அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத் தடை விதித்து விட்டான். எனவே, “முத்ஆ" திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டு விடட்டும். அவளுக்கு நீங்கள் (மஹர்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 1406)