி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது, இதனை ஆங்கிலத்தில் senna leaf என்றும் தமிழில் நிலாவிரை என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் السَّنُّوت என்றால் தேன் என்றும், சீரகம் என்றும் வேறுபட்ட இரண்டு கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.)

12. மேலும் ​“நீங்கள் இட்டுக் கொள்ளும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்” என்ற (சிவப்புச் சாயல்) சுர்மாவாகும் இது பார்வையைத் தெளிவாக்கும், முடியை வளரச் செய்யும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

13. மேலும் எவர் காலையில் எழுந்ததும் ஏழு அஜ்வா ஈத்தம் பழங்களைச் சாப்பிடுகின்றாரோ, அன்றைய நாளில் அவருக்கு நஞ்சும், சூனியமும் தீங்கு விளைவிக்காது” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

14.மேலும் “நீங்கள் உங்களின் நோயாளிகளை உண்ணும்படியும் அருந்தும்படியும்  வற்புருத்தாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ் உணவும் பானமும் வழங்குகின்றான்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

15. ஸுஹைப் (ரழி) அவர்களுக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டிருந்த போது அவரை ஈத்தம் பழம் சாப்பிட வேண்டாமென நபியவர்கள் தடுத்தார்கள். எனினும் அவர் சில பேரீத்தம் பழங்களை சாப்பிடுவதற்கு  நபியவர்கள் அனுமதியளித்தார்கள். மேலும் அலி (ரழி) அவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்ட போது “றுதப்” எனும் செங்காய் ஈத்தம் பழம் சாப்பிட வேண்டாமென அன்னவரை ​ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

16. மேலும் “உங்களின் யாருடையேனும் பாத்திரத்தில் ஈ விழுந்தால் அதனை அதனுள் அமிழ்த்தி விடுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும், மறு இறக்கையில் நிவாரணமும் இருக்கின்றன” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

17. தல்பீனா” வானது நோயாளியின் மனக் கவலையைப் போக்கி அவனின் உள்ளத்தில் ஆறுதலைக் கொண்டு வரும்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “தல்பீனா” என்பது தண்ணீரில் கோதுமை கப்பி கலந்து தயாரித்த ஒரு வகை உணவைக் குறிக்கும்.

18. மேலும் “​கருஞ்சீரகத்தை பாவித்து வாருங்கள். ஏனெனில் மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் நிச்சயமாக இதில் நிவாரணம் உண்டு” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

19. “நீங்கள் சிங்கத்தை விட்டும் விரண்டு ஓடுவது போன்று குஷ்ட்ட ரோகியை விட்டும் விரண்டு ஓடுங்கள்” என்றும், நோயாளிகளுக்கு தொண்டு செய்து கொண்டிருக்கும் சேவகர்கள் சுக தேகிகளிடம் வர வேண்டாம்” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவர்களிடம் நோய்க் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற படியால், அவை மற்றவர்களிடம் பரவக் கூடும். எனவே ஏனையவர்கள் அவர்களை விட்டும் விலகி இருப்பதே சாலச் சிறந்தது என்பதையே இந்நபி மொழி தெளிவு படுத்துகின்றது.)

20. பனூ ஸகீப் கூட்டத்தினரின் தூதக் குழுவில் ஒரு குஷ்ட்ட ரோகியும் இருந்தார். அவரிடம் நபியவர்கள் “நாங்கள் உங்களிடம் சத்தியப் பிரமாணம் வாங்கி விட்டோம், ஆகையால் நீங்கள் திரும்பி விடுங்கள்” என்று சொல்லியனுப்பினார்கள்.

ஆத்மீக மருந்து மூலம் சிகிச்சை அளித்தல்

1. ரஸூல் (ஸல்) அவர்கள் ஜின்களிடமிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும் பாதுகாவல் தேடினார்கள். மேலும் கண் திருஷ்டிக்காக அல்குர்ஆன் வசனங்கள், துஆக்கள் என்பதைக் கொண்டு ஓதிப் பார்க்கும்படி கட்டளையிட்டார்கள். மேலும் “கண் திருஷ்டி நிஜமானது. விதியை மிகைத்துவிடும் படியான கருமம் ஏதுமிருந்தால் அதனையும் கண் திருஷ்டி மிகைத்து விடும். இன்னும் இதிலிருந்து நிவாரணம் பெற உங்களில் எவருக்கேனும் குளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர் நீராடிக் கொள்ளட்டும்” என்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2. ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு சிறுமியின் முகத்தில் ஜின் திருஷ்டி ஏற்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது  “அவளுக்கு திரஷ்டி ஏற்பட்டிருக்கின்றது, ஆகையால் அவளுக்கு ஓதிப் பாருங்கள்” என்று கூறினார்கள்.

