ரமழானுக்குத் தயாராவதில் மக்களின் வகைகள், அதனை அடைவதற்காகப் பிரார்த்தித்தல், சஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்தல், சஃபான் 15ன் சிறப்புகள், அது பற்றி வந்திருக்கும் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள், பராஅத் இரவில் நடைபெறம் அனாச்சாரங்கள்.
உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்” எ