94 - ஸூரா அஷ்ஷரஹ் ()

|

(1) 1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?

(2) 2. உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.

(3) 3. அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.

(4) 4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.

(5) 5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.

(6) 6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.

(7) 7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.

(8) 8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!