(1) அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.
(2) அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.
(3) அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
(4) இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
(5) அவளுடைய கழுத்தில் பேரீச்சை மர நாரின் கயிறுதான் இருக்கும்.