(அவ்லியாக்கள்) இறைநேசர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உண்டா? வானங்களிலும், பூமியிலும் விரும்பிய வாறு அவர்களுக்கு காரியமாற்றலாமா? மண்ணரைகளில் வாழும் அவர்கள், உலகில் இருப்பவர்களுக்காக மன்றாடலாமா?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.