(1) பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
(2) புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
(3) (அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
(4) கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
(5) (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(6) (அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
(7) (அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.