லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்
செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..
நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,
துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.
அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன; 1- 1. “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம். 2- 2. நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.
(அல்லாஹ்வின்) நேசம் மகத்துவம் மிக்க ஒரு அந்தஸ்தாகும். அதை அடைவதற்காகவே ஸாலிஹான முன்னோர்கள் போட்டிபோட்டுக் கொண்டார்கள். நற்செயல்கள் புரிந்தார்கள், அனைத்தையும் துறந்து பாடுபட்டார்கள், (உயிர்) தியாகம் செய்தார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.
ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.
நபிமார்கள் மூலம் அல்லாஹ் அருளிய செய்தி களே வேதங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன
எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் படி அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை –உதவியை – தேட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான். நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.
இஸலாத்தில் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைப்பதில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றிய விளக்கம். தவ்ஹீத் உலூஹிய்யா, தவ்ஹீத் ரூபூபிய்யா, அஸ்மா வ ஸிபா என்பவற்றின் முக்கியத்துவம். வணக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை முழுமையாக பின்பற்றாதவர்கள் செய்யக்கூடிய பிழைகள் காரணமாக, அவர்களது இறை விசுவாசமே உறுதியற்ற நிலைக்கு ஆளாக நேரும் ஆபத்து பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளன.
ஒரு முஸ்லிமுக்கு உளச்சுத்தமும் உடல சுத்தமும் மிகவும் அவசியம். அழுக்குகளின் வகைகள், அவற்றை நீக்க தேவையான நீர் சம்பந்தப்பட்ட சட்டங்கள், நீர் அழுக்காகும் சந்தர்ப்பங்கள் என்பன பற்றிய விளக்கம் இக்கட்டுரையில் அடங்கியுள்ளன.
புதைகுழி தான் மறு உலகின் தங்குமிடங்களில் முதலாவது தங்குமிடம். எனவே அது அவனின் நரகப் படுகுழியாகவோ, சுவர்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகவோதான் இருக்கும். மலக்குகள் வருவார்கள். உயிர் கைப்பற்றப்படவுள்ள மனிதன் நல்லவராக இருப்பின் மலக்குகள் அவனின் ஆத்மாவிடம், நல்ல உடலில் இருந்த நல்லாத்மாவே! வெளியேறுவாயாக. புகழுடன் வெளியேறுவாயாக. நீ மகிழ்ச்சியாக இரு. உணக்கு மகிழ்ச்சியும், நல் வாழ்வும் உண்டு. கோபம் எதுவுமின்றி பூரண திருப்தியுடன் எத்தனையோ பேர் உன் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், என்று கூறுவர். மரணத்தின் பின் மறு வாழ்வு உண்டென்பதிலும், சுவர்க்கமும் நரகமும் உண்மை என்பதிலும் யாருக்குப் பூரண நம்பிக்கை இருக்கின்றதோ, அவரின் செயற்பாடுகள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டதாகவும், நீதிக்கும் நியாயத்துக்கும் உற்பட்டதாகவும் இருக்கும். ஷைத்தானுக்கும், மற்றும் அநீதிக்கும், அநியாயத்திற்கும் அவர் துணை போக மாட்டார்.