மலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.
வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.
லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்
(அவ்லியாக்கள்) இறைநேசர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உண்டா? வானங்களிலும், பூமியிலும் விரும்பிய வாறு அவர்களுக்கு காரியமாற்றலாமா? மண்ணரைகளில் வாழும் அவர்கள், உலகில் இருப்பவர்களுக்காக மன்றாடலாமா?
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.
அல்லாஹ் மனு, ஜின், மற்றும் உலக படைப்பை தனக்கு கட்டுப்பட்டு வழிப்பட வேண்டும் என்பதற்காக படைத் தான். இபாதத்களையும் அதனை மேற் கொள்ளும் வழி முறைகளையும் தன்னுடைய தூதர்கள் மூலம் காட்டிக் கொடுத்தான்.
1.படைப்புகளை அல்லாஹ்வுக்கு சரிசமமாக ஆக்குவது அல்லது எண்ணுவது, அதனடிப்படையில் செயற்படுவது, 2.அல்லாஹ்வுக்குரிய பண்புகள் அதிகாரங்கள் ஏனையவர் களுக்கும் உண்டு என்று நம்புவது