(1) 1. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
(2) 2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
(3) 3. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
(4) 4. அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
(5) 5. கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
(6) 6. எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
(7) 7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
(8) 8. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
(9) 9. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
(10) 10. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
(11) 11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.