101 - ஸூரா அல்காரிஆ ()

|

(2) எது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது?

(3) (நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(4) அந்நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று இருப்பார்கள்.

(5) இன்னும், (அந்நாளில்) மிகவும் மென்மையாக்கப்பட்ட (காற்றில்) பரப்பப்பட்ட கம்பளி ரோமத்தைப் போல் மலைகள் ஆகிவிடும்.

(6) ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

(7) அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

(8) ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

(9) அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.

(10) (நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(11) (அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும்.

(1) (உள்ளங்களை) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.