95 - ஸூரா அத்தீன் ()

|

(1) 1. அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!

(2) 2. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!

(3) 3. அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,

(4) 4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.

(5) 5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.

(6) 6. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.

(7) 7. கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?

(8) 8. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?