3. ரஸூல் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், பாம்பு கொட்டிய ஒருவருக்கு ஸூரா அல்பாதிஹாவை ஓதிய போது அவர் குணமடைந்தார். எனவே அவரிடம் நபியவர்கள், “இதுவொரு ஓதல் என்று உங்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டார்கள்.

4-ரஸூல் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து “ இன்றிரவு என்னை ஒரு தேள் கொட்டி விட்டது” என்றார் அதற்கு நபியவர்கள்,

  اعوذ بكلمات الله التامات من شر ما خلق

என்ற வாசகத்தை நீங்கள் மாலைப் பொழுதில் ஓதியிருந்தால் அது உங்களுக்குக் கேடு விளைவித்திருக்காது” என்று கூறினார்கள்.

 பயன் தரும் இலகுவான சில பரிகாரங்கள்

1. யாரேனும் ஏதேனும் காயத்தின் மூலமோ அல்லது வெட்டுக் காயத்தின் மூலமோ அவஸ்தைக்குள்ளானால் நபியவர்கள் தங்களின் சுட்டு விரலை பூமியின் வைத்து விட்டு, பின்னர் அதனை உயர்த்தி,

بسم الله تُرْبَةُ أرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا يُشْفَى سَقِيْمُنَا بِإذْنِ رَبِّنَا

“அல்லாஹ்வின் பெயரால், நமது எச்சிலின் உதவியால், அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் நமது நிலத்து மண்ணின் மூலம் நமது நோயாளிக்கு குணம் கிட்டட்டும்” என்று கூறுவார்கள்.

நபியவர்களிடம் சில தோழர்கள், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி யொன்றைப் பற்றி முறையிட்டனர். அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் நீங்கள் உங்களின் கையை உங்களின் உடம்பில் வலியுள்ள இடத்தில் வைத்து

أعُوْذُ بِعِزَّةِ اللهِ وَ قَدْرَتِهِ مِنْ شَرِّ ما أجِدُ وَ اُحَاذِرُ

“அல்லாஹ்வின் கண்ணியத்தினதும், அவனின் வல்லமையினதும் உதவியைக் கொண்டு எனக்கு ஏற்பட்டுள்ள தீமையிலிருந்து பாதுகாவல் தேடுகின்றேன்” என்று ஏழு தடவை சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் குடும்ப அங்கத்தினர் சிலருக்காக அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். அவ்வமயம் அவர்கள்,

اللهم أذْهِبِ الْبَأاْسَ وَاشْفِ أنْتَ الشَّافيْ لأ شِفَاءَ اِلاَّ شِفاءُكَ شِفاءًا لاَ يُغادِرُ سَقَمًا 

“அல்லாஹ்வே! நீயே நிவாரணம் அளிப்பவன். நோய் ஒட்டிக் கொண்டு இருக்காதபடி முற்றாக நிவாரணம் அளிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு எவரும் இல்லை. ஆகையால் நீ இந்தப்  பீடையை அப்புறப் படுத்தி சுகத்தையும் தந்திடுவாயாக” ​என்று கூறுவார்கள்.

மேலும் ரஸூல் (ஸல்) அவர்கள் நோயாளியைத் தரிசிக்கச் செல்லுமிடத்து,

لا بَأْسَ طَهُوْرٌ اِنْ شاءَ الله

“கவலைப் படாதீர்கள் அல்லாஹ் நாடினால் இது உங்களைத் தூம்மைப் படுத்தி வைக்கும்” என்று கூறுவார்கள்”

​​ ​(அல்லாஹ்வின் உதவியால் முற்றுப் பெற்றது)