சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.
அல்லாஹ் மனு, ஜின், மற்றும் உலக படைப்பை தனக்கு கட்டுப்பட்டு வழிப்பட வேண்டும் என்பதற்காக படைத் தான். இபாதத்களையும் அதனை மேற் கொள்ளும் வழி முறைகளையும் தன்னுடைய தூதர்கள் மூலம் காட்டிக் கொடுத்தான்.
1.படைப்புகளை அல்லாஹ்வுக்கு சரிசமமாக ஆக்குவது அல்லது எண்ணுவது, அதனடிப்படையில் செயற்படுவது, 2.அல்லாஹ்வுக்குரிய பண்புகள் அதிகாரங்கள் ஏனையவர் களுக்கும் உண்டு என்று நம்புவது
உயிருடன் இருக்கும் இறையச்சமுள்ள நன்னடத்தையுள்ள நல்லடியார் ஒருவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோருவது இஸ்லாத்தில் தடுக்கப்பட வில்லை.
வஹி இரண்டு வகைப்படும் முதலாவது வஹி, வஹியுன் மத்லூஉன். அது ஓதிக் காண்பிக்கப்படும் வஹி யாகும். அது அல்குர்ஆனாகும். இரண்டாவது வஹி, வஹியுன் மர்வீயுன் என்பதாகும் அதுவே சுன்னா வாகும்
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மனைவி நடத்தை கெட்டவள் அல்லது கற்பிழந்தவள் என்று கணவன் குற்றம் சுமத்தும் போது அக்குற்றத்தை நிரூபிக்கக் கூடிய சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என கட்டளையிடுகிறது.